Wednesday, July 29, 2009

கீரைகளின் பயன்கள்

* கீரைகள், காய்கறிகள் உடல் வளர்ச்சிக்கும் நல்ல ஆரோக்கியத்திற்கும் மிகவும் அவசியம். இவை அதிகளவில் முக்கிய சத்துக்களை கொண்டுள்ளன

* இந்தியாவில் பல வகை கீரைகள் உணவாக உட்கொள்ளப்படுகிறது. அவற்றில் மிகவும் பெயர் பெற்றவை, அறக்கீரை, பாலக் கீரை தண்டு கீரை, புளிச்சக் கீரை, வெந்தயக்கீரை, முருங்கக் கீரை மற்றும் புதினா தழை போன்றவையாகும்


* கீரைகள் குறிப்பாக இரும்பு மற்றும் பிற தாதுப்பொருட்களை அதிகளவில் கொண்டுள்ளன. இரும்புச் சத்து பற்றாக்குறை, இரத்த சோகையினை ஏற்படுத்துகிறது. இது கர்ப்பிணி பெண்கள், தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் மற்றும் குழந்தைகளில் ஏற்படும் பொதுவான உடல்நல அசெளகரியமாகும்


* கீரைகள் தினமும் உணவில் சேர்த்துக்கொள்வதின் மூலம், இரத்த சோகை வருவதை தடுத்து, நல்ல உடல் நலனை பெறலாம்


* கீரைகள் சண்ணாம்புச் சத்து, பீட்டா கரோடின், வைட்டமின்-சி போன்றவற்றை அதிகம் கொண்ட முக்கிய மூலப்பொருளாகும்


* இந்தியாவில் ஒவ்வொரு வருடமும் ஐந்து வயதிற்குட்பட்ட சுமார் 30000 சிறு பிள்ளைகள் வைட்டமின் ஏ குறைப்பாட்டினால் கண்பார்வை இழக்கும் நிலை ஏற்படுகிறது. கீரைகளில் உள்ள கரோடின் எனும் பொருளானது உடலில் வைட்டமின் ஏ வாக மாறுவதால், பார்வை இழக்கும் நிலை தடுக்கப்படுகிறது

* கீரைகளிலுள்ள கரோடின்களை பாதுகாக்க, நீண்ட நேரம் வேகவைப்பதை தவிர்க்க வேண்டும். அதிக நேரம் சமைப்பதினால் கீரைகளில் உள்ள கரோடின் எனும் சத்துப்பொருள் இழப்பு ஏற்படுகிறது

* கீரைகள் பி-காம்ளக்ஸ் வைட்டமின்களையும் கொண்டுள்ளது

உணவில் உட்கொள்ள வேண்டிய கீரைகளின் பரிந்துரைக்கப்பட்ட அளவு

*
பெண்களுக்கு 100 கிராம் ஒரு நாளைக்கு
*
ஆண்களுக்கு 40 கிராம் ஒரு நாளைக்கு
*
பள்ளி செல்லும் சிறு பிள்ளைகள் (4-6 வயது) க்கு 50 கிராம் ஒரு நாளைக்கு
*
10 வயதிற்கு மேற்பட்ட ஆண்கள் பெண்கள் இருபாலருக்கும் 50 கிராம் ஒரு நாளைக்கு



* கீரை வகைகள் சிறுப் பிள்ளைகளில் வயிற்றுப்போக்கினை ஏற்படுத்துகின்றன என நம்பப்படுகிறது. எனவே பெரும்பாலான தாய்மார்கள் கீரை உணவை பிள்ளைகளுக்கு கொடுக்காமல் தவிர்க்கின்றனர். பாக்ட்டிரியாக்கள்/கிருமிகள்/சிறு பூச்சிகள் மற்றும் பிற மாசுப்பொருள்கள் தண்ணீர் அல்லது மண்ணின் மூலமோ கீரைகளை மாசுப்படுத்துகிறது. எனவே கீரைகளை நன்கு கழுவி சுத்தம் செயயாமல் உணவில் சேர்க்கும்போது வயிற்றுப்போக்கினை ஏற்படுத்துகிறது. எனவே வயிற்றுபோக்கு ஏற்படுவதை தடுக்க அணைத்து கீரைகளையும் சமைப்பதற்கு முன்பு நன்கு தண்ணீரில் கழுவி சுத்தம் செய்ய வேண்டும்


