Thursday, September 30, 2010

நகைச்சுவையே இல்லாமல் ஒரு ரஜினி படம் - சரியான நகைச்சுவை 1.10.10

பொது அறிவுக் கேள்வி:- இதுவரை வெளிவந்துள்ள படங்களில் ரஜினி டாக்டராக நடித்து வெளிவந்த கடைசிப் படம் எது?

ரஜினி கெழவிய வெச்சு காமெடி பண்ணியிருக்காருடா

பாட்ஷா (அதை பாஷா என்று ஆங்கிலத்தில் சொல்வார்கள்) படம் வெளியானபோது எங்களால் அந்தப் படத்தை உடனடியாக பார்க்கமுடியாத சூழல். பொங்களுக்கு முந்தையநாள் படம் வெளியானது. மார்ச் மாதம் +2 தேர்வு.  இருந்தாலும் நகரத்தில்  இருக்கும் வகுப்புத் தோழர்கள் பார்த்துவிட்டிருந்தனர். அவர்கள் சொன்ன கமெண்ட்த்தான் இது. ரஜினியோட பிளஸ்ஸே காமெடிதான் ஆனால் படத்தில் ஆட்டோவில் துவக்க காட்சியில் நக்மாவை ஏற்றிக் கொண்டு ஜனகராஜ் செய்யும் பா......அய்.  என்பது மட்டுமே நகைச்சுவை என்ற கோணத்தில் நண்பர்கள் அந்தப் படத்தின் கதையை சொன்னார்கள்.

சற்று ஆறுதலாக இருந்தது.  ஆஹா.,   நல்லவேளை தப்பித்துவிட்டோம். தேர்வு முடிந்தபின் பார்த்துக் கொள்வோம். என்று ஒதுங்கி இருந்தோம்.  பின் நடந்தது நாடறியும். அதுவும் அறைத்தோழரும், சீனியருமான மல்டி கோவைச் சுற்று வட்டாரத்தில்  எந்த திரையரங்கில் பாட்ஷா போட்டாலும்  அங்கே சென்று பார்த்ததும், துணைக்கு ஆள்கிடைக்காத நிலையில் நம்மை அழைத்துக் கொண்டு சென்றதும், அது ஏறக்குறைய அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு நடந்ததும் ஏற்கனவே சரித்திரம் ஆகியிருந்தது.


இந்தக் கதைக்கும் இந்த வலைப்பூவுக்குமான தொடர்ப்பினைச் சொல்ல வருகிறேன். ஏறக்குறைய மருத்துவத் தொழிலும் அந்த விமர்சனம் போலத்தான். வருபவர்களின் எதிர்ப்பார்ப்புக்கேற்பத்தான் விமர்சனம் செய்வார்கள்.

சிலர் உள்நோயாளியாக சேர்ந்து பார்க்கவேண்டும் என்றுதான் வருவார்கள். சிலர் வெகுதொலைவில் இருந்துவருவார்கள். அவர்களை உள்நோயாளியாக சேர்க்க வேண்டிய அவசியம் இல்லாவிட்டாலும் சேர்த்தான் பார்க்க வேண்டும். வெகுதொலைவில் இருந்து வருபவர். போய் திரும்புவதைவிட இங்கேயே தங்குவது  பெருமளவு உடல் அயர்ச்சியைக் குறைக்கும். சிலருக்கெல்லாம் (குறிப்பாக பெரும்பகுதி வயோதிகர்களுக்கு)  உள் நோயாளியாக தங்கி நெருங்கிய சில உறவினர்கள் வந்து பார்த்தால்தான் நலமான ஒரு உணர்வே வரும். அவர்களை உள்நோயாளியாச் சேர்த்துத்தான் பார்க்க வேண்டும்.

சிலர் மாரடைப்பு வந்திருந்தாலும் வீட்டிற்குப் போய்விட்டு வருகிறேன் என்பார்கள். இதுவெறும் கேஸ்ட்ரபுள் பலமுறை வந்திருக்கிறது. இதுவரை வெறும் தண்ணீர் குடித்தாலே சரியாகிவிடும். அல்லது மார்க்கெட்டில் கிடைக்கும் அண்டாசிட் மாத்திரைக்கு சரியாகிவிடும். உங்களிடம் வந்ததற்கு ஒரு படத்தையும் எடுத்து மாரடைப்பு என்று கதை கட்டுகிறீட்கள் என்று திட்டிவிட்டு போவார்கள்.   சிலர் திரும்பிவந்து அல்லது திரும்பி வேறொரு இடத்திற்கு போய் சரிசெய்து கொள்வார்கள்.  சிலர்  திரும்ப முடியாத நிலை ஏற்பட்டதும் உண்டு,


எப்படி இருந்தாலும் தொழில் தர்மம் என்று இருக்கிறது. முடிந்தவரை அதை மீறவே கூடாது.  ( இந்த வரிகள் யூனிட் 1 மருத்துவப் பிரிவில் உள்ளுறைவிட மருத்துவ மருத்துவராக பணியாற்றிய போது தினமும்  போதிக்கப் பட்டவை)

குறிப்பாக மூன்றாம் கட்ட மருத்துவ மனையில் பணியாற்றும்போது பெரும்பாலோனோர்,  ஏற்கனவே பார்த்து திருப்தி அடையாமல் வருவார்கள். கண்டிப்பாக அவர்களுக்கு மூன்றாம் கட்ட பரிசோதனைகளை செய்துதான் ஆகவேண்டும்.


நீங்கள் முதலில் ஒரு கிளினிசியன் என்பதை மனதில் கொள்ள வேண்டும். இயந்திரங்களை நம்புவதைவிட உங்களை முதலில் நம்ப வேண்டும்.  இரத்த அழுத்தமானியில் காட்ட படும் ரத்த அழுத்தம் நோயாளியின் உடற்கூறுக்கு ஏற்றவகையில் அமைந்துள்ளதா என்பதை நீங்கள் கற்ற கல்வி மற்றும் அனுப்வத்தினை உபயோகப் படுத்தி உறுதி படுத்த வேண்டும். தேவைப்பட்டால் மீண்டும் செய்ய தயங்கக் கூடாது.

முதற்கட்ட மருத்துவமனையில் இருந்தாலும்கூட அவசியமான பரிசோதனை என்றால் மீண்டும் செய்யலாம். தேவையில்லை என்று நீங்கள் கருதினால் இரத்த அழுத்தத்தைக்கூட மீண்டும் பார்க்க வேண்டிய அவசியமில்லை.  குறிப்பாக செலவு பிடிக்கும்  ( ரூ.10 என்பதுகூட மீண்டும் மீண்டும் செய்தால் அனாவசியம்தான் நண்பர்களே..,)  பரிசோதனைகளை மீண்டும் செய்யச் சொன்னால் நோயாளி எரிச்சல் அடைய வாய்ப்பு உண்டு. ஆனால் அவசியத்தை புரிய வைக்க வேண்டிய மருத்துவராகிய உங்கள் கடமைதான்.


( ஒரே பென்ச்சில் அமர்த்து ஒரே வாத பிரதிவாதத்தை கேட்டு ஒரே வகையான சாட்சிகளை ஆராய்ந்த மூன்று மனிதர்களில் இருவர் அங்கு பிறந்ததை ஒத்துக் கொள்கிறார்கள். ஒருவர் ஒத்துக் கொள்ளவில்லை.  அந்த மூவருமே அந்த துறையில் கற்றுத் தேர்ந்த பலவும் சாதித்த விற்பன்னர்கள்தான்)

அதுபோல  நோயாளி வந்திருக்கும் சூழலில் அந்தப் பரிசோதனைகளின் அவசியம், ஏற்கனவே பரிசோதித்து பார்த்திருந்தாலும் இப்போதைய அவசியம், மற்றும் முக்கியத்துவத்தை விளக்க வேண்டியது மருத்துவரின் கடமைதான்.   (ஏற்கனவே ஹைக்கோர்ட்டி தீர்ப்பளித்த விவகாரங்கள் சுப்ரீம் கோர்ட்டிற்கு போனால் மீண்டும் சாட்சிகள் அழைக்கப் படுகிறார்களே அதுபோல )

 . ஆனால் விளக்கங்கள் மிகச் சுருக்கமாக இருக்க வேண்டியது மிக அவசியம். எந்த மனிதனுமே வகுப்பு எடுக்கப் படுவதை விரும்புவதே இல்லை.  அனைத்துக்கும் மேலே நீங்கள் கற்ற கல்வியின் மேல் நம்பிக்கை வையுங்கள்.  தேர்வில் நோயாளியை வெறும் கண்ணால் பார்த்தே என்னென்ன வியாதிகளுக்கு வாய்ப்புக்கள் , பேசிப் பார்த்து என்னென்ன வியாதிகள் என்பதைக் கண்டுபிடிக்கு முறைகளை கற்றிருப்பதை உபயோகப் படுத்துங்கள்

