| GO No. and Date. | Abstract |
| G.O.(Ms.) No. 296 Dated: 16.9.2008 | Cadaver Transplant Program – Designation of Dr.J.Amalorpavanathan, Reader in Vascular Surgery, Madras Medical College and Vascular Surgeon, Government General Hospital, Chennai as Convenor, Cadaver Transplant Program, Tamil Nadu – Orders – Issued. |
| G.O.(Ms.) No. 289 Dated: 5.9.2008 | Health and Family Welfare Department - Non-Transplant centers - Criteria for non-transplant centers to retrieve organs from brain dead persons - Detailed instructions - Orders issued |
| G.O.(Ms.) No. 288 Dated: 5.9.2008 | Health and Family Welfare Department - Organ Transplant - Responsibilities of Transplant centers in hospitals - Detailed instructions - Orders issued. |
| G.O.(Ms.) No. 287 Dated: 5.9.2008 | Health & Family Welfare Department – Organ Transplant – Cadaver Organ Transplant Program - Procedure to be adopted for cadaver transplant by the Government and Private Hospitals approved for organ transplant by the Appropriate Authority – orders issued. |
| G.O.(Ms.) No. 175 Dated: 6.6.2008 | Health & Family Welfare Department - Organ Transplant – Authorization Committee Procedures – Additional responsibilities – Detailed instructions – orders issued. |
| G.O.(Ms.) No. 137 Dated: 5.5.2008 | Tamil Nadu Health Systems Project – Establishment of Emergency Management Services for various types of emergency cases, accident victims, etc., by Emergency Management Research Institute, Hyderabad – Orders issued. |
| G.O.(Ms.) No. 90 Dated: 17.3.2008 | Grievance Redressal System in the State Introduction of grievances redressal system in Government Hospitals - Utilizing the existing Control Room with 4 digit toll free number 1056 in the Districts - orders - Issued. |
| G.O.(Ms.) No. 75 Dated: 3.3.2008 | Brain death – Declaration of brain death made mandatory in Government Medical College Hospitals in Chennai – Procedure for declaration of brain death – orders issued. |
..... Patients, Problems, Routine Practices, Stories, Gossips, Camps, Campaigns, Outbreaks, Innovations and what not !!! ..... பிணிகளும், பிரச்சனைகளும், பழக்கவழக்கங்களும், கதைகளும், முகாம்களும், திட்டங்களும், கொள்ளைநோய்களும், குடும்ப கட்டுப்பாடும், பல்ஸ் போலியோவும், வரும் முன் காப்போம் திட்டமும்
Thursday, October 30, 2008
உடல் தானம். உடல் உறுப்புகள் தானம்
Wednesday, October 29, 2008
Tuesday, October 28, 2008
அரசு ஆணைகள்
சுட்டி கிராம சுகாதார நீர் மற்றும் சுகாதார குழு
நன்றி; திரு. சே.வேங்கடசுப்ரமணியம். கண்காணிப்பாளர்
Monday, October 27, 2008
நன்றி மங்கை
Sunday, October 26, 2008
தனியார் மருத்துவ முகாம்கள்
தமிழ்நாட்டில் தனியார் மருத்துவ நிலையங்கள் மற்றும் தன்னார்வத் தொண்டு நிறுவ னங்கள் மாவட்டத்தில் மருத் துவ முகாம்கள், தடுப்பூசி முகாம்கள் போன்ற முகாம் களை நடத்துவதற்கு முன் மாவட்ட ஆட்சித் தலைவருக்கு முறையாக விண்ணப்பித்து அவரிடமிருந்து அனுமதி பெற்ற பின்னர்தான் முகாம்கள் நடத்தப்பட வேண்டும் என் றும் மாவட்ட ஆட்சியர் அளிக்கும் அனுமதியின் நகல் மாவட்ட சுகாதாரப் பணிகள் இணை இயக்குநர் மற்ற துணை இயக்குநருக்கு அனுப்பப்பட வேண்டும் என்றும் அரசாணை (நிலை) எண். 164 மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத் துறை, நாள் 31-8-2006 இல் ஆணைகள் வெளியிடப்பட் டுள்ளன.
தனியார் மருத்துவ நிலை யங்கள், தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் ஒரு மாவட்டத் திற்கு மேல் பல மாவட்டங் களில் இத்தகைய முகாம்களை நடத்த முடிவு செய்தால், அவர்கள் பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு இயக்குநருக்கு விண்ணப்பம் செய்து அவரிடமிருந்து முன் அனுமதி பெற்று முகாம்களை நடத்த வேண்டும் என்றும் மேற்கண்ட அரசாணையில் தெளிவாகக் குறிப்பிடப்பட் டுள்ளது. ஆனால் பல தன்னார் வத் தொண்டு நிறுவனங்கள் மேற்கண்ட அரசாணையின் படி மாவட்ட ஆட்சித் தலை வர், பொது சுகாதாரத் துறை இயக்குநரிடமிருந்து முன் அனுமதி பெறாமல் மருத்துவ முகாம்கள் நடத்துகிறார்கள்.