* கீரைகளை நன்கு சமைத்து, மசித்து கீரையிலுள்ள நார் பொருட்களை நீக்கின பின்னரே சிறு குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டும். கீரையில் உள்ள சத்துக்கள் பயனுள்ளதாக அமைய, நீண்ட நேரம் சமைப்பதை தவிர்க்க வேண்டும். அதே நேரத்தில் கீரைகளை சமைக்க பயன்படுத்தும் தண்ணீரை கொட்டி விடக் கூடாது. கீரைகளை சமைக்கும் பாத்திரங்களை சமைக்கும்போது மூடிவைப்பதில் கவனம் செலுத்த வேண்டும். கீரைகளை வெய்யிலில் உளர்த்தக் கூடாது. அப்படி செய்தால் அவற்றில் உள்ள கராட்டீன்கள் வீனாகி விடும். கீரைகளை பொறிப்பதையும் தவிர்க்க வேண்டும்


* கீரைகளில் உள்ள சத்துக்களின் மதிப்பினை அவற்றின் விலைகளை கொண்டு நிர்ணயிக்க முடியாது. சில கீரைகள் மலிவான விலையில் கிடைப்பதனால், அவற்றில் உள்ள சத்துக்களின் மதிப்பை குறைத்து மதிப்பிட செய்து அவற்றை ஒதுப்கி விடுகின்றனர். எனவே சில கீரைகள் (உம், முருங்கை) விலை மலிந்து காணப்பட்டாலும், அவற்றில் உள்ள சத்துக்களின் மதிப்பு மிக அதிகம் மற்றும் அவை அனைவருக்கும் தேவை


* கீரை வளர்ப்பினை அவசியம் ஊக்கப்படுத்த வேண்டும். அப்படி செய்வதன் மூலம், ஆண்டு முழுவதும் கீரைகள் கிடைக்கும் நிலை உருவாகும். வீட்டுத் தோட்டங்கள், வீட்டின் மாடியில் தோட்டங்கள் ஏற்படுத்துவது, பள்ளி தோட்டங்கள் போன்றவைகளில் கீரைகளை வளர்த்து பயன் பெறலாம். வீட்டின் பின்புறத்தில் முருங்கை மரம், அகத்தி கீரை செடிகள் போன்றவற்றை வளர்ப்பதின் மூலம் மரங்களிலிருந்து கிடைக்கும் கீரைகளை மிக சுலபமாக மற்றும் தொடர்ந்து பெற்றுக்கொள்ளலாம்

தகவல் : தேசிய ஊட்டச்சத்து மையம், ஐதராபாத் -500007 இந்திய


தமிழீஷில் ஓட்டுப் போட இங்கே க்ளிக்குங்கள்

Thursday, July 23, 2009

துவைத்துக் காயப் போடப் பட்ட பெண்

பனிரெண்டு வய்து சின்னப் பெண் அவர். துவைத்துக் காயப் போட்டது போல இருந்தார். அவரை அவரது தாயார் மற்றும் சில உறவினர்கள் மருத்துவமனைக்கு அழைத்து வந்திருந்தனர்.

சார், காலைல பாப்பா மயக்கம் போட்டிருச்சு. உறவினர் தான் சொன்னார். தாயார் கேவிக் கேவி அழுது கொண்டிருந்தார்.

மருத்துவர் பார்த்தார். வெறும் மயக்கம் மாதிரி தெரியவில்லை. தேவையான முதலுதவி செய்யப் பட்டன.ஆய்வகப் பரிசோதனைகளும் மருத்துவ பரிசோதனையும் செய்யப் பட்டன, அந்தப் பெண் ரத்தச் சோகையால் பாதிக்கப் பட்டிருந்தது கண்டறியப் பட்டது. மேலும் பலராலும் அடிக்கப் பட்டிருந்தது கண்டறியப் பட்டது.

