Monday, March 29, 2010

குழந்தையும் குலதெய்வமும்

ஒரு சுபயோக சுபதினத்தில் முருகனின் பொற்பாதத்தில் அமைந்துள்ள அ.ஆ.சு.நி.இல் பிறந்த ஒரு சுட்டிக்குழந்தையின் முதல் நாள் வாழ்க்கையிது. கலாச்சாரமும் தெய்வபக்தியும் நிறைந்த தந்தையும், பதிபக்தி நிறைந்த தாயும், மண்ணின் மணம் நிறைந்த தாத்தா, பாட்டியும் வாய்க்கப்பட்டவன் இவன்.

குழந்தைபிறந்த உடன் தாயின் அருகில் குழந்தையை கிடத்திவிட்டு செவிலியர் அடுத்த பிணியாளரை பார்க்கப் போன சைக்கிள் சந்தில் நடந்த கதை.
ஐந்து நிமிடம் கழித்து வந்த செவிலியர் தாயை பரிசோதித்தார். அடுத்து சேயை.............. ஐயோ, சேயைக்காணவில்லை.

செய்தி பரபரப்பானது. ஒரு கிராமத்தில், ஆஸ்பத்திரியில் அதுவும் அரசு ஆஸ்பத்திரியில் குழந்தை காணவில்லை என்றால் நினைத்துப்பாருங்கள். அபூர்வ சகோதரர்கள் மனோரமா ஆச்சியிலிருந்து சூரிய வம்சம் சரத்குமார் வரை அனைவரும் ஆஜர்.

பலபல வதந்திகள். ஆஸ்பத்திரி ஊழியர் விற்றுவிட்டார் என்று ஒரு கூட்டம். பில்லி சூனியக் காரர்கள் எடுத்துச் சென்றுவிட்டனர் என்று ஒரு கூட்டம்.ஆண்குழந்தை அல்லவா! பங்காளிகள் சண்டையாம்.

அ.ஆ.சு.நி.ஊழியர்கள் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு உட்கார்ந்து இருக்கின்றார்கள். போலிசுக்கு தகவல் சென்றது. விசாரணையும் தொடர்ந்தது.
நமது மனோரமா பாட்டி மீண்டும் டென்சன் ஏற்றினார். அய்யய்யோ, அய்யோ, இப்பத்தான் வந்துட்டுப்போனானே, அப்பக்காரன், அவன் திரும்பி வந்து கேட்டால் நான் என்ன பதில் சொல்வேன். அய்யய்யோ, அய்யோ.

இப்போது பரபரப்பு பரபரபரபரப்பானது. குழந்தையின் தாத்தா பேச ஆரம்பித்தார். மாப்பிள்ளை வந்திட்டாரா அவர கூப்பிடுங்கப்பா, எங்க போனார் இந்த நேரத்தில. மாப்பிள்ளை(குழந்தையின் தந்தை)யின் நண்பர்களுக்கு தகவல் போனது.

சல்லடை போட்டு தேட ஆரம்பித்து கூட்டி வந்தனர்.
அவர் வந்தார் அவருடைய குழந்தையோடு.. முழு போதையில் இருந்த அவர் கூறினார். வாரிசு வந்திரிச்சில்ல..... குலதெய்வம் கோவிலுக்குப் போய்ட்டு வந்தோம்..............................பச்சிளம் குழந்தையை தூக்கிக்கொண்டு

Sunday, March 7, 2010

மார்பகப் புற்றுநோய் பற்றி விவரங்கள் -1


மார்பகம் என்றால் என்ன?