( வேற்றுத் துறை ந்ண்பர்களுக்காக :- லேப் பரிசோதனை முடிவுகளை வைத்து தேர்வுகளில் பதில் சொல்லும்போது ஏற்படும் ஏற்படக்கூடிய தவறுகளை மன்னிக்கும் தேர்வாளர்கள்,  நோயாளியைப் பார்த்தோ, பேசியோ , அல்லது அல்லது நமது மருத்துவரால் பரிசோதிக்கப்பட்டு (லேப், ஸ்கேண் இல்லாமல்)  தேர்வில் பதில் சொல்லும்போது ஏற்படும் சிறு தவறுகளையோ தடுமாற்றங்களையோ மன்னிப்பதில்லை. கண்டிப்பாக ஃபெயில்தான்.  இது உலகம் முழுவதும் மருத்துவத் தேர்வுகளின் அடிப்படை )

நோயாளி உங்கள் அறைக்குள் வரும்ப்போதே அவரைப் பற்றி கணிக்க ஆரம்பிக்க வேண்டும். அவர் நடந்து வரும் வேகம். அப்போது அவர் மூச்சுவிடும் எண்ணிக்கை .  கண்கள் பகுதியில் ஏற்படும் சுருக்கம். தோலில் தென்படும் வறட்சி போன்ற விவரங்கள் மிக முக்கியமானவை, அவற்றை தெளிவாக புரிந்து கொள்ளும்ப்போதே பெரும்பாலான நோய்களை கணித்துவிடலாம்.   முக்கியமாக ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணியாற்றுவது வேகத்தை அதிகரிக்க உதவும். அதுவும் நோயாளிகள் ஆரம்ப சுகாதார நிலைய்த்தில நோயாளிகள் நுழையும் பகுதி உங்கள் பார்வையிலேயே இருந்தால் வரும் நோயாளிகளை அங்கிருந்தே கண்காணிக்க முடியும்.  பெரும்பாலான நோயாளிகள் வந்த உடன் வீடு திரும்பும் எண்ணத்தில்தான் இருப்பார்கள். அவர்களை முடிந்தவரை சீக்கிரம் பார்த்து அனுப்பும் வகையில் வேகத்தை வளர்க்க வேண்டும்,. அதே நேரத்தில் நோய் குறியீடுகள் எதுவும் நம் பார்வையில்         இருந்து தப்பாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அதற்கு தொடர்ச்சியாக நோயாளிகளுடன் இருப்பதும் வெகுநேரம் பணியில் இருப்பதும் மிக முக்கியமானதாக அமையும்.


பெரும்பாலான ஆரம்ப சுகாதார நிலைய நோயாளிகளில் வயோதிகத்தின் காரணமாக ஏற்படும் நோய்குறியீடுகளோடு வருவார்கள். அவர்களை வயோதிக மருத்துவத்தின்(geriatrics)  துணையோடி அணுகுதல் நலம்.  இல்லையென்றால் தினமும் வந்து இருப்பதாக நினைத்துக் கொண்டிருக்கும் நோய் குறியிடுகளுக்காக வைத்தியம் பார்க்க வருவார்கள். நீங்கள் இல்லையென்று சொன்னால் உங்களிடம்தான் சண்டைக்கு வருவார்கள். வயோதிகர்களிடம் சண்டைப் போட்டால் உங்களுக்கு யாரும் துணைக்கு வரமாட்டார்கள்.   பலருக்கு ரத்தப் பரிசோதனை செய்யவே பயமாக இருக்கும். ஆனால் அவர்களுக்கு அவசியத்தை புரியவைக்க வேண்டும். சிலருக்கு தினமும் ரத்த அழுத்தத்தைப் பார்க்க வேண்டும். அவர்களுக்கு  அதற்கான அவசியமின்மையை புரிய வைக்க வேண்டும்.



தொடரும்...,

இந்த இடுகைகளின் தொடர்ச்சியாக இந்த இடுகை எழுதப் பட்டுள்ளது.


http://1.bp.blogspot.com/_2xHVWzJwk9Y/THGGQJMRn5I/AAAAAAAABqQ/pE3QVXIh48w/s1600/Chandramukhi_Rajni_Kanth_Movie_Stills_0112_28_08.jpg




துவக்கக் கேள்விக்கு பதில் இவர்தான்.

Read more...

Tuesday, September 28, 2010

கூட்டுப் பிராத்தனை செய்யுங்கள் தோழர்களே

அன்புள்ள நண்பா

நலமாக இருக்கிறாயா?  நலம் என்றே நினைத்துக்கொண்டு நானும் எழுதுகிறேன். நீயும் தொடர்ந்து படி. நண்பா

உனக்கு மகிழ்ச்சியான செய்தி என்று நினைத்துக்கொண்டிருக்கும் ஒரு செய்தியைப் பற்றி பகிர்ந்து கொள்ளத்தான் இந்தக் கடிதம். இந்திய மருத்துவத் துறையின் தரத்தை உயர்த்துவதற்காகவும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையை முறைப் படுத்துவதற்காகவும் தேசிய அளவில் ஒரே நுழைவுத் தேர்வு வருவதைப் பற்றி மகிழ்ச்சியாக அளாவினாயே, உன் மகிழ்ச்சியில் மண்ணைப் போட வேண்டும் என்ற எண்ணத்தில் நான் இதை எழுதவில்லை. நண்பா..,


மருத்துவம் படித்துவிட்டாய். நமது ஊரிலேயே அரசுப் பணியிலும் சேர்ந்துவிட்டாய். என்று மகிழ்ச்சியோடு மார்தட்டினாயே . உன்னிடம்தான் சில செய்திகளை பகிர்ந்து கொள்ள நினைக்கிறேன் நண்பா..,  நம் கிராமத்து பள்ளியில் படித்த மாணவர்கள் எல்லாம் மருத்துவம் படிக்கிறார்கள் என்று பெருமையோடு பேசித் திரிகிறாயே நண்பா,  ஒரு காலத்தில் நீ தான் முதலில் போனாயு. இப்போதெல்லாம் நம் ஊரின் எல்லா முனைகளிலிருந்தும் எம்.பி.பி.எஸ் படிக்கிறார்கள் என்று மகிழ்வாயே நண்பா.,

நீங்களெல்லாம்  இங்கு பணிக்கு வந்த பின்புதான்  ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவ மனைகளுக்கு செல்லும்போது ஒரு நெருக்கமான சூழல் இருக்கிறது என்றாயே நண்பா!

தந்தையாய் வாங்கிய கடன் முடிந்துவிட்டதாம்.  எனவே இந்த ஆண்டு மேல்படிப்புக்கு அரசு கோட்டாவிலேயே சென்று மீண்டும் நம் ஊருக்கே வந்து இங்கேயே மருத்துவமனை கட்டுவேன் என்று சொன்னானே அருந்தமிழ்ச் செல்வன். அவனுக்குத்தான்  இப்போது கெட்ட நேரம். 

இனிமேல்  மேல்படிப்புத் தேர்வுகள்  இந்திய அளவிலாம.  இந்திய அரசு கொள்கை முடிவு என்று அடிபடுகிறது நண்பா. அவனால் போட்டி போட முடியுமா என்று தெரியவில்லை நண்பா,

என்ன தகுதியுள்ளவை தப்பிப் பிழைக்கும் என்பதுதான் நியதி என்கிறாயா? உண்மைதான் நண்பா, தமிழ்நாட்டில் உள்ள இடங்கள் தமிழ்நாட்டிற்கே சொந்தம் என்றால்  அவனுக்கு கண்டிப்பாக கிடைக்கும் நண்பா. உலக அளவில் அந்த மேல் படிப்பு இடத்திற்கான அடிப்படைத் தகுதிகள் அவனுக்கு இருக்கின்றன நண்பா. பின் ஏன் அவனுக்கு கிடைப்பது சிரமம் என்கிறாயா?  திருச்சூரிலும் மும்மையிலும் டெல்லியிலும்  இளைஞர்கள் முழுநேரமும்  அந்த மேல் படிப்புப்பாக நாள் முழுவதும் படித்துவருகிறார்கள் நண்பா. இவனோ   நம் ஊர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பகல் முழுக்க வேலை செய்து கொண்டிருக்கிறான். இரவிலும் பிரசவம் தொடர்பான தொலைப்பேசி அழைப்புகளில் பேசிக் கொண்டே இருப்பானே நண்பா,    இப்போதெல்லாம் நமது கிராம ஆரம்ப சுகாதார நிலையத்தில் பிரசவங்கள் அதிகம் என்று பெருமையாக சொல்வாயே நண்பா. விதண்டாவாதம் செய்பவர்களுக்கு தமிழக அரசின் இணைய தளத்தை காட்டி பெருமையாக சொன்னாயே நண்பா, அதையும் மீறி பேசியவர்களிடம், பிறப்பு இறப்பு பதிவாளரின் முகவரிகளை வாங்கி அவர்களின் இருப்பிடத்திற்கே சென்று நம்ம ஊர் பையன் நமக்காக உழைக்கிறான் என்றாயே நண்பா. அவனுக்குத்தான் இந்த அதிர்ச்சி நண்பா,

மாலை வேலையில் உங்கள் ஊரில் கிளினிக் வேறு போட்டிருக்கிறான். காசு வாங்கிக் கொண்டு வைத்தியம பார்த்தாலும் இந்த ஊரில் வைத்தியம் பார்க்க ஒருவன் வருகிறானே என்று இருமாந்து இருந்தாயே நண்பா,  அவன் அந்த கிராமத்தில் உட்காரமல் இருந்திருந்தால் ஒருவேளை அவனுக்கு மேல்படிப்பு கிடைக்குமோ என்னவோ?