மருத்துவர் சொன்னார். அம்மா, பாப்பாவை நெரயாப் பேர் அடிச்ச மாதிரி தெரியுது. இது போலீஸ் கேஸ் ஆகும். காலைலிருந்து என்ன நடந்ததுன்னு சொன்னீங்கன்னா, எங்களுக்கு உதவியாக இருக்கும்.

பெண்ணின் தாயார். இன்னும் கேவி கேவி அழ ஆரம்பித்தார்.

அந்த நேரத்தில் மூத்த மருத்துவரும் வந்து சேர்ந்தார்.

அவரும் குழந்தை மருத்துவரின் கருத்தினை ஆமோதித்தார்.

சார். பாப்பாவுக்கு பேய் பிடிச்சிருந்தது. பேய் விரட்டிட்டோம். நேத்தும் அந்த குணம் லேசா தெரிஞ்சது. அதனால எங்கவீட்டு பொம்பளங்க செருப்பால அடிச்சிருக்காங்க. அவங்கப்பன் செத்தப்ப் அபுடிச்ச போய் நேத்துத்தான் விலகியிடுக்கு. கஷ்டப் பட்டு விரட்டியிருக்கோம்.

நீங்க ஒண்ணுமே பண்ணாம சும்மா ரத்தம் எடுக்கறேன். படம் எடுக்கறேண்ணு போக்கு காட்டீட்டு இருக்கீங்க. குளுக்கோஸ் போட்டா தெம்பா இருக்கும்னும் பெரியவங்க சொன்னாங்க. அதுக்குத்தான் வந்தாம். நீங்க எண்ணடா


சொரக்காய்க்கு உப்பில்லேன்னு கதை பேசிட்டு இருக்கீங்க.

ஒரு இளம் பெரியமனிதர் ஆக்ரோசமாக பேசி முடித்தார். ஒரு கட்சியின் வேட்டி மற்றும் துண்டு அணிந்திருந்தார்.

இங்க பாருப்பா... பொண்ணுக்கு ரத்தச் சோகை இருக்கு. தவிரவும் தந்தை இழந்த சோகம் வேறு. அதனால் மனஅமைதி இன்மை டெப்ரெஷன் ஆகியவை வந்திருக்கு. சரியான முறையில் வைத்தியம் பார்த்தால் சரியாகிவிடும். நீங்க இப்படியெல்லாம் பண்ணிட்டு இருந்தால் உயிருக்கு ஆபத்தாக மாறிவிடும்

முதிய மருத்துவர் மிக நீண்ட நேரம் பேசினார்.

பேச்சின் முடிவில் அவர் சொன்னதை பெரும்பாலோனோர் ஏற்றுக் கொண்டது போல இருந்தது. அந்த பெண்ணிற்கு ரத்தம் ஏற்றப்பட்ட்து. மன நல ஆலோசனையும் சிகிச்சையும் வழங்கப் பட்டது.

சார் சின்னப் பொண்ணப் போட்டு இப்படி அடிச்சிருக்காங்க. நீங்க அமைதியா பேசிட்டு இருக்கீங்க ஏ.ஆர். எண்ட்ரி போட்டுவிட்டு போலீசுக்கு தகவல் கொடுங்க சார். இதெல்லாம் அவங்க விசாரிச்சாத்தான் சரியா வரும்.

இளம் மருத்துவர். உணர்ச்சி வசப் பட்டு பேசிக் கொண்டிருந்தார்.

யாரு மேலப்ப்பா புகார் கொடுக்க முடியும். அந்தப் பொண்ணுக்கு ஆதரவு இவங்கதான். இவங்களுக்கு தண்டனை வாங்கிக் கொடுத்துட்டா அந்த பெண் அனாதரவா மாறிடும்ப்பா . பாவம் அறியா ஜனங்க.., நாமதான் அவங்களுக்கு புரிய வைக்க வேண்டும்.
முதிய மருத்துவர் அதற்கும் ஒரு பதில் கொடுத்தார்.