இனி வரும் காலங்களில் மருத்துவ முகாம்கள் நடத்த மாவட்ட ஆட்சித் தலைவரிட மிருந்தும் பல மாவட்டங்களில் முகாம்கள் நடத்த பொது சுகாதாரத்துறை இயக்குநரிட மிருந்தும் முன் அனுமதி பெற் றுத் தான் முகாம்கள் நடத் தப்பட வேண்டும். அவ் வாறு அனுமதி பெறாமல் நடத்தப் பட்டால், அத்தகைய மருத்துவ நிலையங்கள், தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
- இவ்வாறு அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்
பிரசவகால துணை
இதற்கான பயிற்சி அ.ஆ.சு.நிலையத்தில் உள்ளே நுழைந்த உடனே தொடங்குகிறது. கர்ப்பிணியின் நம்பிக்கைக்குரிய பெண்தோழி ஒருவர் தேர்ந்தெடுக்கப் படுகிறார். அவர் ஓரளவு எழுதுப் படிக்கத்தெரிந்தவராகவும் ஓரளவு உலக அனுபவம் படைத்தவராகவும் இருத்தல் அவசியம்.அவர் குழந்தை பெற்றவராய் இருத்தல் அவசியம். பெரும்பாலும் அக்கா, அத்தை அல்லது பக்கத்து வீட்டுப் பெண் அமைகிறார். இவருக்கு அடையளா அட்டை கூட வழங்கப்படுகிறது.
மருத்துவ அலுவலர், ச.சு.செ.,ப.சு.செ.,கி.சு.செ.மற்றும் இருப்பிட செவிலியர்களால் இந்தப் பயிற்சி வழங்கப் படுகிறது.
இது பிரசவ நேரத்தில் கர்ப்பிணியின் மன அழுத்தத்தை பெரிதும் குறைக்கிறது. ஆ.சு.நி.பணியாளர்களின் சுமையும் பெரிதும் குறைகிறது. பிரசவ அறையில் என்ன ந்டக்கிறது என்பதை தோழி உடனிருந்து பார்ப்பதால் பலவிதமான தவறான புரிதல்கள் தவிர்க்கப் படுகின்றன.
இவருக்கு பயிற்சி என்பது வீட்டில் இருப்பவர்கள் எப்படி பராமரிப்பது. என்ன உடற்பயிற்சி (வீட்டு வேலை?) செய்யலாம் எப்படி மாத்திரைகள் விழுங்குவது, அதன் பயன்கள் என்ன என்பது பற்றியும் மருத்துவர் கூறும் அறிவுரைகள் எப்படி பின்பற்றுவது என்பது, பிரசவம் பற்றிய பயம் நீக்குவது பற்றியும் அமைகிறது.
இந்த ஒரு நபர் அ.ஆ.சு.நி.யில் சிலரின் வேலை சுமையை குறைப்பதோடு, கர்ப்பிணிக்கு ஆயிரம் பேர்களின் பலத்தை கொடுக்கிறார் என்பதே உண்மை.
Wednesday, October 22, 2008
ஆத்தா, மகமாயி
லட்சுமி 15 நாட்களுக்கு முன் குழந்தை பெற்ற பெண்மணி. மொத்தமே 25 கிலோ எடை மட்டுமே இருப்பார். ரத்தக்குறைபாடு காரணமாக குழந்தை பிறந்த உடன் 2யூனிட் ரத்தம் போட்டு இப்போது தான் வீடு திரும்பியவர். அவர் ஏன் ஓடி வர வேண்டும்? அவரது அன்பான கணவனுக்கு என்ன நேர்ந்தது.
இப்போது லட்சுமியின் மயக்கம் தெளிவிக்கப் பட்டிருந்தது. லட்சுமி உச்ச ஸ்தாயில் கதற ஆரம்பித்தார்." அக்கா என் புருசனை ஒன்னும் பன்னிடாதிங்க" "உங்க காலுக்கு செருப்பா இருப்பேன். அவர விட்டுடுங்க. என் உயிர காப்பத்தின நீங்களே என் வாழ்க்கைய கெடுக்க பார்க்கறீங்களே. எஞ்சாமி ஒரு பாவமும் பண்ணலயே. இப்படி குடும்பத்த வேரருக்க பார்க்கறீங்களே. ஆத்தா உனக்கு மொட்டையடிச்சு கெடாவெட்டி பூக்குழி இறங்குறேன்" எல்லா வகையான வேண்டுதலையும் சொல்லிவிட்டு மயங்கி சாய்ந்தார் லட்சுமி.
அப்படி என்னதான் நேர்ந்தது லட்சுமியின் கணவனுக்கு. ஏன் இப்படி? அவன் லட்சுமியின் உயிரையே வைத்திருந்தான். பிரசவத்தின் போது மிகவும் கஷ்டப்பட்டு லட்சுமியைக் காப்பாற்றிய போது இவனும் செத்துதான் பிழைத்தான். அப்போதுதான் அந்தப்பகுதி சுகாதார செவிலியர் சொன்னார் "லட்சுமி இன்னொருமுறை கருத்தறித்தால் அவள் உயிருக்கு ஆபத்து. அவளுக்கு கு.க.செய்யக்கூட உடல் நிலை ஒத்துக்காது".