சென்ற மாதம் புதிதாக சேர்ந்திருந்தானே செந்தமிழ்செல்வன். இங்கேயே இருந்து தந்தையின் கடன், தங்கையின் திருமணம் இரண்டையும் முடித்துவிட்டு  பின்னர் ஒரு வீட்டையும் கட்டும்வரை இங்கேயே இருப்பேன். பின்னர் மேற்படிப்பை முடித்துவிட்டு இங்கேயே திரும்பிவிடுவேன் என்றானே? இந்த செய்தியைக் கேட்டதும்  பெருநகரத்தில் ஒரு மருத்துவமனையில் வேலைக்குச் சேர்ந்தது மட்டுமல்லாமல் தனியாக கோச்சிங் வகுப்புகளுக்கும் செல்ல ஆரம்பித்துவிட்டானாம். இவனைப் போல் எத்தனை பேர் கிளம்பப் போகிரார்களோ தெரியவில்லையே நண்பா?


இவர்களையெல்லாம் சேர்த்துக் கொண்டு ஒரு மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையை நம் ஊரிலேயே தொடங்கு என்றெல்லாம் கனவுகளை ஊட்டினாயே நண்பா.  வெளியூரிலிருந்தெல்லாம் கூட அதிகப் பேர் பயன்பெருவார்கள் என்றாயே நண்பா,    கனவு கானல் நீர் ஆகிவிடும்போல இருக்கிறதே நண்பா..,


இது மட்டும் அல்ல நண்பா, இன்னும் இருக்கிறது.

மருத்துவம் சேரவே  இனி பொது நுழைவுத் தேர்வாம்.  ஆமாம் நண்பா இனிமேல் ஐ.ஏஎஸ் தேர்வு போலத்தான்.  மாநிலத்திலிருந்து 30 பேர் 40 பேர் எம் பி பிஎஸ் சேர்ந்து விட்டார்கள் என்று செய்திவந்தாலும் ஆச்சரிய படத் தேவையில்லை. அந்த ஐ, ஏ, எஸ்ஸிலும் முதல் முறையே சேருபவர்கள் குறைவுதான் நண்பா,  நம் கிராமத்திலிருந்து சென்றதால்தான் மேற்கண்டவர்கள் எல்லாம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் நிலையாக இருந்தார்கள் என்று சொல்லி வருவாயே நண்பா, அந்த கிராமத்து மாண்வர்களுக்கு இந்த பழம் புளிக்கும் என்று ஆகி விடுமோ என்ற அச்சம் தோன்றிக்கொண்டேதான் இருக்கிறது நண்பா,   பெருநகர மாணவர்களாலேயே இந்த போட்டியில் பங்கெடுப்பதும் வெல்வதும் மிகக் கடிமாகவே இருக்கும் நண்பா,  எம்பிபிஎஸ் சேர தேவையாக அனைத்து தகுதிகளும் இருந்தும் போட்டித் தேர்வில்  வெல்ல முடியாமல் போய் ..   சே.......  நினைத்தாலே நெஞ்சம் பதருகிறது நண்பா,    வெளி மாநில மாணவர்கள் இங்கு வந்து படித்து பின்னர் நம் கிராமத்திற்கு வந்து  என்ன கொடுமைடா சாமி,   ஏனோ  பாரதிராஜாவின் சத்யஜித் நினைவிற்கு வந்து தொலைக்கிறார்,


நண்பா இந்த சூழலில் தமிழக மக்களின் நலனை கருத்தில்கொண்டு தமிழக முதல்வரும், எதிர்கட்சித் தலைவரும் ஓரணியில் நின்று போராடி வருகிறார்கள். அவர்களின் முயற்சி வெற்றியடையவும், தமிழக மக்களின் நலன்களைக் காக்கவும் நண்பா, முடிந்த வரை பிராத்தனை செய் நண்பா,  உண் நண்பர்களையும் செய்யச் சொல் நண்பா,


நன்றி

உனது நண்பன்

மின்னஞ்சலில் படிப்பவர்கள் தளத்திற்கும் ஒரு முறை வந்து கருத்துரைக்குமாறு கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள். நன்றி

Read more...

Wednesday, August 11, 2010

இதுக்குப்போயி அலட்டிக்கலாமா..?

அவர் அந்த ஊரின் பெரிய பணக்காரர். அவரின் மனைவிக்கு கடுமையான நெஞ்சுவழி. ஏறக்குறைய நேரம் இரவு 11ஐ தாண்டி விட்டது. நகரத்திலிருந்து ஏறக்குறைய பதினைந்து கிலோமீட்டர் தாண்டியிருக்கும் கிராமம் அது. சற்று பெரிய கிராமம். (வாசு, ரவிக்குமார் படங்களில் காட்டப் படுவது போன்றது).

வழக்கமாக அந்த ஊரில் அந்த அம்மாவிற்கு ஊசி போடுபவர் எங்கோ வெளியூர் போய்விட்டார். இப்போது என்ன செய்வது என பண்ணையாரும் அவரது கைத்தடிகளும் மண்டையை பயங்கரமாக கசக்கிப் பிளிந்து கொண்டிருந்தனர். அப்போது கணக்குப் பிள்ளை ஒரு வழியைக் கூறினார். அந்த ஊரின் அருகிலுள்ள ஊரில் ஒரு ஆரம்ப சுகாரார நிலையம். அந்த ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு புதிதாக ஒரு மருத்துவர் வந்திருந்தார். அவரின் தந்தைதார் இதே ஊரில் ஏற்க்குறைய பதினைந்து இருபது ஆண்டுகளுக்கு முன் ஆசிரியாராய் பணியாற்றியிருந்தார். அதனால் இந்த ஊரில் இருந்த சில பெருந்தலைகள் அவருக்கு ஓரளவுக்குப் பழக்கம். அதனால் இதே ஊரில் ஒரு வீட்டினை வாடகைக்கு எடுத்து அங்கேயே தங்க ஏற்பாடு செய்திருந்தார்.

கணக்குப் பிள்ளை சொன்னவுடன் பணக்காரருக்கும் அதுவே சரியான யோசனையாகப் பட்டது. மருத்துவரை அழைக்க பணக்காரரின் கார் புறப்பட்டது. அங்கே மருத்துவரின் வீட்டுக் கதவு தட்டப் பட்டது. மருத்துவர் வந்தார். தான் இன்று மருத்துவ முகாமிற்கு சென்றிருந்ததாகவும் சற்றுமுந்தான் வந்ததாகவும் தெரிவித்தார்.

அவசியமென்றால் நோயாளியை இங்கு அழைத்துவாருங்கள் பார்க்கிறேன்
என்று மருத்துவர் தெரிவித்தார்.

தாய் அவுக இங்கெல்லாம் வரமாட்டாக.. அதுவும் நெஞ்சுவலின்னு சொல்றோம் . வா டாக்டர். இது கைத்தடிகள்.

மருத்துவர் தனக்கு முடியவில்லைஎன்று மறுக்க மருத்துவரின் தந்தைக்கு அலைபேசி பறந்தது. தந்தையார் மகனிடம் அலைபேசியில் பேசினார். சூழ்நிலைக்கு தகுந்தது போல் அனுசரித்துப் போகுமாறும் பெரிய குடும்பத்தினை பகைத்துக் கொள்ளவேண்டாம் என்றும் அறிவுறுத்தப் பட்டது.

மருத்துவர் புறப்பட்டுப் போனார். அங்கே போய் பார்த்த போது பண்ணைக் காரின் மனைவி பெரிய சைஸ் கலர் டி.வி.யில் ஏதோ நாடகம் பார்த்துக் கொண்டிருந்தார்.

ஈ. சி. ஜி. பரிசோதனை எடுக்க வேண்டுமே...

அதெல்லாம் எடுத்திருக்கிறோம். பல்வேறு பரிசோதனைகளும் செய்திருக்கிறோம். என்று பெரிய புத்தகத்தை எடுத்து கையில் கொடுத்தனர். மருத்துவர் பார்த்தார். அது நானூறு கி.மீ. தூரத்தில் இருக்கும் பெருநகரத்தில் பார்த்த மருத்துவ குறிப்புகளின் தொகுப்பு.