அந்தப் பெண்ணுக்கு சில நாள் இடைவெளியில் மீண்டும் ரத்தம் போடப் பட்டது. சிலவாரங்கள் உள்நோயாளியாக இருந்து சிகிச்சை பெற்று குணமடைந்து வீட்டிற்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

சில மாதங்கள் கழித்து





அந்தப் பெண் அதே உடல் போல அரை மயக்க நிலையில் உடலெல்லாம காயமான நிலையில் அழைத்துவரப் பட்டார்.

ஏம்ப்பா அன்னைக்கு அவ்வளவு தூரம் சொல்லி சரி பண்ணி அனுப்புனா திரும்பவும் அப்படியே பண்ணி கூட்டிட்டு வந்திருக்கீங்களே..,

மருத்துவர் வருத்தத்துடன் கேட்டார்.

நீங்க சொன்னபடித்தான் டாக்டர் செஞ்சிருக்கோம்.

உடம்புல ரத்தமே இல்லை அப்படின்னும் ரத்தமெல்லாம் போட்டுவிட்டீங்க திரும்பவும் ரத்தச் சோகை ஆகிப்போச்சு.

(வீட்டுக்கு அனுப்பிய சில நாட்கள் கழித்து தொடர் சிகிச்சையை நிறுத்தி அவர்களாகவே நிறுத்தி விட்டிருந்தனர்)

நீங்கதான் ஒழுங்கா வைத்தியம் பார்க்கணும்னு சொன்னீங்க. அதுதான் கேரளா கூட்டிட்டு போய் அங்கிருக்கிற வைத்தியரிடம்(மாந்தீரகரிடம்) போய் பார்த்தோம். உடம்பில மூணு ரத்த காட்டேரி இருந்ததாம். அவரே சொன்னார். அம்பதாயிரம் செலவு பண்ணி அந்த ரத்தக் காட்டேரியெல்லாம் எடுத்துட்டோம். இப்ப நீங்க ரத்தம் போடுங்க டாக்டர் புள்ள நல்லாயிடும்.

-----------------------------------------------------------------------------

தமிழீஷில் ஓட்டுப் போட இங்கு அழுத்துங்கள்

Monday, July 20, 2009

முகப் பரு

முகப்பரு எதனால் உண்டாகிறது ?

ஒவ்வொரு முடி அடிப்பகுதியும் (hair follicle) 'செபம்' (sebum) எனப்படும் எண்ணெய் பசையுள்ள பொருளைச் சுரக்கும் சுரப்பியுடன் உள்ளது
பருவ வயது வந்ததும் செபம் உற்பத்தி அதிகரிக்கும். மயிர்கால்களும், செபத்தாலும், தோல் செல்களாலும் நிரப்பப்படும். இது white head ஆக மாறும்
தடுக்கப்பட்ட பை திறந்ததும் தடுப்பு 'black head' ஆகக் காணப்படும்.
முடிப்பைகளிலுள்ள பேக்டீரியாக்கள் ஒருவித ரசாயணத்தை வெளியேற்றும். அது செபத்துடன் கலந்து அதை அழிக்கும். விளைவாக, சிவப்பான, எரிச்சலுடன் கூடிய முகப்பருக்கள் ஏற்படுகின்றன.
சில தீவிர சமயங்களில் கீழ் உண்டாகி, பெரும் வலியுடன் கூடிய வீக்கங்களாகும்.
இறுதி விளைவாக ஆழ்ந்த குழிகளோடு அல்லது கடித்த தடிப்புகளுடன் கூடிய வடுக்கள் உண்டாகும்.
முகப்பரு என்பது சிவந்த, எரிச்சலோடு கூடிய வடுக்களோடு அல்லது எரிச்சலற்ற கரியமுகடு (comedone) களோடு கூடியதாகும்.