அ.ஆ.சு.நி.ல் உள்ள வட்டார விரிவாக்க கல்வியாளர், வ.சு. புள்ளியாளர், ப.சு.செ. கி.சு.செ., சு.ஆ. ஆகியோர் நவீன ஆண் குடும்பநல சிகிச்சை முறை பற்றிச்சொல்லி அவனை சம்மதிக்க வைத்து அழைத்துச் சென்றபோது நடந்த சம்பவம்தான் இது. லட்சுமி கண்விழித்த உடன் அனைவரையும் ஒருமுறை பார்த்துவிட்டு மீண்டும் அழ ஆரம்பித்தார். "லட்சுமிட்ட சொன்னா சம்மதிக்க மாட்டா, அதுனால நான் அவகிட்ட சொல்லல"வாய் திறந்தார் லட்சுமியின் கணவர்.
நடந்த சம்பவங்களில் நாங்கள் உறைந்துவிட்டோம். சில வயதான பணியாளர்கள் கண்ணீர் விட ஆரம்பித்து விட்டனர். லட்சுமி சம்மதித்த பின் கு.ந.சிகிச்சை செய்து கொள்ளலாம் என்று அவர்களை வீட்டில் விட்டுவிட்டு திரும்பினோம்.
இந்த நிகழ்ச்சிக்கு பின்னர் நாங்கள் எங்கள் பிரச்சாரத்தை திருமணமான பெண்களீடமே ஆரம்பிக்கிறோம். நமது பெண்கள் கணவர் வீரியம் குறைந்தவர்(ஆண்மை நிறைந்திருந்தாலும்) என்பதை ஏற்றுக் கொள்ள தயங்குவதே ஆண் கு.ந. சிகிச்சை பரவாலாவதற்கு தடையாய் இருக்கிறது என்பதும் ஒரு உண்மைதான்
பிஞ்சுக் கரங்களில் தாய்மை....(கண்டிப்பாக படியுங்கள்)
பிஞ்சுக் கரங்களில் தாய்மை....(கண்டிப்பாக படியுங்கள்)
தன்னலம் அற்ற தூய மனதுடன், எந்த வித எதிர்பார்ப்பும் இல்லாமல், தன் பணியை மனதார முழு அற்பணிப்போடு செய்யும் ஒரு குழந்தை வடிவத்தில் தெய்வம் .
கொஞ்சம் பெரிய பதிவு...சிரமம் பார்க்காமல் தயவு செய்து முழுவதும் படிக்குமாறு வேண்டிக்கொள்கிறேன்..
எச்ஐவியால் பாதிக்கப்பட்ட ஒரு தாய் மரணப்படுக்கையில்.. அவரைப் பார்த்துக் கொள்வது அவருடைய பத்து வயது மகள்.
சம்பந்தப் பட்ட குழந்தையின் நலன் கருதி, பெயரோ, அடையாளமோ கொடுக்கப்படவில்லை.

எத்தன நாளா அம்மா இப்படி இருக்காங்க?
ஒரு வருஷமா அம்மாக்கு உடம்பு சரியில்லை. அவங்க ஒரு ஹோட்டல்ல வேலை செய்துட்டு இருந்தாங்க. அங்க யாருடனோ ஏற்பட்ட தொடர்பால் தங்கச்சி பாப்பா பிறந்தா. அப்ப இருந்து அம்மாக்கு உடம்பு சரியில்லை. அம்மாக்கு எய்ட்ஸ் வியாதின்னு சொன்னாங்க. அம்மா ரொம்ப நாளா எங்க கிட்ட சொல்லலை...லேட்டா தான் வெளியே சொன்னாங்க.. முதல்ல எல்லாம் ரொம்ப அழுவேன். இப்ப எனக்கு தைரியம் வந்துடுச்சு. சொந்தக்காரர் ஒருத்தர் தைரியமா இருக்க சொன்னதுனால அம்மாவ நல்லா பார்த்துக்குறேன்.
அம்மாக்கு என்ன எல்லாம் நீ செய்வே.. எப்படி பார்த்துப்பே?
அம்மா உடம்ப தொடச்சி விடனும். வாயில் நீர் வழிஞ்சுட்டே இருக்கும். அதை தொடர்ந்து தொடைக்கனும். துணி மாத்தி விடனும். தினமும் படுக்கை மாற்றனும். பவுடர் போடனும். அவங்க டாய்லெட் போனா கழுவி விடனும்.
உனக்கு இது எல்லாம் செய்ய கஷ்டமா இல்லையா?
( நம் கண்களுக்குள் ஊடுறுவிப் பார்த்துட்டு)
என் அம்மாதானே, நான் தானே செய்யனும்...
அம்மாவ மட்டும் இல்லை.... தங்கச்சி பாப்பாவையும் நான் தான் பார்த்துப்பேன். அவ ரொம்ப குறும்பு ( சிரித்துக் கொண்டே).. சில சமயம் அம்மாவ கவனிச்சுட்டு இருக்கும் போது அவளை கவனிக்கலைன்னு அழுவா... கோவம் வந்துடும் அவளுக்கு..(ஹா ஹா என்று சிரிப்பு)
அப்பா?
அவர் எங்கள விட்டுட்டு போய் வேற கல்யாணம் பண்ணிக்கிட்டார்
அம்மா இப்படி பண்ணிட்டாங்களேன்னு உனக்கு கோவம் வந்திருக்கா?
