Sunday, June 21, 2009

பக்கவிளைவுகள் இல்லாத மருந்துகள்

இப்பொதெல்லாம் அந்த மருந்துக்கு இந்த பக்க விளைவு. இந்த மருந்துக்கு அந்த பக்க விளைவு என்றெல்லாம் பேசுகிறார்கள்.
சில நபர்கள் (?மருத்துவர்கள்) தாங்கள் உபயோகப்படுத்தும் பொருட்களுக்கு (?மருந்துகளுக்கு) எந்தவித பக்க விளைவுகளுமே கிடையாது என்றெல்லாம் பேசுகிறார்கள். இந்த மருந்துகள் இறைவனால் கொடுக்கப்பட்டது. அதை எங்கள் தாத்தாவுக்கு தாத்தா நேரடியாக வாங்கி எங்களுக்கு கொடுத்திருக்கிறார் என்று கூறுகிறார்கள்.
ஒரு மாணவன் என்ற முறையில் எனக்கு சில கேள்விகள் தோன்றுகின்றன.
இயற்கையாக கிடைக்கும் தண்ணீரை 5லிட்டர் குடித்தால் தலைவலி வருமே அதை பக்க விளைவு என்றுதானே கூறுவோம்
உப்பினை அரைகிலோ சாப்பிட முடியுமா? சாப்பிட்டால் என்ன நடக்கும். அது பக்க விளைவு அல்லவா?
பத்து பச்சை மிள்காயை சாப்பிட்டால் வயிறு புண்ணாகுமே அது பக்க விளைவு அல்லவா?
இந்த வாதங்களின் படி பார்த்தால் எல்லா பொருட்களுமே சரியான அளவில் உபயோகப் படுத்தாவிட்டால் கண்டிப்பாக பக்க விளைவுகள் தோன்றியே தீரும். மருந்துகளுக்கு கண்டிப்பாக கற்றறிந்த ஒருவரின் அறிவுரை மிக அவசியம்.
அதுவும் கொடிய வியாதிகளுக்கு எதிராக உபயோகப்படுத்தப் படும் மருந்துகள் இருபுறமும் கூரான கத்திதான்.
எல்லாம் சரிதான். கடவுள் நேரடியாகத் தோன்றி தாத்தாவுக்கு தாத்தாவிடம் கொடுத்த மருந்துக்கும் அதே நிலைதானா ......
இந்த விசயங்களெல்லாம் மதுரை தமிழ்சங்கத்தில் போட்டி வைத்து தருமி பாட்டோடு வந்து விளக்கினால்தான் புரியும்........... >
அது வரை வியாதியின் கஷ்டமா? அல்லது மருந்து தரும் கஷ்டமா?மருத்துவரிடம் ஆலோசித்து எதுவாயிருந்தாலும் அவர் மேல் பாரத்தைப் போட்டுவிட்டு போய்கொண்டே இருப்போம்
'Tamilish'

Read more...

Thursday, June 11, 2009

படிக்கும் போதே தூங்கி விழும் குழந்தைகள்

தமிழக முதல்வர் டாக்டர் கலைஞர் அவர்களின் கண்ணொளி காப்போம் திட்டம் ஜூன்3ம்தேதி தமிழகத்தில் துவங்கப் பட்டது. குழந்தைகள் பரிசோதனை பற்றி மாவட்ட ஆட்சித்தலைவரிடம் வட்டார மருத்துவர் விளக்கும் காட்சி .

















பரிசோதனை செய்வதை மாவட்ட ஆட்சித் தலைவர் பார்வையிடுகிறார்.அருகில் துணை இயக்குநர் சுகாதாரப் பணிகள்
இருக்கிறார்.













பரிசோதனை செய்வதை துணை இயக்குநர் பார்வையிடுகிறார். இந்தப் பரிசோதனைக்கு பரிசோதகர்களுக்கு நவீனக் கருவிகள் புதிதாக வழங்கப் பட்டுள்ளன.















குழந்தைகள் பரிசோதனைக்காக வரிசையாக அமர்ந்திருக்கும் காட்சி














இந்தத் திட்டத்தில் கண்பார்வையில் குறைபாடுகள் உள்ள குழந்தைகளுக்கு அதைச் சரிசெய்வதற்குத் தேவையான சிகிச்சைகள் அரசின் மூலம் இலவசமாகச் செய்யப் படும். தேவையான மருந்துகள் கொடுக்கப் படும். தேவைப் படும் குழந்தைகளுக்கு இலவசமாக கண்ணாடிகள் வழங்கப் படும்








கண்ணாடி அணிவது என்பது பார்வை குறைபாடுகள் காரணமாகவும், வெயியிப் கோரத்தைக் காக்கவும், ஸ்டைலாகத் தோன்றவும் என பல காரணங்களுக்கு அணியப் பட்டாலும் பார்வைக் குறைபாடுகளுக்கு அணிபவர்களுக்குத்தான் அதன் கொடுமை தெரியும்.