யாருக்கு முகப்பருக்கள் வரும் ?
முகப் பருக்கள் 13-19 (டீன்ஏஜர்) வயதுக்குடப்பட்ட வாலிப வயதினரைப் பாதிக்கும். 12-18 வயதுட்குட்பட்ட வாலிப வயதினர்களில் 85%, ஏதோ ஒரு வித வகையில் முகப்பருக்களால் பாதிக்கப்ப படுகின்றனர்.
முகப்பருக்கள் இருபதுகளிலும், முப்பதுகளிலும் கூட தோன்றத் தொடங்கலாம். 10% முதல் 20% பெரியவர்கள் கூட இதனால் பாதிக்கப்படுகின்றனர்.
முகப்பருக்கள், முகத்திலும், மார்பிலும், முதுகிலும் வரும்.

எந்தக் காரணக் கூறுகள் முகப்பருவை மேலும் மோசமாக்கும் ?
தொப்பி போன்ற தலைக் கவசங்கள், முகவாய்கட்டை தோல்பட்டைகள் முதலியவை உராய்ப்பையும், அதன் விளைவாக வெப்பத்தையும் உண்டாக்கி முடிப் பைகளை அடைக்கச்செய்து, முகப்பருக்களைத் திடீரென உண்டாக்கும்.
பசைபோன்ற அழகு சாதனங்கள், எண்ணெய் பாங்கான கூந்தல்பசைமுகப் பருக்களை மேலும் மோசமாக்கும். எனவே தண்ணீர் அடிப்படையான,எண்ணய் இல்லாத அழகு சாதனங்களையே பயன்படுத்துங்கள்.

சாக்லெட்டுக்கள், எண்ணெய் பாங்கான உணவுப்பொருட்கள் முகப்பருக்களை அதிகரிக்கச் செய்யும் என்பதற்கான அறிவியல் பூர்வ சான்றுகள் ஏதுமில்லை. உணவுக் கட்டுபாடுகளேதும் தேவையில்லை.

முகப்பருக்களுக்கு எந்த மருத்துவங்கள் கிடைக்கின்றன ?
கூடிய விரைவில் உங்கள் மருத்துவரைச் சந்தித்துப் பேசுங்கள். உடனடி மருத்துவம் முகப்பருக்களின் வடுக்கள் ஏற்படாவண்ணம் தடுத்து, உங்கள் தோற்றத்தை மேம்படுத்தும்.
துவக்க முகப்பருக்கள், வழக்கமான, தோலின்மேல் பூசும் கிரீம், லோஷன், ஜெல்களுக்கே அடங்கி விடும். உதாரணமாக துவக்க நிலையிலுள்ள முகப்பருக்கள், வழக்கமான, தோலின்மேல் பூசப்படும், 'பெஞ்சால் பெராக்ஸைடு ஜெல், முகப்பரு லோஷன், ஆண்ட்டிபயாடிக் லோஷன் 'ஏ' விட்டமின் தரும் ஜெல்' போன்ற கீரிம்கள், லோஷன்கள், ஜெல்களுக்கு அடங்கிவிடும். இந்தத் தயாரிப்புகள் தோலைச் செம்மை நிறமாகவும், ஈரப் பசையற்றதாகவும், மென்மையாக்கும். ஆனால் இந்தப் பலன்கள் தற்காலிகமானவை.
மிகவும் தீவிர நிலையிலுள்ள முகப்பருக்களைப் போக்க, டெட்ராசைக்ளின், எரித்ரோமைசின் போன்ற மருந்து வில்லைகள் உதவும். இந்த ஆண்ட்டி பயாடிக்குகள் மிகவும் பாதுகாப்பானவை. இவற்றைக் குறைந்தது 4-6 மாதங்கள் பயன்படுத்த வேண்டியிருக்கும்.