இல்லை..ஆனா ரொம்ப வருத்தமா இருக்கு... அம்மாவ முழுவதும் குணப்படுத்த முடியலைன்னு.. எத்தன நாளைக்கு அம்மா இப்படியே இருப்பாங்கன்னு தெரியலையே..ஆனா அம்மா தான் எனக்கு விஷம் குடு விஷம் குடுன்னு கேட்டுட்டே இருப்பாங்க....நான் எப்படி குடுப்பேன்..நான் அம்மாவ நல்லா பார்த்துப்பேன்.
பேசிக்கொண்டு இருக்கும் போதே தங்கச்சிப்பாப்பா துறு துறு என்று இவள் பக்கம் தவழ்ந்து வர..அவளை அள்ளிக் கொள்கிறாள்..
குட்டிப்பாப்பாவ தூக்கணும், பார்த்துக்கணும், அதுனால உனக்கு களைப்பா இல்லையா?
(சிரித்துக்கொண்டே வெகுளியாக)..கைவலிச்சா அவள அடுத்த கைக்கு மாத்திக்குவேன்.. ஆனா அவ ரொம்ப சேட்டை..பாருங்க என் முடிய பிடிச்சு இழுக்கறா. என் கன்னத்தை கிள்ளி வச்சுட்டே இருப்பா..நேத்து என்னை பளார்னு அறஞ்சுட்டா.. ஆனா குட்டிப்பாப்பாதானே அவளுக்கு தெரியாதில்ல.. ரொம்ப குறும்பு பண்ணா, " பேசாம இரு..இல்லன்னா பேச மாட்டேன்னு சொல்லுவேனா..அப்புறம் சிரிப்பா..பேசாம இருப்பா". (குழந்தைக்கு முத்தம் கொடுத்துக் கொண்டே)
பாப்பாவ கீழ போட்டற மாட்டியே..?..நல்லா பிடிச்சுக்கோ
அதெல்லாம் போடமாட்டேன்..கெட்டியா பிடிச்சுப்பேன்..இப்படி (கெட்டியாக நெஞ்சோடு அணைத்துக் கொள்கிறாள்).
(குட்டிப்பாப்பா இந்த பத்து வயது சிறுமியை அம்மா என்று தான் அழைக்கிறாள்).
குட்டிப்பாப்பா உன்னை அம்மான்னு கூப்பிடறாளே?.. உங்க வீட்ல உங்க அம்மா, பாட்டி எல்லாம் இருக்காங்க..அவங்களையும் அம்மான்னு தான் கூப்பிடுவாளா?
இல்லை...என்னை மட்டும் தான் அம்மான்னு கூப்பிடிவா...ஏன்னு தெரியலை.. ஆனா அவ அப்படி கூப்பிடும் போது எனக்கு நல்லா இருக்கும் ... என்னை மட்டும் தான் அப்படி கூப்பிடுவா என் குட்டி (என்று மீண்டும் பாப்பாவுக்கு முத்தம் கொடுக்கிறாள்)
நீ ஸ்கூலுக்கு போறதில்லையா?
நான் ஸ்கூலுக்கு போனா அம்மாவையும், குட்டிப் பாப்பாவையும் யாரு பார்த்துப்பா?
தங்கச்சி பாப்பாவ யாராவது எடுத்து வளர்க்க முன் வந்தா நீ சரி சொல்லுவியா?
அவ நல்லா படிக்கனும்.. எனக்கு அவள நல்லா பார்த்துக்கனும்னு ஆசை.. ஆனா நான் என்ன வேலை பார்க்குறதுன்னு தெரியலை... அவ வசதியான இடத்துக்கு போனா சந்தோஷம் தான்.. ஆனா நான் எப்படி அவள விட்டுட்டு இருப்பேன்...(மிகுந்த சோகத்துடன்)
உனக்கு எய்ட்ஸ் பத்தி என்ன தெரியும்?
(கைகள் இரண்டையும் இருக்கமாக கட்டிக் கொண்டு)
ஐயோ யாருக்கும் அது வரக்கூடாது.
எய்ட்ஸ் எப்படி வருதுன்னு உனக்கு தெரியுமா?
ஆணுறை உபயோகிச்சா வராதாம்.
உனக்கு யாரு சொன்னா ?
ஒரு விளம்பரத்துல படிச்சேன்.. எச்ஐவி ல் இருந்து உங்களை பாதுகாத்துக் கொள்ள ஆணுறை உபயோகிங்கள் என்று. (ம்ம்ம்.. என்ன சொல்ல)
அம்மா மாதிரி எச்ஐவியால பாதிக்கப்பட்டவங்க கிட்ட நீ என்ன சொல்லுவே?
அம்மா மாதிரி லேட்டா சொன்னா, என் மாதிரி குழந்தைங்க என்ன பண்ணுவாங்க...அதுனால தெரிஞ்ச உடனே டாக்டர் கிட்ட போனா கஷ்டப்பட வேண்டியது இல்லை...லேட்டா சொல்லி அவங்களுக்கு ஏதாவது ஆச்சுன்னா நம்மளால தாங்க முடியுமா?..வீட்ல இருக்குறவுங்களும் அவங்கள நல்லா பார்த்துக்கனும் ( இதை விட ஒரு சிறந்த விழிப்புணர்வு செய்தி இருக்க முடியுமா..ம்ம்ம்)
நீ ஏதாவது கேட்க விரும்பறியா?