ஒவ்வொரு மார்பகமும் லோப்ஸ் (lobes) எனப்படும் 6 முதல் 9 அடுக்கடுக்கான மடிப்பு சதைகளானது. ஒவ்வொரு சதையும் லோப்யூல்ஸ் (lobules) எனப்படும் பல சிறு இதழ்களைக் கொண்டு பாலைச் சுரக்கும் சில டஜன் குமிழ்களாக முடியும். இத்தகைய மடிப்புத்தொங்கு சதைகள், சதைகள், சிறு இதழ்கள் முனைப் பகுதி குமிழ்கள் அனைத்தையும் மெல்லிய இழை நாளங்கள் ஒன்றிணைக்கின்றன. இந்த இழை நாளங்கள் மார்பகத்தின் நடுவிலுள்ள ஆரியோலா (areole) எனப்படும் கரும் வட்டத்தின் நடுவிலுள்ள முலைக்காம்பில் ஒன்றிணைகின்றன. சிறு இதழ்களுக்கும் நாளங்களுக்கும் இடையேயுள்ள இடைப்பகுதியைக் கொழுப்புப் பொருட்கள் நிறைக்கின்றன. மார்ப்கத்தில் சதைப்பற்று ஏதும் இருக்காது. ஆனால் மார்ப்கத்தின் அடிப்பகுதியில் சதைப்பற்று இருந்து விலா எலும்புகளை மறைக்கின்றன.


ஒவ்வொரு மார்பகமும் இரத்த நாளங்களையும் லிம்ப் (lymph) எனப்படும் வர்ணமற்ற நிணநீர் திரவத்தை எடுத்துச் செல்லும் நாளங்களையும் கொண்டுள்ளது. இந்த லிம்ப் நாளங்கள் அவரை விதை வடிவிலுள்ள லிம்ப் நோட்ஸ் (Nodes )எனப்படும் முடிச்சுகளில் செல்லுகின்றன. இத்தகைய லிம்ப் நோட்ஸ்கள் கூட்டங் கூட்டமாக அக்குகளின் மேழேயும் தோற்பட்டை எலும்புகளின் மேலும் மார்ப்கங்களிலும் உள்ளன. இத்தகைய லிம்ப் நோட்ஸ் உடலின் மற்ற பல பாகங்களிலும் உள்ளன.


மார்பக புற்று நோய் என்றால் என்ன?

மார்பக புற்று நோய் என்றால், மார்பகத்தில் உள்ள சில செல்கள் அளவுக்கதிகமாக வளர்வதாகும். புற்று நோய் செல்கள் மற்ற செல்களைக் காட்டிலும் பல வகைகளில் வேறுபட்டிருக்கும். அவை வேகமாகப் பிரிந்து வளர்ந்து சுற்றிலுமுள்ள திசுக்களை
ஆக்கிரமிக்கும்

மார்பக புற்று நோயின் அறிகுறிகள் என்ன?

துவக்க நிலை மார்பக புற்றுநோய் சாதாரணமாக வலியை உண்டாக்காது. மார்பக புற்றுநோய் வளரத் தொடங்கும் போது எந்தவித அடையாளமும் அறிகுறியும் இருக்காது. புற்றுநோய் வளர வளர கீழ்க்கண்ட அறிகுறிகள் ஏற்படும்.

1, வீக்கம் அல்லது மார்பகம் அல்லது அக்குள் பகுதி தடிக்கும்.



2. மார்பகத்தின் அளவும் வடிவும் மாறுபடும்



3. முலைக் காம்பிலிருந்த இரத்தமோ வேறு திரவமோ கசியும்.


4. மார்பகத்தின் தோல், கருப்பு வளையம், முலைக்காம்பு முதலியவற்றின் வண்ணம் மாறும். (குழிவிழுதல், மடிப்பு விழுதல், சொரசொரத்தல்)


5. சமீப காலமாக முலைக்காம்பு உள்ளிழுத்துக் கொள்ளும்.


மேற்கண்ட மாறுதல்களில் ஏதேனும் தென்பட்டால் உடஉனே உங்கள் மருத்துவரை அணுகுங்கள்.
எவ்வாறு மார்பகப் புற்றுநோய் கண்டறியப் படுகிறது?


மார்பகப் புற்றுநோயைக் கீழ்க்கண்ட முறைகளில் கண்டறியலாம்.



மருத்துவ வரலாறு:-
உங்களுக்கு மார்பக புற்றுநோய் உள்ளதா என்பதைக் கண்டறிய மருத்துவ வரலாறு உதவும். உங்கள் குடும்பத்தில் யாருக்காவது மார்பகப் புற்றுநோய் இருந்ததா? இருக்கிறதா என்று கேட்டறிவார். உங்களுடைய மாத விலக்கு விவரங்கள், உங்கள் மார்பகக் கட்டியின் புறத் தன்மைகள் குறித்து உங்களிடம் கேட்பார்.