பயப்பட ஒன்றும் இல்லை. இது சாதாரண வலிதான்
இது மருத்துவர்.

நானும் இதைதான் டாக்டர் சொன்னேன். இதுக்குப் போய் டவுனுக்கு கூப்பிடறாங்க .. நான் தான் இங்கிருக்குறவரையே கூப்பிட்டு ஊசிப் போட்டுக்கலாம்னு சொன்னேன். இது பண்ணைக்காரர் மனைவி.

மருத்துவர் தான் வந்த வேலையை முடித்துவிட்டு கிளம்பும்போது அவருக்கு ஃபீஸ் எவ்வளவு எனக் கேட்கப்பட்டது. மருத்துவரும் பெருந்தன்மையாக
அப்பாவுக்குத் தெரிஞ்சவர்ன்னு சொல்லறீங்க . என்க்கு ஃபீஸ் எதுவும் வேண்டாம். என்றார் மருத்துவர்.

டாக்டர் அப்படியெல்லாம் நீங்கள் மறுக்கக் கூடாது. கண்டிப்பாக நீங்க வாங்கிக் கொண்டே தீர வேண்டும். என்று கையில் பணத்தினை திணித்தனர். அது ஒரு பத்து ரூபாய். ( அப்போது அந்த ஊரில் ஒரு டீயின் விலை 2.50)

மருத்துவர் அதிர்ச்சியில் நின்றிருக்க அவர்களே தொடர்ந்தனர். டாக்டர் நாங்க எப்போதும் 5தான் கொடுப்போம். நீங்க நம்ம வாத்தியாரோட பையன் அப்படிங்கறதால 10 கொடுத்திருக்கிறோம்.

( அந்த ஊரில் அந்த அம்மாவுக்கு எப்போதும் ஊசி போடுபவர் ஒரு அனுபவரீதியில் ஆனவர். அவருக்குத்தெரிந்த நாலைந்து மருந்துகளை வைத்து ஒப்பேற்றிக் கொண்டிருப்பவர். மக்கள் அவரையும் இவரையும் ஒரே தட்டில் வைத்து பார்த்திருக்கின்றனர்)

Read more...

Monday, August 9, 2010

ஆரம்ப சுகாதார மருத்துவ அலுவலர் நடைமுறை குறிப்புகள் 1. மனித வள நிர்வாகம்

உங்க வயசு பசங்களுக்கு அட்வைசும் புடிக்காது, அத சொல்ரவங்களையும் புடிக்காது. இது அட்வைஸ் இல்ல, அக்கறை
- பாலகுமாரன்
(நாவல் அல்ல, திரைப்படம் !!
எந்த படம் என்று கண்டுபிடிப்பவர்களுக்கு பாராட்டுக்கள்
)


ஆரம்ப சுகாதார நிலையத்தில் புதிதாக பணியில் சேரும் மருத்துவ அலுவலர்களுக்கான மனித வள நிர்வாகம் குறித்து (Human Resources Management or simply Man Management) சில அறிவுரைகள்
  1. மருத்துவ அலுவலரே தான் ஆரம்ப சுகாதார நிலையத்தின் தலைவர் - the boss of the PHC.
  2. புற நோயாளி சிகிச்சை மட்டும் பார்த்தால் போதாது. அங்கு பணிபுரியும் அனைவரும் தத்தமது வேலைகளை ஒழுங்காக செய்கிறார்களா என்பதையும் அவர் கண்காணிக்க வேண்டும்
  3. மருத்துவ அலுவலருக்கு இரு கடமைகள் 1. மருத்துவர் 2. அலுவலர். உங்களுக்கு மருத்துவர் பணி தவிர அலுவலர் பணியும் உள்ளது என்பதை நினைவில் வைத்துக்கொள்ள தவறாதீர்கள்
  4. உங்கள் கீழ் பணிபுரிபவர்கள் செய்வதற்கும் செய்யாததற்கும் நீங்கள் தான் பொறுப்பு. உங்கள் மேலதிகாரிகள் உங்களைத்தான் கேட்பார்கள்
  5. நீங்கள் உங்கள் கீழ் பணிபுரிபவர்களின் கருத்துக்களை கேட்க வேண்டும். ஆனால் நீங்கள் முடிவெடுக்க வேண்டிய விஷயங்களில் நீங்கள் முடிவெடுங்கள். உங்கள் பணியாளர்கள் முடிவெடுக்க வேண்டிய விஷயங்களில் தலையிடாதீர்கள்.
  6. நீங்கள் அமர்ந்திருப்பது மருத்துவ அலுவலரின் நாற்காலியில் தானே தவிர துனை இயக்குனரின் நாற்காலியிலோ அல்லது மருந்தாளுனரின் நாற்காலியிலோ அல்ல என்பதை நீங்கள் மறக்காதீர்கள்
  7. உங்கள் பணி உங்களுக்கு அரசிடம் இருந்து / இயக்குனரிடமிருந்து / துனை இயக்குனரிடமிருந்து வரும் உத்தரவுகளை நிறைவேற்றுவது. அது தொடர்பாக உங்கள் கீழுள்ளவர்கள் சரியாக வேலை செய்கிறார்களா என்பதை கண்காணிப்பது
  8. உங்கள் பணியாளர்களின் ஆலோசனைகளை / வேண்டுகோள்களை / உத்தரவுகளை !! அப்படியே நிறைவேற்ற வேண்டுமென்பதில்லை
  9. நீங்கள் செய்ய வேண்டிய செயல் ஒன்றில் நீங்கள் உங்கள் பணியாளர்களின் அறிவுரைகளின் படி செயல்பட்டால் கூட நீங்கள் செய்ய வேண்டிய அந்த செயலுக்கு முழு பொறுப்பும் நீங்கள் தான் என்பதை ஞாபகத்தில் வைத்துக்கொள்ளுங்கள்
  10. இதை மறுமுறை வாசித்து கொள்ளுங்கள்
  11. ஆரம்ப சுகாதார நிலையத்தில் அண்ணா / அக்கா / தங்கச்சி போன்ற பாசமலர் உறவுகளை தவிர்ப்பது அனைவருக்கும் நல்லது (உங்கள் கல்லூரி காலங்களில் இது போன்ற பாசமலர்கள் எங்கு சென்று முடிந்தது என்பது தெரியும் தானே !!)
  12. ஆரம்ப சுகாதார நிலையத்திற்குள் தேவையில்லாத பாச பரிமாற்றங்களினால் உங்களுக்கும் பிரச்சனை, மற்றவர்களுக்கும் பிரச்சனையே
  13. யாரையும் முழுவதும் நம்ப வேண்டாம். யாரையும் முழுவதும் உதாசீனப்படுத்த வேண்டாம்
  14. கண்ணால் காண்பதும் பொய், காதால் கேட்பதும் பொய், தீர விசாரிப்பதே மெய் (எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும், அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவு)
  15. நீங்கள் அதிகாரி என்பதால் குற்றம் கூறிக்கொண்டே இருக்க வேண்டும் என்பதில்லை.
  16. யாராவது ஏதாவது தவறு செய்திருந்தாலும் பொது இடத்தில் வைத்து அதை சுட்டிக்காட்டாதீர்கள். மற்றவர்கள் முன் நீங்கள் ஹீரோவாக வேண்டும் என்பதற்காக அடுத்தவரின் தவறுகளை சுட்டிக்காட்டுவது எதிர்விளைவுகளையே ஏற்படுத்தும்
  17. பணியாளர்களின் தவறுகளை சுட்டிக்காட்ட நேரும் போது “இதை இப்படி செய்வதற்கு பதில் இப்படி செய்ய வேண்டும்” என்றே கூற வேண்டும் “நீ செய்தது தவறு” என்று முகத்தில் அடித்தது போல் கூறுவது நன்றன்று. உங்கள் கீழ் பணிபுரிபவர்களில் ஏறத்தாழ அனைவரும் உங்களை விட வயதில் பெரியவர்கள் என்பதை மறக்க வேண்டாம்
  18. வார ஆய்வு பதிவேட்டிலும், வார ஆய்வு கூட்ட குறிப்பு புத்தகத்திலும் தேவைப்படும் மாற்றங்களை எழுதி அனைவரிடமும் கையொப்பம் வாங்குவது எளிய வழி
  19. எதிர்பாலின ஊழியர் ஒருவருடன் அறையில் தனியாக பேச வேண்டாம். ஒன்று மூன்றாம் நபர் உடனிருக்கும்படி பார்த்துக்கொள்ளவும். அல்லது பொது இடத்தில் பேசவும்
  20. உங்கள் அறையில் தேவையில்லாமல் யாரும் அமர வேண்டாம்
  21. அனைவரையும் உட்கார வைத்து பேசுங்கள். நிற்க வைத்து பேச வேண்டாம்
  22. உங்கள் தனிப்பட்ட வேலைகளை ஆரம்ப சுகாதார நிலைய ஊழியர்களிடம் அளிக்காதீர்கள்
  23. பிற மருத்துவ அலுவலர்களை பற்றியோ, துனை இயக்குனரை பற்றியோ யாராவது பேசினால் ஊக்குவிக்க வேண்டாம்
  24. உங்களுடம் பணிபுரியும் மருத்துவ அலுவலருடன் கருத்து வேறுபாடு என்றால் நேரடியாக பேசி சுமூக தீர்வு காண முயலுங்கள்
  25. அப்படியும் சரி வரவில்லை என்றால் சங்க நிர்வாகிகள் மூலம் பேசலாம். நீங்கள் இருவரும் ஒரே கல்லூரி என்றால் கல்லூரியில் உங்களிருவருக்கும் தெரிந்த மூத்த மருத்துவர் மூலம் தீர்வு காண முயலுங்கள்.
  26. உங்களுடம் பணிபுரியும் மருத்துவ அலுவலருடன் கருத்து வேறுபாடு பிரச்சனையை துனை இயக்குனரிடமோ, அல்லது உங்கள் கீழ் பணி புரிபவரிடமோ கொண்டு செல்ல வேண்டாம்

Read more...