அம்மாக்கு ஏதாவது ஆச்சுன்னா நான் எங்க இருப்பேன்?...என்ன பண்ண? ( மனதை பிழியவில்லை?..ம்ம்ம்)
நீ எங்க போக விரும்பறே?
தெரியலை....என்ன என்னமோ சொல்றாங்க... தனியா இருந்தா யாராவது தப்பா நடந்துப்பாங்களாம்...கடத்திட்டுப் போய் வித்துடுவாங்களாம்...ரேப் பண்ணிடுவாங்களாம். (கடவுளே!!!)
நீ சாமிய பார்த்தா என்ன கேட்பே?
எல்லாரும் எந்த நோயும் இல்லாம ஆரோக்கியமா இருக்கனும்.
உனக்காக ஒன்னும் கேட்க மாட்டியா?
கண்டிப்பா கேட்பேன்..என் அம்மாக்கு சீக்கிறம் நல்லாகனும்.. குட்டிப்பாப்பா நல்லா இருக்கனும்...( சுயநலம் இல்லாத இந்த அன்பான மனதை வணங்கத் தோன்றுகிறதல்லவா?ம்ம்)
தற்பொழுது அம்மா மருத்துவமனையில்..
அம்மாவ பார்க்க போறியா? ..நான் கூப்டுட்டு போறேன்..
அம்மாவ பார்க்கனும் போல இருக்கு.. ஆனா நான் போன அப்புறம் ஏதாவது.......................................... (குட்டிப்பாப்பாவை அனைத்துக் கொண்டு அழுகிறாள்..)
இது போல எத்தனையோ குழந்தைகள் படித்து, விளையாடி மகிழ வேண்டிய வயதில் குடும்ப பாரத்தை சுமந்து கொண்டு இருக்கிறார்கள்.
இயலாமையை நினைத்து நினைத்துத் துவண்டு விடுகிறது என் மனம்.
நன்றி: மங்கை
Sunday, October 19, 2008
பணிகள்
- அனைவருக்கும் தெரிந்த புறநோயாளிகள் பிரிவு.
- இப்போது ஓரளவு மக்களுக்கு தெரிந்து வரும் பிரசவ பிரிவு. தற்போது அனைத்து அ.ஆ.சு.நிலையங்களும் 24மணிநேர பிரசவ மையங்களாகி விட்டன.
- அனைத்து கர்ப்பிணிகளுக்கும் Hb. சர்க்கரை, உப்பு, ரத்த வகையறிதல்,கொழுப்பு பரிசோதனைகள் செய்ய படுகின்றன.
- TANSAC ஆலோசகர் ஆய்வகர் HIV பரிசோத்னைகள் செய்கிறார்கள்.
- அனைத்து அ.ஆ.சு.நி.களும் காசநோய் அலகுடன் இணைக்கப்பட்டு நோயாளிகளுக்கு குறுகிய கால சிகிச்சை நேரடி பார்வையில் வழங்கப்படுகின்றது.
- தொழுநோய் சிகிச்சையும் வழங்கப்படுகிறது.
- சர்க்கரை. ரத்த அழுத்த நோய்களுக்கு சிகிச்சை தர படுகிறது.
- scan பரிசோதனை செய்யப்படுகிறது.
- அ.ஆ.சு.நி. உட்பட்ட பகுதிகளில் சுற்று சுகாதாரம் எவ்வாறு உள்ளது என்பது பற்றியும் சரிசெய்யும் வழிமுறைகளை சம்பந்தப்பட்ட பஞ்சாயத்துகளுக்கு தகுந்த ஆலோசனை வழங்குகின்றனர். மலேரியா, சிகுன்குனியா, டெங்கு நோய்கள் வராமல் தடுப்பது முக்கிய பணியாக அமைகிறது.
- வளரிளம் பெண்கள் ரத்தச்சோகை தடுப்புப் பணிகளும், அதைப்பற்றிய விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்படுகின்றன.
- கர்ப்பிணிகளை தேடிப் பிடித்து பதிவு செய்து குறைந்தபட்சம் 5முறையாவது பரிசோதனைக்கு வரவக்க படாதபாடு படுபவர்களும் இவர்கள்தான்.
- எத்தனையோ தவிர்க்கப் பட கூடிய பிரசவ சிக்கல்களை தவிர்க்க பாடுபடுபவர்கள் இவர்கள்.
- தடுப்பூசிகளை சரியான இடைவெளிகளில் வழங்குபவர்கள் இவர்கள்.
- தடுப்பூசியின்சக்தியினை காக்கும் cold chain இங்குதான் மிகச்சிறப்பாக பேணப்படுகிறது.
- pulse polio போன்ற ஒரே நேரத்தில் அனைவருக்கும் வழங்கும் பணி அ.ஆ.சு.நி. மூலமாகவே நடைபெறுகிறது.
- இளம்சிறார் இருத்ய பாதுகாப்புத்திட்டத்தில் அறுவை சிகிச்சைகள் செய்விக்கப்பட்டதில் இவர்களின் பங்கு மிக அதிகம்.
