எக்ஸ்பிரஸ் இளமதி
எக்ஸ்பிரஸ் இளமதி. எந்த வயதில் அந்தப் பெயர் அவளுக்கு வந்தது எப்படி என்று அவளுக்கே தெரியாது. இன்று அந்த மருத்துவமனைக்கு மகப்பேறு மருத்துவராக வந்து பணியில் அமர்ந்துவிட்டாள்ர்.
அவளுக்கு வேகம் என்பது இயல்பாக அமைந்த விஷயம். பள்ளியில் படிக்கும்போதே மிக வேகமாக ஓடுவாள். கல்லூரி காலத்தில் கூட கலப்புத் தொடர் ஓட்டத்தில் உடன் ஓடிய ஆண்களைவிட படுவேகத்தில் ஓடி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தவள் அவள். பள்ளியில் அவள் படிக்கும் வேகத்திற்கு டபுள் புரமோசம் கொடுக்கலாம் என்று கூட சொல்லிக் கொண்டிருந்தார்கள். ஆனால் ஏனோ கொடுக்கப் படவில்லை. அவளது தந்தைதான் அந்த வயதொத்த குழந்தைகளுடன் படிக்கட்டும் என்று கூறிவிட்டதாக சொல்லுவார்கள்.
அவளது பாட்டி கூட எக்ஸ்பிரஸ் என்றுதான் கூப்பிடுவார்.
இன்று மருத்துவரான பின்பு கூட அந்த நிலை நீடிக்கிறது. மற்றவர்கள் ஒரு அறுவைசிகிச்சை செய்யும் நேரத்தில் இவர் இரண்டு அறுவை செய்து விடுவார். குடும்ப நல சிகிச்சைகள் எல்லாம். மற்றவர் ஒன்று செய்யும் நேரத்தில் இவர் ஐந்து பேர் வரை செய்வார். படுவேகம்.
எம்.பி.பிஎஸ் சேரும்போது கூட பலரும் இம்ப்ப்ரூவ் மெண்ட் செய்து உள்ளே நுழைந்த போது இவர் நேரடியாக தேர்வு செய்யப் பட்டார். இவர் எம்.பி.பி.எஸ் படித்த கால கட்டத்தில் அரசுத்துறைக்கு மருத்துவர் தேர்வு என்பதே கிடையாது. ஆனால் இவள் முடித்த கால கட்டத்தில் நூறு பேரை தேர்வு செய்தார்கள். அதில் அவளும் ஒருத்தி. (கடந்த சில ஆண்டுகளில் நாலாயிரம் மருத்துவர்களுக்கு மேல் அரசுப் பணியில் நியமணம் செய்யப் பட்டு இருக்கிறார்கள். ஆனால் அதுவும் ஒரு காலம்) மிக குறைந்த வயதில் அந்த ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவராக அமைந்த போது அவரது வேகத்தை கண்டு அவரது நண்பர் கூட்டமே அதிர்ந்தது.
மூன்றாண்டுகள் அங்கே பணி செய்த போது அவரது வேகம் கண்டு துறை சார்ந்தவர்களும் சரி. பொது மக்களும் சரி அதிர்ந்து தான் போனார்கள். பேருந்து நிலையத்திலிருந்து மிக வேகமாக நடந்து செல்வார். புற நோயாளிகள் பிரிவு, சிறப்பு மருத்துவம் போன்ற அனைத்தையும் மிக வேகமாகச் செய்வார். களப்பணிகளிலும் அவர் வந்தால் அனல் பறக்கும்.
கட்டாய கிராமப் புற பணிக்காலமாக மூன்று ஆண்டுகளை முடித்த உடனயே அவருக்கு மேல்படிப்பில் இடம் கிடைத்தது. இவ்வளவு தூரம் கிராமத்தில் கடும் உழைப்பில் நேரம் செலுத்தி இருந்தவருக்கு தேர்வில் முக்கிய இடம் கிடைத்ததில் எல்லோருமே அசந்துதான் போனார்கள்.
அந்த எக்ஸ்பிரஸ் இளமதிதான் இன்று அதே ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு மகப்பேறு மருத்துவராக வந்திருக்கிறார். அவர் வந்த பின் அந்த நிலையத்தில் பிரசவங்கள் அதிகரித்துக் கொண்டே இருந்தன. தினமும் இரண்டு அறுவை சிகிச்சை யாவது செய்துவிடுவார். பெரும்பாலும் சுகப்பிரசவம்தான் முயற்சி செய்வார். இருந்தாலும் கூட நிறைய பிரசவங்கள் அவரது மருத்துவ மனைநோக்கி படையெடுத்து வருவதால் அவ்வாறு செய்துவந்தார்.எல்லைதாண்டி அடுத்த மாவட்டத்தில் இருந்த அருகில் உள்ள கிராமங்களிலிருந்து கூட அவர் பணி புரிந்த அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு வந்து கொண்டிருந்தார்கள். அவரது தோழிகள் கூட அவரை கேலி செய்வதுண்டு. இப்படியே போனால் உன்ன ஆபரேசன் டாக்டர்ன்னே முடிவு செய்து விடுவார்கள்.
ஆனால் அதற்கெல்லாம் அவள் அசந்ததில்லை.
அவள் மகப்பேறு மருத்துவம் முடித்த உடனயே அவரது தந்தை அவருக்கு மாப்பிள்ளை பார்க்க ஆரம்பித்தார். அவரது ஜாதகம் கொடுக்கும்போதே அவரது தந்தையை பார்த்து அவரது பாட்டி சொன்னார். எம்ப்பேத்தி எக்ஸ்பிரஸ் இளமதிடா.., அவளுக்கு எக்ஸ்பிரஸ் வேகத்தில் எல்லாம் நடக்கும். பாட்டி சொன்னது உண்மைதான் சில மாதங்களிலேயே அவளுக்கு திருமணம் நிச்சயமானது. அடுத்த மாதத்தில் அவருக்குத் திருமணம்.