விக்ரம் திரைப்படமும், நள்ளிரவில் நாய் கடி வாங்கியவனும்

புகுமுன்:-

சினிமா தொடர்புடைய இடுகையாக இருந்தாலும் இது சினிமா  இடுகை அல்ல

=========================================================================

டாக்டர் என்னும் தொழிலாளி 


பத்து நோயாளிகளை வர வைக்கும் வழிகள் 


ஆகிய இடுகைகளின் தொடர்ச்சியாகவே இதை எடுத்துக் கொள்ளலாம்.




வெகுநாட்களுக்கு முன் விக்ரம் நடித்த சமுராய் படத்தினைப் பார்த்திருப்பீர்கள். நானும் அப்போது பார்த்ததுதான். சமீபத்தில் தொலைக்காட்சியில் கூட அதைப் போட்டிருந்தார்கள்.  படம் எப்படியிருந்தாலும்., அந்தப் படத்தின் முதுகெலும்பாலான ஃபிளாஷ்பேக் காட்சியில் குளுக்கோஸ் உடன் திரவ மருந்து செலுத்துவார் நாயகி (அந்தப் பகுதியின் நாயகி). அந்தச் சிறுவன் இறந்து போய் விட தான் மிகவும் கஷ்டப் பட்டு பார்த்துவந்த சிறுவன் இறந்து விட்டதாகவும்  அந்த கலங்கிப் போன தூசுகள் படிந்த திரவ மருந்தை செலுத்தியதால்தான் இறந்து போனதாகவும் அந்த மருந்து வாங்கியவர்களை தட்டிக் கேட்பார். சில தட்டிக் கழித்தல்களுக்குப் பின் அவர் இறந்து விடுவார். விக்ரம் பழிவாங்க ஆரம்பிப்பார்.


=================================================================


உண்மையில் இந்த நிகழ்ச்சியில் தவறு என்பது குளுக்கோஸ் ஏற்றிய அந்த நாயகின் மீதுதான். எந்த மருத்துவர் எந்த மருந்தினைச் செலுத்தினாலும் அந்த பாட்டில் உடைந்து இருக்கிறதா?  மருந்தின் நிறம் மாறி இருக்கிறதா? அதில் ஏதாவது மிதக்கிறதா?  அதன் காலாவதி தேதி இன்னும் எத்தனை நாட்களுக்கு என்றெல்லாம் சரிபார்த்துவிட்டுத்தான் போட வேண்டும். 


ஆகவே புதிதாக கிளினிக் தொடங்கும் மருத்துவர்கள் இந்த நடைமுறைகளை ஒவ்வொரு முறையும் பின்பற்றியே தீர வேண்டும்,. இல்லையென்றால் விக்ரம் மாதிரி யாராவது வந்து கடத்திக் கொண்டு போக நேரிடலாம். 




=====================================================================


தொடரும்....,

 ====================================================================

அது ஒரு கூடுதல் ஆரம்ப சுகாதார நிலையம்.  

இரவு நேரம், பிரசவம் பார்ப்பதற்காக அந்த ஆரம்ப சுகாதார நிலையத்தில் செவிலியர்கள் காத்திருந்தனர். நள்ளிரவு தாண்டிய நேரம்  சில பல நபர்கள். டாக்டர் நாய் கடிச்சிடிச்சி என்று கூறிக் கொண்டே வந்தார்கள்.   


செவிலியர் பார்த்தார்.  சில முதலுதவிகள் மற்றும் தடுப்பூசி, தொற்றுப் பரவாமல் இருக்க ஊசி போட்டுவிட்டு  நாய்கடிக்கான சிறப்புத் தடுப்பூசி நாளைக் காலையில் மருத்துவர் முன்னிலையில் போட வேண்டும். காலையில் வாருங்கள் என்றிருக்கிறார்.  நண்பர்களுக்கு பயங்கர கோபம்.  கண்டபடி சண்டைப் போட்டுவிட்டு திரும்பி விடுகின்றனர்.  




காலையில் கிளம்பி மருத்துவமனைக்குப் போகிறார்கள்.  பயங்கரமாக பில்டப் மற்றும் அடிபொடிகளைச் சேர்த்துக் கொண்டு  சுகாதார நிலைய வாசலில் சண்டை போடுகிறார்கள். 


மருத்துவரின் அறை முன்னும் சத்தம் போட்டுக்கொண்டே உள்ளே போகிறார்கள்.  நள்ளிரவில் நாய் கடியோடு  வந்தால் செவிலியர் நீங்கள் வந்த உடந்தான் போடுவேன் என்கிறார்.  என்ன இது அநியாயம்? நீங்க வந்தது தெரிந்த பிந்தான் நாயைக் கடிக்க சொல்ல வேண்டுமா?  


மருத்துவர் பொறுமையாக நாய் க்டி ஊசி எத்தனை மணி நேரத்துக்குள் போட வேண்டும். உடனடியாக கொடுக்கப் பட வேண்டிய மருந்துகள் கொடுக்கப் பட்டு விட்டன் என்பது பற்றியெல்லாம் சொல்லு விட்டு அந்தக் கேள்வியைக் கேடிகிறார்.




நள்ளிரவுக்கு மேல் எங்கு போய் நாய் கடி வாங்கி வந்தாய்? உனக்கு அங்கே என்ன வேலை?  


உடன் வந்த நண்பர்கள் ஒருவர் முகத்தை மற்றொருவர் பார்க்க நாய்கடி பட்ட நபர் ஊசி போடுமுன்பே எஸ்கேப்..............,

Read more...

Sunday, August 8, 2010

பத்து நோயாளிகளை வர வைக்கும் வழிகள்

புகுமுன்:-

டாக்டர் என்னும் தொழிலாளி   தொடர்ச்சியாகவே இந்த இடுகை அமைகிறது.  புதிதாக மருத்துவத் தொழிலில் இறங்கும் மருத்துவ பட்டதாரிக்கு எனக்கு என் மூத்தோர் சொன்ன வார்த்தைகளை தொகுத்து வழங்கிக் கொண்டு இருக்கிறேன். மூத்தோர் சொல்லும் முதுநெல்லிக் கனியும் முன்னே கசக்கும் பின்னே இனிக்கும் என்பார்கள்.

ஆனால் புதிதாக மருத்துவம் படித்த மாணவர்களில் பெரும்பாலானோருக்கு சுவை யெல்லாம் உணரக் கூடிய நிலை இருப்பதில்லை.  தமிழகத்தில் மருத்துவம் படித்து வரும், கடந்த சில பத்தாண்டுகளில் படித்து முடித்த மாணவர்களில் பெரும்பாலானவர்கள்  பனிரெண்டாம் வகுப்பில் மதிப்பெண்கள் குவித்த ஒரே தகுதியில் உள்ளே வந்தவர்கள். அவர்களில் பலரின் பெற்றோர், நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். வசதிப்படைத்தவர்கள் என்பவர்கள் பெற்றோர் இருவரும் வேலைக்குச் செல்பவர்களாக இருப்பவர்கள்தான்.  வெகுசிலரே  பெரிய மருத்துவமனைக்குச் சொந்தக் காரர்களின் பிள்ளைகள்.