- அனைத்து வியாழன்களிலும் அரசு மற்றும் அரசு உதவி பெறும்பள்ளிகள்க்குச் சென்று மாணவர்கள்க்கு சிகிச்சை மற்றும் அடிப்படை பரிசோதனைகள் செய்து பெரிய பிணியினை முதலிலேயே தடுத்து விடுவதும் இவர்களே.
- ஆண்பெண் சமத்துவம் பற்றிய கருத்தரங்களும் அ.ஆ.சு.நி. மூலமாக நடத்தப் படுகின்றன.
- small pox விரட்டியக்கப் பட்டதும் polio கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டதிலும் இவர்களால்தான்.
- 2006ல் கோரத்தாண்டவம் ஆடிய சிகுன்குனியா, 2007, 2008ல் ஒளிந்துகொண்டதும் இவர்களால்தான். (இதைப் பற்றி தனியே எழுதுகிறேன்)
- இது வெறும் முன்னுரை மட்டுமே. மேலும் தொடர்ந்து எழுதுகிறேன்.

Thursday, October 16, 2008
Wednesday, October 15, 2008
திருவள்ளூர் மாவட்டம்

ஆரம்ப சுகாதார நிலையங்கள்ஏழை மக்கள் அதிகம் பயன்படுத்தும் ஆஸ்பத்திரியாக விளங்குகின்றன
சிகிச்சை பெற்ற கிராம மக்கள் கருத்து
சென்னை, டிச.5-
"ஆரம்ப சுகாதார நிலையங்கள் ஏழை, எளிய மக்கள் பயன்படுத்தும் ஆஸ்பத்திரியாக விளங்குகிறது'' என்று பொதுமக்கள் தெரிவித்தனர்.
ஆரம்ப சுகாதார நிலையங்கள்
தமிழ்நாட்டில் கிராமப்புறங்களில் 5 ஆயிரம் மக்கள் தொகைக்கு ஒரு துணைசுகாதார மையமும், 30 ஆயிரம் மக்கள் தொகைக்கு ஒரு ஆரம்ப சுகாதார மையமும் உள்ளன. சுகாதார மையங்களில் உள்ள செயல்பாடுகளை நேரில் கண்டறிவதற்காக பத்திரிகையாளர்களை திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பல ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு அரசு அதிகாரிகள் அழைத்து சென்றனர்.
செங்குன்றம் வட்டார ஆரம்ப சுகாதார மையத்தில் நேற்று பார்த்தபோது நோயாளிகள் ஏராளமானவர்கள் வரிசையில் நின்றனர். 3 பெண் மருத்துவர்கள் மற்றும் நர்சுகள் உள்ளிட்ட மருத்துவ குழுவினர் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதை பார்க்க முடிந்தது.
டாக்டர்கள் கூறியதாவது:-
கடந்த வருடம் இங்கு 410 பெண்கள் குழந்தை பெற்றனர். இந்த வருடம் இதுவரை 539 பேருக்கு குழந்தை பிறந்துள்ளது. சராசரியாக தினமும் 2 பேருக்கு பிரசவம் பார்க்கிறோம். கர்ப்பிணி பெண்களுக்கு சிறப்பான சிகிச்சை அளிக்கப்படுகிறது. மாதம் தோறும் பரிசோதனைக்கு வரச்செய்து உரிய ஆலோசனைகளை கூறுகிறோம். எச்.ஐ.வி. உள்ளிட்ட பால்வினை நோய் உள்ளதா? என்றும் ரத்த பரிசோதனை செய்கிறோம்.
பிரசவத்தின்போது அறுவை சிகிச்சை தேவைப்படின், முன்னதாக அவர்களை ஆம்புலன்ஸ் வேன் மூலம் பெரிய ஆஸ்பத்திரிகளுக்கு அனுப்பி வைத்து விடுவோம்.
24 மணிநேரமும் ஆரம்ப சுகாதார நிலையம் செயல்படுகிறது. கர்ப்பிணி பெண்களுக்கு ஆரம்ப சுகாதார நிலைய போன் நம்பர் கொடுக்கப்பட்டுள்ளது. அவசர தேவைக்கு அவர்கள் அழைத்தால் உடனே ஆம்புலன்ஸ் வேனை அனுப்பி அழைத்து வந்து சிகிச்சை அளிக்கிறோம்.
இவ்வாறு டாக்டர்கள் தெரிவித்தனர்.
ஏழைகளின் ஆஸ்பத்திரி
அங்கு அனுமதிக்கப்பட்டு குழந்தை பெற்றுள்ள தாய்கள் கூறியதாவது:-
தனியார் ஆஸ்பத்திரி போல நன்றாக எங்களை டாக்டர்களும், நர்சுகளும் கவனிக்கிறார்கள். அதுமட்டும் அல்ல டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி நினைவு திட்டத்தில் ரூ.6 ஆயிரம் வழங்கப்படுகிறது. மேலும் ஜனனி சுரக்ஷா யோகாஜனம் திட்டத்தில் குழந்தை பெற்று வீடு திரும்பும் முன் எங்களிடம் ரூ.700 தருகிறார்கள். எனவே, இப்போது பல முன்னேற்றங்களை ஆரம்ப சுகாதார நிலையங்களில் காண முடிகிறது. ஏழை, எளிய மக்கள் அதிகம் பயன்படுத்தும் வகையில் ஆரம்ப சுகாதார நிலையங்கள் விளங்குகின்றன.