அந்த நிலையில்தான் அன்று மகப்பேறு பிரிவில் பரிசோதனைகள் செய்து கொண்டிருந்தார். அப்போது குழந்தை போன்ற முகத்துடன் ஒரு பெண்ணைப்பார்த்தார். எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கே.., அவளது பெயர், ஊர் மற்றும் பரிசோதனைகள் முடித்துவிட்டு அவளைப் பற்றி விசாரிக்க ஆரம்பித்தாள். நீ சங்கீதாவுக்குச் சொந்தமா? பொதுவாகவே மருத்துவரை மிக மரியாதையோடு பார்க்கும் ஊர் அது. அதுவும் மிகச் சிறிய பெண்ணாக இருந்ததால் அந்தப் பெண்ணுக்கு பயத்திலோ, மரியாதையாலோ பேசவே தோன்றவில்லை. ஆமாம் என்பது போல தலையாட்டினாள்.. உங்க அக்காவா.., என்கிருக்கா? கூட வந்திருக்காளா...
படிக்கும்போது நாங்கெல்லாம் ஒரே கோஷ்டி. எனக்கு நிறைய கோலம் போட சொல்லிக் கொடுத்தவள் அவள்தான். மிகவும் மகிழ்ச்சியாக சொல்லிக் கொண்டிருந்தாள். கல்லூரியில் பல கோலப் போட்டிகளில் பரிசுகள் வாங்கியது நினைவுக்கு வந்தது.
மருத்துவரே விசாரித்ததால் அந்த பெண்மணியை மருத்துவர் பரிசோதனை அறைக்கு உள்ளே அனுமதித்தார்கள். அந்த சங்கீதா வந்தார்.
அம்மா நல்லாயிருக்கீங்களா? கொஞ்சம் மரியாதை , கொஞ்சம் பயம், கொஞ்சம் நெருக்கம், கொஞ்சம் கூச்சத்துடன் அந்த பெண்மணி மருத்துவரை விசாரித்தார்.
எம்பொண்ணுதாம்மா.., டவுன்ல கட்டி கொடுத்திருந்தது. தலைப்பிரசவத்துக்கு நம்ம ஊருக்கு கூட்டிட்டு வந்திருக்கோம். நீங்க இருக்கீங்கல்ல.., அதுனால எங்களுக்கு ரொம்பவே தைரியம்மா!
ஏனுங்கம்மா.., நம்ம புள்ளைங்களும் டாக்டருக்குத்தான் படிக்கறாங்களா? சகஜமாக அந்த சங்கீதா அம்மையார் கேட்டார்.
எக்ஸ்பிரஸ் இளமதிக்கு எதுவோ நெஞ்சை அடைப்பது போல இருந்தது.
இது சர்வேசன்500 - நச்னு ஒரு கதை போட்டி 2009க்காக எழுதப்பட்டது
தமிழீஷில் ஓட்டுப் போட இங்கு அழுத்துங்கள்
20 comments:
:-)))
super
:))
Goood One... Nice story :)
இந்த கதையில் இருக்கும் பஞ்ச் புரியவில்லை என்றால் முதல் மதிப்பெண் பெற்றவர்களின் லட்சியம் இடுகையை படிக்கவும்
Good one :)- My best wishes !
வயசாயிடுச்சா?
கதை நல்லாருக்கு
வாழ்த்துக்கள்.
sooper story :)
கலக்கல் தல..
//இந்த கதையில் இருக்கும் பஞ்ச் புரியவில்லை என்றால் முதல் மதிப்பெண் பெற்றவர்களின் லட்சியம் இடுகையை படிக்கவு//
ஹா ஹா, படித்தபின் பன்ச் புரிந்தது.. ஆனால் உங்களுக்கு ஓய்வு வயது என்று எதுவுமில்லையே (அரசுப் பணியை சொல்லவில்லை)
அருமையானமுடிவு...
போல்ட் பன்னாமலே புரியுது. கலக்குறீங்களே தலைவா......
வெற்றிபெற வாழ்த்துகள்
ம்ம்... கதை திருப்பத்தை ரசிக்கும் அதே வேளையில், நீங்கள் சொன்ன செய்தியும் அருமை. வெறும் திருப்பத்துக்காக எழுதிய கதையில்லாமல் இருப்பதே இந்த கதை (நிஜம்) வெற்றி. வாழ்த்துக்கள் வெற்றி பெற.
நல்ல கரு.. வாழ்த்துக்கள்.
கதை போட்டியில் "அடுத்த வீட்டு பெண்" என்ற எனது கதை படிக்க blog-க்கு வருகை தரவும்: http://veeduthirumbal.blogspot.com/.
மோகன் குமார்
நல்லாயிருக்குங்க...
நல்ல நச்...
இந்தக் கதைய நீங்க எழுதின உடனேயே படிச்சுடேன்...
பரிசு பெற வாழ்த்துக்கள்... :-)
எக்ஸ்பிரஸ் இளமதி திருமண விசயத்தில் பாசென்ஜெர் இள(முது)மதி ஆக இருப்பது வருத்தமளிக்கிறது :(
//இந்த கதையில் இருக்கும் பஞ்ச் புரியவில்லை என்றால் முதல் மதிப்பெண் பெற்றவர்களின் லட்சியம் இடுகையை படிக்கவு//
இதை படிதவுடந்தான் பஞ்ச் புரிந்தது.
அருமையான கதை. :)
Post a Comment