இந்த நடுத்தரக் குடும்பத்தை, மற்றும் ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு தாங்கள் செய்யப் போகும் தொழிலின்  மேன்மை தெரிந்திருந்தாலும்,  அவனது கடமை அவனை பயமுறுத்திக் கொண்டேதான் இருக்கும். அவர்கள் வாங்கிருக்கும் வங்கிக் கடன், அவர்களை மருத்துவக் கல்லூரில் சேர்த்ததால் அவர்களது சகோதர்களையும் தனியார் தொழிற்நுட்பக் கல்லூரிகளில் சேர்த்து பெற்றோர் வாங்கி வைத்த கடன்,  சில நேரங்களில் இவர்களைப் படிக்க வைப்பதால் இவர்களின் தங்கைகளுக்கு உள்ளூர் கலைக் கல்லூரி படிப்பை மட்டுமே தரக் கூடிய சூழல் அவர்களது பெற்றோருக்கு இருக்கும். எனவே  தங்கைக்கு வயதாகும் முன்பே திருமண ஏற்பாட்டை கவனிக்க வேண்டும். சில நேரங்களில் அக்கா வேறு இருப்பார். அவரது திருமணத்திற்கு பொருள்  ஈட்ட வேண்டு,   ( எம்.பி.பி.எஸ் முடிக்கும் போதே 17+6 = 23 வய்து குறைந்த பட்சம் ஆகியிருக்கும்.) .  எனது ஜூனியர் மாணவர் ஒருவரது படிப்புச் செலவுக்காக அவரது தம்பி  பனியன் கம்பெனியில் வேலை பார்த்து பணம் அனுப்புவார்.  செலவு என்பது குறைவுதான்., இருந்தாலும்  குடும்பத்தில் இன்னொருவரும் சம்பாதிக்க வேண்டிய சூழல் .   இவ்வாறாக பெரிய மனச்சுமையோடுதான்  பெரும்பாலான மருத்துவக் கல்லூரி மாணவர்கள் வெளியே வருகிறார்கள்.

இவர்களுக்கு நெல்லிக் கனியின் கசப்பு பெரும்பாலும் தெரிய வாய்ப்பு இல்லாத காரணத்தால்  மூத்தோர் சொற்கள் நன்றாகவே போய் சேருகின்றன.

======================================================================

சென்ற இடுகையில்  அனைத்து மருத்துவர்களும் (சில சிறப்பு மேல் படிப்புகளைத் தவிர ) தனியாக சிறிய அளவிளான கிளினிக் தொடங்க வேண்டும் என்று சொல்லியிருந்தேன்.  அனைவரின் வாழ்க்கையிலுமே இந்த கிளினிக் வாழ்க்கை மிக முக்கியமானது.   இந்த கிளினிக்கில்தான்  ஒவ்வொரு நோயாளியின் அருமையும் தென்படும்.  தினமும் பார்க்கும் நோயாளிகளைப் பற்றிய சிறுகுறிப்புக்களை ஒரு பதிவேட்டில் ஏற்றிக் கொண்டே வர வேண்டும்.   ஒவ்வொரு நாள் கிளினிக் முடிந்த உடனும்,  நோயாளிகளைப் பற்றி அசைப் போட வேண்டும்.  இதில்  கிளினிக் வழியில் இருந்ததால் வந்தவர்கள் எத்தனை பேர்? அருகிலுள்ள மருத்துவ மனையில் கூட்டமாக இருந்ததால் வந்தவர்கள் எத்தனை பேர்?  நம்மையே எதிர்பார்த்து வந்தவர்கள் எத்தனை பேர் ?  வந்தவர்களில் நாமே வைத்தியம் பார்க்கும் அளவில் இருந்தவர்கள் எத்தனை பேர்? பரிந்துரை செய்யப் பட்டவர்கள் எத்தனை பேர் என்பதையும்  வந்த நோயாளிகளுக்கு நாம் கொடுத்த மருத்துவம் சரியானதுதானா என்பதையும் ஏதாவது கூட்டி அல்லது குறைத்து இருக்கலாமா? என்பதையும்  யோசிக்க வேண்டும்.

குறிப்பாக முதல் நாளில் வந்து இரண்டாம் நாளும் வந்து எந்த முன்னேற்றமும் இல்லை என்று சொன்னால் ஏன் இல்லை, இதைச் சரி செய்ய என்ன செய்ய வேண்டும் போனற விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டும்.    இது போன்ற  விஷயங்களில் நன்கு கவனம் செலுத்தி வந்தால் முதல் இரண்டு மாதங்களில் தினமும் ஐந்து பேராவது வர தொடங்கி விடுவார்கள்.  

இரண்டாவது மாத முடிவில் ஐந்து என்பதே பெரிய எண்ணிக்கை . எனவே மனம் தளராமல் உழைக்க வேண்டியது தான்.  தொடர்ந்து உழைத்தால், ஓராண்டு முடிவில் 20 - 25 பேரைப் பார்க்க ஆரம்பிக்கலாம்.    இந்த கால கட்டத்தில்  வரும் நோயாளிகளின் பரிந்துரையில் வரும் நோயாளிகளின் எண்ணிக்கையை கூர்ந்து கவனிக்க வேண்டும்.  இந்த வகையான நோயாளிகள்தான் நமக்கு தனி வாடிக்கையாளர்களை உருவாக்குவார்கள். அவர்களது எண்ணங்கள், எதிர்பார்ப்புகள் போன்றவற்றை  தனியே உற்று நோக்கிவந்தால் மட்டும் நாமும் ஒரு நிலை பெற முடியும்.

இது போன்ற சிறு கிளினிக் தொடங்கும்போது ஊசி போடுதல், காயத்துக்கு மருந்து கட்டுதல்,  மருந்துகளை எப்படிச் சாப்பிடுவது என்று சொல்லிக் கொடுத்தல் போன்ற பணிகளை  ஒருத்தரே செய்வதுதான் நலம்.  தனியார் மருத்துவம்னையில் வேலைக்குச் சேர்ந்தாலோ அரசுப் பணியிலோ இந்த வாய்ப்புகள் கிடைக்காது.  இந்த வேலைகள் செய்து வந்தால் மட்டுமே நோயாளிக்கும் நமக்கும் ஒரு நெருக்கம் அமையும். சில காயங்களை தனி ஒரு ஆளாக சுத்தப் படுத்தி தையல் போட்டு பின்னர் கட்டும்போட்டு, ஊசி போட்டு அனுப்பும்போது    கிடைக்கும்     தொழில் திருப்தி என்பது ஒரு காகிதத்தில்  எல்லாவற்றையும் செய்யுமாறு ஆணைகளை எழுதித் தரும்போது கிடைக்காது.   பொதுவாக கிளினிக் ஆரம்பிக்கும்போது மிக ஆரம்ப கட்டத்தில் கூட்டுவது,  வரிசைப் படுத்தி அனுப்புவது போன்ற வேலைகளுக்கு மட்டும் ஒரே ஒரு வயதானவரை வேலைக்கு வைத்துக் கொள்ளுவது போதுமானது.

சில நப்ர்கள் காயங்களில் தண்ணீர் பட்டால் சீல் பிடித்துக் கொள்ளும் என்ற எண்ணத்தில் காயம் இருக்கும் பகுதி முழுவதும் மோசமாகப் பராமரித்து வருவார்கள். இதில் கிளம்பும் நாற்றத்தைப் பொறுத்துக்கொண்டு சுத்தம் செய்து ஆற்றுவது என்பதே ஒரு சவாலாக இருக்கும்.  இதெல்லாம் செய்தால் மட்டுமே நமக்கென்று ஒரு கூட்டத்தை உருவாக்க முடியும்.  ஒவ்வொரு நோயாளியின் முக்கியத்துவத்தையும் உண்ரும்போதுதான் நாம் சம்பாதிக்கும் காசின் மதிப்பும் நமக்குத் தெரியும்.  இந்தக் கட்டத்தை தவர விடுவதுதான் பல பெரிய மருத்துவர்களின் மகன்கள் தந்தை அளவிற்கு சாதிக்க முடியாமல் போவதற்குக் காரணம்.   ஒரு ஆலமரத்தின் அடியில் சிறுபுல் பூண்டுகூட முளைக்காது என்பதற்கு உதாரணம் இவர்கள்தான்.    ஒவ்வொரு வாடிக்கையாளரையும் சம்பாதிப்பது எவ்வளவு சிரமம் என்பதையும் அதைத் தக்கவைப்பது அதைவிட எவ்வளவு சிரமம் என்பதும் தெரிந்தால் மட்டுமேதொழிலில் நிற்பது சாத்தியம். 


நோயாளியிடம் பீஸ் வாங்குவது என்பது நமது உரிமை.,  சராசரியாக அந்தப் பகுதியில் வாங்கப் படும் ஃபீஸை வாங்குங்கள்.  எந்த நேரத்திலும் குறைக்காதீர்கள்.  போட்டியாளர்களின் உள்ளாவீர்கள். தவிரவும் உங்களை கற்றுக்குட்டி டாக்டர் என்றும்  ஏமாந்த சோணகிரி என்றும் முடிவு செய்துவிட வாய்ப்பு இருக்கிறது.  அதே நோயாளியால்  அவ்வளவு பணம் கொடுக்க முடியாது என்ற நேரத்தில்  இந்தத் தொகைதான் வேண்டும் என்று கட்டாயப் படுத்தாதீர்கள்.  சில நேரங்களில் இலவசமாகப் பார்த்தால் கூட தவறில்லை.

================================================================

தொடரும்...................................................

Read more...