மார்பகக் கட்டியைத் தொட்டுப் பார்த்தல்:-
உங்கள் மருத்துவர் உங்கள் மார்பகத்தைத் தொட்டுப் பரிசீலனை செய்து மார்பகக் கட்டியின் இருப்பிடம், அளவு, மார்பக லிம்ப் மற்றும் லிம்ப நோட்ஸ்களின் பொதுத்தன்மையைக் கண்டறிவார்.



மம்மோ கிராம் (mammo gram)
உங்கள் மருத்துவர் மம்மோகிராம் சோதனையைச் செய்து கொள்ளுமாறு உங்களிடம் கூறலாம். மார்பகக் கட்டிகளை, அதிலும் மிகச் சிறியவற்றைக் கண்டு பிடிக்க உதவும் ஒருவகை பயன்மிக்க மார்பகத்தை எக்ஸ்ரே பிடிக்கும் தொழில் நுட்பமாகும் இது. ஒரு தட்டு போன்ற கருவியால் உங்கள் மார்பகத்தைத் தட்டையாக அழுத்தி மார்பகத்தின் தெள்ளிய வடிவத்தை அறிய முயலப்படும். உங்கள் மார்பகக் கட்டியின் முக்கிய விவரங்களை மம்மோகிராம் உங்கள் மருத்துவருக்கு அளிக்கம். மம்மோ கிராமில் ஏதேனும் ஒரு பகுதியில் ஐயம் உண்டாக்கினாலும், தெளிவாக இல்லாவிட்டாலும் மற்றொரு எக்ஸ்-ரே எடுக்க வேண்டியிருக்கும்.


அதிரொலி (Ultra sound)
அதிர்ரொலி என்பது அதிக அதிர்வுடன் கூடிய ஒலியலைகளை மார்ப்கத்தின் மீது செலுத்தி மார்பகத்தின் கட்டி கெட்டியாக (திடமாக) உள்ளதா அல்லது திரவம் நிறைந்துள்ளதா என்று கண்டறியலாம். மம்மோ கிராபியுடனும் இந்தப் பரிசீலனையைச் செய்யலாம்.



நீடில் பயோப்சி (Needle Biopsy)
உங்கள் மருத்துவர் ஒரு மெல்லிய ஊசியால் உங்கள் மார்பகக் கட்டியிலிருந்து ஒரு சில செல்களை எடுத்து நுண்ணோக்கியில் பரிசீலித்து மார்பக புற்றுநோய் உள்ளதா இல்லையா என்று கண்டறிவார். சில சமயங்களில் ஒரு பெரிய ஊசியை கெட்டியான கட்டியின் மைய செல்களை எடுக்கப் பயன் படுத்துவார்.
மார்பகப் புற்றுநோய் பற்றி விவரங்கள்-2


நன்றி:- CHANGI GENERAL HOSPITAL




இது மீள் பதிவு, மிக ஆரம்ப கட்டத்தில் நான் இட்டது.

தமிழீஷில் இன்றுதான் சேர்த்துள்ளேன். எனவே தமிழீஷில் வாக்களிக்க இங்கு அழுத்துங்கள். 


தமிழ்மணத்தில் வாக்களிக்க இங்கு அழுத்துங்கள்.

Tuesday, March 2, 2010

நீங்கள் கடைசியாக எப்பொழுது ஒரு ஆரம்ப சுகாதார நிலையம் சென்றீர்கள்

சென்று பல வருடங்கள் ஆகிவிட்டது என்றால் உங்களுக்கு ஆச்சரியம் காத்திருக்கிறது

சில ஆரம்ப சுகாதார நிலையங்களின் தளங்களை பார்க்கவும்

தோகமலை ஆரம்ப சுகாதார நிலையம்
**
பெருங்கட்டூர் ஆரம்ப சுகாதார நிலையம்
**
அ.ஆ.சுகாதார நிலையம் அமரபூண்டி

--

ஆரம்ப சுகாதார நிலையங்களில் சிசேரியன் கூட நடைபெறுகிறது



பத்திரிகை செய்தி 1 : மதுரை
**
பத்திரிகை செய்தி 1 : திருச்சி