ஆண்ட்டி பயாடிக்குகளுக்கும் அடிபணியாத மிகவும் மோசமான முகப்பருக்களுக்கு ஐசோட்ரிடிநைன் எனும் மருந்து வில்லைகள் தரப்படலாம்.
அமைதியாக இருங்கள். எல்லாவித மருத்துவங்களும் சிறிது விளைவுகளைக் காட்ட குறைந்தது 4-6 வாரங்கள் பிடிக்கும். எனவே மருத்துவத்தை இடையிலேயே மனமுடைந்து நிறுத்தி விடாமல் தொடருங்கள்.

நன்றி:சங்கி மருத்துவமனை

தமிழீஷில் வாக்களிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

Saturday, July 4, 2009

ஏன் டாக்டர் இப்படி செஞ்சீங்க?

அந்த ஆரம்ப சுகாதார நிலையத்தின் பிரசவ அறை கொஞ்சம் அதிகப் படியான பரபரப்பாகவே இருந்தது. பிரசவ அறையின் உள்ளே சென்ற மருத்துவரும் செவிலியரும் மிக அதிகப் படியான பரபரப்புடனேயே இருந்தனர். பிரசவத்திற்காக அனுமதிக்கப் பட்டிருந்த பெண்ணின் உறவுக்காரப் பெண்ணும் பிரசவ அறையில் அனுமதிக்கப் பட்டிருந்தார்.( அவர்ப் பற்றித் தெரிந்து கொள்ள இந்தச் சுட்டியைத் தட்டுங்கள்.) உறவுக் காரப் பெண்ணுக்கு ஓரளவு என்ன பிரச்சனை என்று தெரிந்துவிட்டது.

குழந்தை பிறக்க நேரமாகுமாம். என்று சொல்லி விட்டு காரணத்தையும் உறவுப் பெண்மணி வெளியே இருப்பவர்களிடம் வந்து சொல்லி விட்டார்.

கடவுளே......,

உறவினர்கள் கடும் அதிர்ச்சியுடன் தத்தம் கடவுள்களை வேண்டத் தொடங்கிவிட்டனர். அருகில் நடந்து கொண்டிருந்த மருத்துவ முகாமிற்கு வந்திருந்த சிசு நல சிறப்பு மருத்துவரையும் அழைத்தனர். அவரும் வந்திருந்து அவருக்கான அறையில் காத்திருந்தார்.

கொஞ்ச நேர போராட்டத்திற்குப் பிறகு குழந்தை பிறந்தது


மருத்துவர் மகிழ்ச்சியுடன் வெளியே வந்தார். ஆண் குழந்தை பிறந்திருக்கிறது. தாய் சேய் இருவரும் மிக நலமாக இருக்கிறார்கள் என்பதைச் சொல்லிவிட்டு அருகிலிருந்த நாற்காலியில் மிக சோர்வாக அமர்ந்தார். பின்னே.. ஏறக்குறைய ஒரு நேரமே போராடியல்லவா, சுகப் பிரசவம் ஆக்கியிருக்கிறார்


தாயின் உறவுக்காரப் பெண்மணி முன்பகுதிக்கு வந்தார். மிகவும் முதிர்ந்த பெண்மணி அவர். அநேகமாக அந்த சுற்றுவட்டாரத்திலேயே மிகவும் வயதானவரான தோற்றத்துடன் இருந்தார்.

ஏன் டாக்டரம்மா இப்படி செஞ்சீங்க...,

மருத்துவர் சற்றும் புரியாமல் பார்த்தார்.

குழந்தை இரண்டுமுறை கொடி சுத்தியும் மாலையோடும் பிறந்திருக்கு.., அதப் போய் காப்பாத்தி இருக்கீங்க...

இருக்கற எல்லோரும் ரொம்ப கஷ்டப் படுவாங்க பாருங்க...

நீங்க ஒன்னும் பண்ணாமலே இருந்திருக்கலாம்..

==========================================

நல்லவேளை குழந்தையின் தாயும் தந்தையும் மகிழ்ச்சியுடன் இருந்தனர். இல்லையென்றால் பிரசவம் பார்த்த மருத்துவர் வாழ்க்கையே வெறுத்துப் போயிருப்பார்.

தமிழீஷில் ஓட்டுப் போட இங்கே சொடுக்குங்கள்