Wednesday, August 4, 2010

டாக்டர் என்னும் தொழிலாளி

புகுமுன்:-

இந்த இடுகை   மருத்துவப்  பட்டப் படிப்பு படித்துவிட்டு தொழில் தொடங்க இருக்கும் இளைஞர்களுக்கானது. நான் தொடங்கியபோது எனது மூத்த சகாக்கள் சொன்னதன் தொகுப்பு.  எனக்கு நினைவில் இருப்பவை மற்றும் என்னை நிலைநிறுத்திக் கொள்ள உதவிய வழிகள் ஆகியவற்றை பகிர்ந்து கொள்கிறேன்.
இதில் வாதம் செய்ய நினைப்பவர்கள் ஆக்க பூர்வமான வாதத்திற்கும் அல்லது அவர்களின் உள்ளத்தில் குடைந்து கொண்டிருக்கும் சந்தேகங்களை மட்டுமே கேட்கவும்.


1.மருத்துவப் படிப்பு முடித்தவுடன் நீங்கள் எதிர்கால வாழ்க்கை முறையை தீர்மானித்துக் கொள்ளவேண்டும்.
அ..மருத்துவத்தொழில் பிடித்திருக்கிறது. இதில் சாதிக்க வேண்டும்.
ஆ.மருத்துவத் தொழில் பிடிக்கவில்லை. மாறிவிட  நினைக்கலாம்

=======================================================================
மாறிவிட நினைக்கிறீர்கள் என்றால் உங்கள் முன் உள்ள வழிகள்:

1. இந்திய ஆட்சிப் பணி, காவல் பணி ஆகியவற்றிற்கு சென்று விடலாம்.
2.மருத்துவத் துறையிலேயே மருத்துவம் சார் படிப்புகளுக்கு ஆசிரியப் பணிக்குச் சென்றுவிடலாம்.
3.இன்னும் சில வழிகள் உள்ளன. இந்த இடுகையில் மருத்துவம் பற்றி மட்டும் பேச விருப்பம்.
======================================================================

மருத்துவத் துறையில் சம்பாதிக்க நினைக்கிறீர்கள். அனைவருக்குமே சம்பாதிப்பதுதான் முதல் நோக்கமாக இருக்கமுடியும்.  எந்த தொழிலுக்குமே  முதல் என்பது  நற்பெயர், நேர்மைதான்.  அதுவும் மருத்துவத் தொழிலில்  வருமானம் என்பது நற்பெயரினை வைத்துத்தான். எனவே நற்பெயருக்கு பங்கம் வராமல் தொழில் செய்ய வேண்டும்.

=================================================================

உங்களுக்கு வசதி இருந்தாலும், இல்லாவிட்டாலும்  முதலில் ஆலோசனை மட்டும் தரக்கூடிய சிறிய வகை கிளினிக் தொடங்குங்கள்.

உங்கள் தந்தை  மிகப் பெரிய மருத்துவ மனைக்குச் சொந்தக் காரராக இருந்தாலும்  முதலில் தனியாக கிளினிக் தொடங்குவதே நல்ல அனுபவத்தைக் கொடுக்கும்.

இதில் சில வகை சிறப்பு மேல் படிப்பு முடித்தவர்களுக்கு விலக்குக் கொடுக்கலாம். ஆனால் மேல்படிப்பு படித்தவர்கள்கூட கிளினிக் தொடங்குவதுதான் நன்று.

உள் நோயாளியாகச் சேர்க்க வேண்டியவர்களை அருகிலுள்ள மருத்துவ மனையில் சேர்த்துக் கொள்ளலாம்.

=======================================================================
நீங்கள் அரசுப் பணியில் இருக்குறீர்கள் என்றால்  அந்த ஊரிலேயே மருத்துவமனை தொடங்கும் யோசனை இருந்தால் நல்ல போக்குவரத்து சிறப்பு மருத்துவர்கள் அழைத்தால் வர தயாராக இருக்கும் இடத்தில் கிளினிக் தொடங்குங்கள்.  அது நகரமாக இருந்தாலும் சரி, பெரிய கிராமமாக இருந்தாலும் சரி.

மேற்படிப்பு படிக்கப் போகும் எண்ணத்தில் இருந்தால் நல்ல மக்கள் தொகையும், மக்கள் வந்து போகும் வசதியும் உள்ள கிராமத்தில்  கிளினிக் தொடங்கலாம்.. அங்கே ஏற்கனவே ஓரிரு மருத்துவர்கள் இருந்தாலும் கவலைப் பட தேவையில்லை.   இந்தக் கிராமங்கள் நீங்கள் படிக்கச் செல்லும் வரையிலான சில ஆண்டுகளில் உங்களுக்கு நல்ல அளவிலான நோயாளிகளைத் தரவல்லன.

இங்கும் உங்கள் நற்பெயரைக் கட்டிக் காக்க வேண்டியது அவசியம். காலந்தவறாமை மிக அவசியம்.  கிளினிக்கில்  பலகையில் எழுதிய நேரத்தில் வந்து அமரவேண்டும்.  அதேபோல் நீங்கள் அரசு மருத்துவமனையிலும் நல்ல பெயரை சேர்க்க வேண்டும்.  நீங்கள் சொந்தக் கிளினிக்கில் கொடுக்கும் தரமே அரசு மருத்துவமனையிலும் இருக்கும் என்ற எண்ணம் தேவை. நாட்டில் அரசு மருத்துவமனையில் கூட்டத்தோடு கூட்ட்மாக வர விருப்பம் இல்லாத நிறையப் பேர் இருக்கிறார்கள். தவிரவும் பகலில் அரசு மருத்துவமனைக்குச் செல்ல வேண்டுமென்றால் விடுப்பு எடுக்க வேண்டிய அவசியம் உள்ளவர்கள் நிறைய இருக்கிறார்கள்.  அவர்கள் உங்கள் கிளினிக்கைத் தேடி வருவார்கள்.


எந்தக் கால கட்டத்திலும் அரசு மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளை உங்கள் கிளினிக்கிற்கு வரச் சொல்லாதீர்கள்.  அது உங்கள் நேர்மையான நற்பெயரைக் கெடுத்துவிடும்.  அதே போல நாளை அரசு மருத்துவமனைக்கு வருகிறேன். இந்த மருந்துகளை தாருங்கள் என்று சொல்பவர்களுக்கு முகம் கோணாமல் பதில் தாருங்கள்.


======================================================================

அரசுப் பணியில் இல்லை என்றாலும் காலந்தவறாமை, பொறுமை, நேர்மை ஆகியவற்றை கண்டிப்பாக பின்பற்றியே ஆக வேண்டும்.  அரசுப் பணியில் இல்லாதவர்கள்  முழு நேரமும் அமர்ந்தால் இங்கு வந்தால் நல்ல தரமான சிகிச்சை கிடைக்கும் என்ற எண்ணத்தை உருவாக்கும். அருகிலுள்ள மருத்துவமனைகளில் உள்ளவர்களுடன் நல்ல உறவினை வளர்த்துக் கொண்டு உங்கள் சிபாரிசுக் கடிதங்களுக்கு நல்லதொரு மதிப்பினைக் கொடுக்கும் வகையில் உங்களை தயார்படுத்திக் கொள்ளுங்கள்.


======================================================================

எந்தக் காலத்திலும் நோயாளிக்கு மருந்துக்கள் எழுதுவதில் உங்கள் சொந்த முடிவை எடுங்கள். சில மருந்து நிறுவனங்கள் கொடுக்கும் பரிசுப் பொருள்களுக்கு  ஆசைப் படாதீர்கள். நோய் குணமடையவில்லை என்றால் நோயாளிகள் நிரந்தரமாக வேறொரு மருத்துவரைப் பார்க்கச் சென்றுவிடக் கூடும்.  பிராண்ட் X எழுதினால் அதே  பிராண்ட் X  தான் நோயாளிக்கு கிடைக்கிறதா என்பதை உறுதிப் படுத்திக் கொள்ளுங்கள். ஏனென்றால் சில நிறுவனங்களின் தரம் சில நிறுவனங்களில் இருக்காது,   தரமான மருந்துகள் எந்த நிறுவனத்தால் குறைந்தவிலைக்கு வழங்குகிறதோ அந்த மருந்துகளையே  தேர்வு செய்யுங்கள்.  உங்கள் நோயாளிகளுக்கு த்ரமான மருந்துகள் கிடைப்பதற்கு நீங்களே பொறுப்பு.


நோயாளி வெளியூர் சென்றால் கூட அந்த மருந்து அங்கே கிடைக்கும் வகையிலான மருந்துகளையே தேர்வு செய்யுங்கள்.

==============================================================

உங்களுக்கு அவசியம் என்று தோன்றும் பரிசோதனைகளை செய்ய, செய்யச் சொல்ல தயங்காதீர்கள்.  அவசியமில்லை என்றால் எந்த ஒரு காரணத்திற்காகவும் செய்யாதீர்கள்.