இவ்வாறு பெண்கள் தெரிவித்தனர்.
சத்துள்ள உணவு
பூதூர் ஆரம்ப சுகாதார மையத்தில் நேற்று மதியம் கர்ப்பிணி பெண்களுக்கு சாப்பாடு கொடுக்கப்பட்டது. அவர்கள் வாழை இலையில் சோறு, சாம்பார், ரசம், மோர், முருங்கை இலை பொறியல், கூட்டு, அவித்த முட்டை, அவித்த கொண்டைக்கடலை ஆகியவற்றுடன் சாப்பிடுவதை பார்க்க முடிந்தது. வாரம் தோறும் இந்த சாப்பாடு வழங்கப்படுகிறது. ஒவ்வொரு கர்ப்பிணி பெண்ணும் மாதம் ஒரு நாள் சாப்பிடுகிறார்கள். சத்துள்ள உணவு சாப்பிட வேண்டும் என்பதை வலியுறுத்துவதற்காக இந்த சாப்பாடு வழங்கப்பட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
பொதுமக்கள் கூறுகையில், "ஆரம்ப சுகாதார நிலையங்களில் கூடுதல் டாக்டர்களையும், கூடுதல் நர்சுகளையும் நியமிக்கவேண்டும்'' என்று கோரிக்கை விடுத்தனர்.
மாநில சுகாதார கழக மருத்துவ அதிகாரி டாக்டர் அருண் முருகன், திருவள்ளூர் மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குனர் டாக்டர் சம்பத் ஆகியோர் கூறியதாவது:-
தன்னிறைவு
தமிழ்நாட்டில் ஆரம்ப சுகாதார நிலையங்களில் கூடுதல் கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்த மத்திய அரசுக்கு ரூ.431 கோடிக்கு திட்டம் அனுப்பினோம். அதற்கு ரூ.380 கோடி அனுமதிக்கப்பட்டது. அதில் ரூ.284 கோடி செலவழிக்கப்பட்டுள்ளது.
தேசிய கிராமப்புற சுகாதார திட்டத்தின் கீழ், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களை, மத்திய அரசு நிர்ணயித்துள்ள சுகாதார தரத்திற்கு ஏற்ப தன்னிறைவு பெற்ற தரமானதாக மாற்ற முயற்சி நடக்கிறது. இந்த திட்டத்தில் முதல் பகுதியாக 30 சதவீத ஆரம்ப சுகாதார நிலையங்கள் 2009-ம் ஆண்டுக்குள் தன்னிறைவு பெற்றுவிடும். படிப்படியாக திட்டம் செயல்படுத்தப்பட்டு, போதிய கட்டிட வசதிகள்,போதிய கருவிகள் அனைத்தும் வாங்கப்பட்டு தமிழ்நாட்டில் அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களும் 2012-ம் ஆண்டுஇறுதிக்குள் இந்திய சுகாதார தரஅளவு பெற்ற தன்னிறைவு பெற்றவைகளாக விளங்கும்.
இவ்வாறு டாக்டர்கள் தெரிவித்தனர்.
ஆரம்ப சுகாதார நிலையங்கள்ஏழை மக்கள் அதிகம் பயன்படுத்தும் ஆஸ்பத்திரியாக விளங்குகின்றன
சிகிச்சை பெற்ற கிராம மக்கள் கருத்து
"ஆரம்ப சுகாதார நிலையங்கள் ஏழை, எளிய மக்கள் பயன்படுத்தும் ஆஸ்பத்திரியாக விளங்குகிறது'' என்று பொதுமக்கள் தெரிவித்தனர்.
ஆரம்ப சுகாதார நிலையங்கள்
தமிழ்நாட்டில் கிராமப்புறங்களில் 5 ஆயிரம் மக்கள் தொகைக்கு ஒரு துணைசுகாதார மையமும், 30 ஆயிரம் மக்கள் தொகைக்கு ஒரு ஆரம்ப சுகாதார மையமும் உள்ளன. சுகாதார மையங்களில் உள்ள செயல்பாடுகளை நேரில் கண்டறிவதற்காக பத்திரிகையாளர்களை திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பல ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு அரசு அதிகாரிகள் அழைத்து சென்றனர்.
செங்குன்றம் வட்டார ஆரம்ப சுகாதார மையத்தில் நேற்று பார்த்தபோது நோயாளிகள் ஏராளமானவர்கள் வரிசையில் நின்றனர். 3 பெண் மருத்துவர்கள் மற்றும் நர்சுகள் உள்ளிட்ட மருத்துவ குழுவினர் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதை பார்க்க முடிந்தது.
டாக்டர்கள் கூறியதாவது:-
கடந்த வருடம் இங்கு 410 பெண்கள் குழந்தை பெற்றனர். இந்த வருடம் இதுவரை 539 பேருக்கு குழந்தை பிறந்துள்ளது. சராசரியாக தினமும் 2 பேருக்கு பிரசவம் பார்க்கிறோம். கர்ப்பிணி பெண்களுக்கு சிறப்பான சிகிச்சை அளிக்கப்படுகிறது. மாதம் தோறும் பரிசோதனைக்கு வரச்செய்து உரிய ஆலோசனைகளை கூறுகிறோம். எச்.ஐ.வி. உள்ளிட்ட பால்வினை நோய் உள்ளதா? என்றும் ரத்த பரிசோதனை செய்கிறோம்.