பெரிய அளவில் குறைபாடுகள் இருப்பவர்களுக்கு குறைபாடு என்பது எளிதில் கண்டறியப் பட்டுவிடுகிறது. சரி செய்ய எத்தனையோ நவீனக் கருவிகள் வந்து விட்டன.

ஆனாலும் மிகச் சிறிய அளவிலான பார்வைக் குறைபாடுகள் என்பது மிக அதிக அளவில் இருந்து கொண்டுதான் இருக்கிறது. நமது கண்ணில் இருக்கும் லென்சு அமைப்பு நாம் பார்க்கும் காட்சிகளை விளித்திரையில் விழச்செய்து அதை மூளையில் உள்ள நரம்புகள் காட்சிகளாக உணர்த்துகின்றன.

மிகச் சிறிய அளவிலான 0.25 அளவிலான குறைபாடுகளை லென்சினைச் சுற்றியிருக்கும் தசைகள் தனது தகவமைப்பு மூலம் அதைச் சரிசெய்து கொள்ளமுடியும். அந்த நிலையில் உள்ளவர்கள் எளிதாக எந்தவகை எழுத்துக்களையும் படிக்க முடியும். ஆனால் லென்சு அமைப்பு விரைவில் சோர்வடையும் சூழல் ஏற்படும். எனவே தூக்கத்தினை தழுவுவதற்கான வாய்ப்பு ஏற்படுகிறது.

படிக்கும்போது தூக்கம் வந்துவிடுவதால் அந்த மாணவனின் படிக்கும் திறன் மற்றும் மதிப்பெண்கள் குறைய ஆரம்பிக்க நேரிடுகிறது. இதனைத் தவிர்க்கும் பொருட்டு அந்த அந்தப் பள்ளி ஆசிரியர்களுக்கும் தொடர் பரிசோதனைகள் மற்றும் பார்வை குறைபாடு பற்றிய அறிவுரைகள் வழங்கப் படுகின்றன. அந்த ஆசிரியர்கள் அவ்வப்போது மருத்துவர், மற்றும் கண்பரிசோதகர்களை அனுகுவார். அரசு ஆரம்பசுகாதார நிலையக் களப் பணியாளர்களும் பள்ளிகளை தொடர்ச்சியாக தங்கள் பயணத்திட்டப்படி அணுகுவார்கள். தேவைப் படும் குழந்தைகளுக்கு மீண்டும் பரிசோதனை செய்யப் படும். தேவைப் படுபவர்களுக்கு கண்ணாடி முதலான உபகரணங்கள் இலவசமாக வழங்கப் படும்.

Read more...

Saturday, June 6, 2009

டாக்டருக்கு சாதாரணக் காய்ச்சல்தான்

கோவை அரசு மருத்துவக் கல்லூரி பயிற்சி பெண் மருத்துவருக்கு பன்றிக் காய்ச்சல் இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. பன்றிக் காய்ச்சல் அறிகுறியுடன் கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இதுவரை 11 பேர் சேர்க்கப்பட்டனர்.


இவர்களுக்குச் சிகிச்சை அளித்த 24 வயது பெண் பயிற்சி டாக்டருக்கும் அறிகுறி தென்பட்டது.


இதையடுத்து அவரது உடலில் இருந்து ரத்தம் மற்றும் தொண்டையில் எடுக்கப்பட்ட சளி ஆகியன ஆய்வகப் பரிசோதனைக்கு தில்லிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. வியாழக்கிழமை கிடைத்த பரிசோதனை முடிவில் அவருக்கு பன்றிக் காய்ச்சல் இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

Read more...
அரசு மருத்துவர்கள் மற்றும் சுகாதார துறையின் பிற அலுவலர்களுக்கு உதவக்கூடிய தளங்களின் செய்தியோடைகள் இங்கு கீழே தரப்பட்டுள்ளன

Target Your PG Seat

Target PG Google Group

டாக்டர்கள் தகவல் இணையம்...

Medical, Legal, Medicolegal Information for Doctors and Lawyers

MCQsOnline - Online Collection of MCQs of Medical PG Entrance Exams

After MBBS

TNGDA Library

Tamil Nadu Government Doctors Association (TNGDA) Helpline

Doctors' Association for Social Equality

GRDA

  © Blogger template Blogger Theme II by Ourblogtemplates.com 2008

Back to TOP