பிரசவத்தின்போது அறுவை சிகிச்சை தேவைப்படின், முன்னதாக அவர்களை ஆம்புலன்ஸ் வேன் மூலம் பெரிய ஆஸ்பத்திரிகளுக்கு அனுப்பி வைத்து விடுவோம்.
24 மணிநேரமும் ஆரம்ப சுகாதார நிலையம் செயல்படுகிறது. கர்ப்பிணி பெண்களுக்கு ஆரம்ப சுகாதார நிலைய போன் நம்பர் கொடுக்கப்பட்டுள்ளது. அவசர தேவைக்கு அவர்கள் அழைத்தால் உடனே ஆம்புலன்ஸ் வேனை அனுப்பி அழைத்து வந்து சிகிச்சை அளிக்கிறோம்.
இவ்வாறு டாக்டர்கள் தெரிவித்தனர்.
ஏழைகளின் ஆஸ்பத்திரி
அங்கு அனுமதிக்கப்பட்டு குழந்தை பெற்றுள்ள தாய்கள் கூறியதாவது:-
தனியார் ஆஸ்பத்திரி போல நன்றாக எங்களை டாக்டர்களும், நர்சுகளும் கவனிக்கிறார்கள். அதுமட்டும் அல்ல டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி நினைவு திட்டத்தில் ரூ.6 ஆயிரம் வழங்கப்படுகிறது. மேலும் ஜனனி சுரக்ஷா யோகாஜனம் திட்டத்தில் குழந்தை பெற்று வீடு திரும்பும் முன் எங்களிடம் ரூ.700 தருகிறார்கள். எனவே, இப்போது பல முன்னேற்றங்களை ஆரம்ப சுகாதார நிலையங்களில் காண முடிகிறது. ஏழை, எளிய மக்கள் அதிகம் பயன்படுத்தும் வகையில் ஆரம்ப சுகாதார நிலையங்கள் விளங்குகின்றன.
இவ்வாறு பெண்கள் தெரிவித்தனர்.
சத்துள்ள உணவு
பூதூர் ஆரம்ப சுகாதார மையத்தில் நேற்று மதியம் கர்ப்பிணி பெண்களுக்கு சாப்பாடு கொடுக்கப்பட்டது. அவர்கள் வாழை இலையில் சோறு, சாம்பார், ரசம், மோர், முருங்கை இலை பொறியல், கூட்டு, அவித்த முட்டை, அவித்த கொண்டைக்கடலை ஆகியவற்றுடன் சாப்பிடுவதை பார்க்க முடிந்தது. வாரம் தோறும் இந்த சாப்பாடு வழங்கப்படுகிறது. ஒவ்வொரு கர்ப்பிணி பெண்ணும் மாதம் ஒரு நாள் சாப்பிடுகிறார்கள். சத்துள்ள உணவு சாப்பிட வேண்டும் என்பதை வலியுறுத்துவதற்காக இந்த சாப்பாடு வழங்கப்பட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
பொதுமக்கள் கூறுகையில், "ஆரம்ப சுகாதார நிலையங்களில் கூடுதல் டாக்டர்களையும், கூடுதல் நர்சுகளையும் நியமிக்கவேண்டும்'' என்று கோரிக்கை விடுத்தனர்.
மாநில சுகாதார கழக மருத்துவ அதிகாரி டாக்டர் அருண் முருகன், திருவள்ளூர் மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குனர் டாக்டர் சம்பத் ஆகியோர் கூறியதாவது:-
தன்னிறைவு
தமிழ்நாட்டில் ஆரம்ப சுகாதார நிலையங்களில் கூடுதல் கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்த மத்திய அரசுக்கு ரூ.431 கோடிக்கு திட்டம் அனுப்பினோம். அதற்கு ரூ.380 கோடி அனுமதிக்கப்பட்டது. அதில் ரூ.284 கோடி செலவழிக்கப்பட்டுள்ளது.
தேசிய கிராமப்புற சுகாதார திட்டத்தின் கீழ், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களை, மத்திய அரசு நிர்ணயித்துள்ள சுகாதார தரத்திற்கு ஏற்ப தன்னிறைவு பெற்ற தரமானதாக மாற்ற முயற்சி நடக்கிறது. இந்த திட்டத்தில் முதல் பகுதியாக 30 சதவீத ஆரம்ப சுகாதார நிலையங்கள் 2009-ம் ஆண்டுக்குள் தன்னிறைவு பெற்றுவிடும். படிப்படியாக திட்டம் செயல்படுத்தப்பட்டு, போதிய கட்டிட வசதிகள்,போதிய கருவிகள் அனைத்தும் வாங்கப்பட்டு தமிழ்நாட்டில் அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களும் 2012-ம் ஆண்டுஇறுதிக்குள் இந்திய சுகாதார தரஅளவு பெற்ற தன்னிறைவு பெற்றவைகளாக விளங்கும்.
இவ்வாறு டாக்டர்கள் தெரிவித்தனர்.
நன்றி: பொட்டல்புதூர்.காம்
நமக்கான சுட்டிகள்
| The following links are related to Health & Family Welfare Department, Government of Tamil Nadu.
|