================================================================

அடுத்த அடுத்த கட்ட மருந்து பிரயோகங்களைப் ப்ற்றி நன்கு தகவல் பரிமாற்றங்களை செய்து கொள்ளுங்கள்.  உங்கள் பாடப் புத்தகங்களில் உள்ள வழிமுறைகளை உங்கள் பகுதி ஏற்றாற்போல உபயோகிக்க பழ்கிக் கொள்ளுங்கள். எந்த சூழலிலும்  புத்தகங்களும் , துறைத்தலைவர்களும் உங்களுக்கு சொல்லிக் கொடுத்த வழிமுறைகளை மீறாதீர்கள்.

===============================================================
எந்தச் சூழலிலும் உங்களுக்குத் தெரியாத மற்றும் உங்கள் பாடத்திட்டத்தில் இல்லாத மருந்துக்களை உபயோகப் படுத்தாதீர்கள்.  உங்கள் ஊரில் இருக்கும் பயிற்சி இல்லாத மருத்துவராக அழைக்கப் படும் நபரைப் பார்த்து உங்களை மாற்றிக் கொள்ளாதீர்கள் . உங்களிடம் திறமை இருக்கும்போது மக்கள்  கண்டிப்பாக திறமையாளரின் பக்கமே வருவார்கள்.



================================================================
இந்திய மருத்துவக் கழகம் போன்ற அமைப்புக்களில் உறுப்பினராகிக் கொள்ளுங்கள். அவர்கள் நடத்தும் தொடர்கல்வி உட்பட அனைத்துச் செயல்பாடுகளிலும் உங்களை ஈடுபடுத்திக் கொள்ளுங்கள். அதில் உள்ள திட்டங்களில் உங்களை உறுப்பினராக்கிக் கொள்ளுங்கள்.

==================================================================
இண்ட்லியில் வாக்களிக்க இங்கு அழுத்திச் செல்லவும்


இதன் அடுத்த பகுதி விரைவில் வரும்.

Read more...

Thursday, July 1, 2010

இதயமே.., இதயமே...,


=========================================================

=========================================================


பகிர்ந்து கொள்வதற்காக யூ ட்யூப்பில் ஏற்றிய கணவான்கள் வாழ்க

தமிழீஷில் ஓட்டுக்காக இரண்டு முறை குத்தவும்

Read more...

Wednesday, June 30, 2010

உயிரோடு விளையாடி....., ஒரு கிராமப் புற மருத்துவம்

B R M S

Bachelor of Rural Medicine and Surgery

மத்திய அரசால் புதிதாக அறிமுகப் படுத்தப் பட இருக்கிற மருத்துவப் படிப்பு. இந்தப் படிப்பு 3 1/2 ஆண்டுகள் இருக்கும் என்றும் இதை முடிப்பவர்கள் கிராமங்களில் ஊசி போட்டு மருத்துவம் பார்க்கலாம் என்று செய்திகள் சொல்லுகின்றன. ஆனால் அறுவை சிகிச்சை செய்யக்கூடாது என்றும் சொல்லுகிறார்கள்.  இவர்கள் கிராமங்களில் மட்டுமே மருத்துவம் செய்ய அனுமதி என்று சொல்லுகிறார்கள்.

கிராமங்களில் பணிபுரியும் மருத்துவர்கள் பற்றாக்குறையை நீக்க இந்த ஏற்பாடு என்று சொல்லுகிறார்கள்.
===================================================================

இந்திய அளவில் நிலமை எப்படி இருந்தாலும், தமிழகத்தைப் பொறுத்தவரையில் பெரும்பாலான கிராமப் புற மருத்துவமனைகளில் (அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் ) மருத்துவர்கள் பணியில் இருக்கிறார்கள்.  வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து பணிக்காக நிறையப் பேர் காத்துக் கொண்டு இருக்கிறார்கள். அரசும் தேவைக்கேற்ப கடந்த சில ஆண்டுகளில் மூன்று, ஆறு மாத இடைவெளிகளில் காலி இடங்களை நிரப்பிக் கொண்டும் புதிய பணியிடங்களை உருவாக்கிக் கொண்டும் இருக்கிறார்கள்.

=====================================================================

இப்போது பி. ஆர். எம். எஸ் படிப்பு பற்றி எனக்கு சில சந்தேகங்கள். யாராவது இது பற்றிய சுட்டிகள் கிடைத்தால்  பின்னூட்டத்தில் கொடுங்கள். தெளிவு பெற உதவியாக இருக்கும்.

1. எம்.பி.பி.எஸ் க்கு சமமான கல்வியாக் பி.ஆர். எம் .எஸ் இருக்க முடியுமா?
கண்டிப்பாக முடியாது எனபதால்தான் இது வேறொரு படிப்பாக அமைகிறது.
அப்படியென்றால் கிராமப் புறத்தான் உயிர் நகரவாசிகளின் உயிரை விட மட்டமானதா? ( இந்தக் கேள்வியைப் பலரும் கேட்டாலும் எனது முதல் கேள்வியும் அதுதான்)

2. பல நகரங்களை ஒட்டி கிராமப் பஞ்சாயத்துக்கள் இருக்கின்றன. அந்த கிராமப் பஞ்சாயத்துக்களை பொதுவாக நகரம் என்றே பொதுமக்கள் சொல்லுவார்கள். ஆனால் நிர்வாகம் கிராமப் பஞ்சாயத்து, நகரப் பஞ்சாயத்துகளில் வரும். அதாவது ஆங்கிலத்தில் ரூரல் ஏரியா.  அவைகளில் இவர்கள் தொழில் செய்ய குவிய மாட்டார்கள் என்பது என்ன நிச்சயம்?


ஒருவேளை இப்படி ஒரு படிப்பு வந்தால் இந்த விஷயத்தில் இரண்டு வகையினருக்கும் பெரிய வித்தியாசம் இருக்காது  

3.இவர்கள் அறுவை சிகிச்சை செய்யக் கூடாது என்று சொல்லுகிறார்கள். ஆனால் 3 1/2 ஆண்டுகள் படிக்கும் நர்சுகள் மருத்துவருக்கு அறுவை சிகிச்சையின் போது உதவி செய்கிறார்கள். மருத்துவரின் கட்டளைக்கேற்ப அறுவை அரங்கில் செவிலியர்கள் செயல்பட்டால் மிக விரைவில் வெற்றிகரமாக அறுவை சிசிக்கை முடிவடையும். அதுபோன்ற திறமைவாய்ந்த  செவிலியருக்கு அறுவை சிகிச்சை நேரத்தையே மாற்றி அமைக்கக் கூடிய நிகழ்ச்சிகளும் இருக்கின்றன.

இந்த பி. ஆர். எம். எஸ் மருத்துவர் அவரை விட மேம் பட்டவரா?  இவர் அறுவை சிகிச்சைப் பக்கமே போகக் கூடாது என்பதால் செவிலியரே மேம்பட்டவர் என்பதாகத்தான் தோன்றுகிறது.

இப்படி ஒரு அரைகுறை படிப்பு ஆரம்பிப்பதற்கு பேசாமல் செவிலியருக்கே தனியாக தொழில் பார்க்கும் உரிமை வழங்கிவிடலாமே.

4. பி. ஆர். எம். எஸ் படிக்கும் மருத்துவர்  மேல் படிப்பு படிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டால்  அவருக்கு திறமையும் இருந்தால் அவருக்கு என்ன வழி காட்டப் போகிறார்கள்?

எம்.பி.பி.எஸ் ஸின் மேல்படிப்புகளுக்கு அனுப்பலாம் என்றால் மாணவர்கள் பி. ஆர். எம். எஸ்ஸை ஒரு குறுக்கு வழியாக கருத மாட்டார்களா?

அல்லது  அவர்களுக்கே தனி மேல் படிப்புகள் உருவாக்கப் பட்டால் அப்போது பாடத்திட்டங்கள் மற்றும் செலவுகள் எம்.பி.பி.எஸ் போன்றே ஆகிவிடாதா?

5. 12ஆம் வகுப்பு முடித்த தகுதி வாய்ந்த மாணவர்களுக்கு பி. ஆர், எம்.எஸ் படிப்பில் சேர்க்கப் படுவார்கள் என்றால்

எம்.பி.பி.எஸ் படிக்க வேறு ஏதாவது தகுதி கொண்டு வரப் போகிறார்களா?

ஏற்கனவே ஆறு ஆண்டுகள். இன்னும் வேறு எம்.பி.பி.எஸ். முடிக்க காலம் கூட்டப் போகிறார்களா?

5 1/2 ஆண்டுகள் என்று சொன்னாலும். ஜூலை, ஆகஸ்டில் ஆரம்பிக்கும் கல்வியாண்டு 4 1/2 ஆண்டுகள் ஜனவரியில் முடிந்து பிப்ரவரியில் தேர்வு எழுத தேர்வு முடிவுகள் வந்த பின் தேர்ச்சி பெற்றவர்கள் பயிற்சிகள் காலத்திற்குள் நுழைவார்கள் எனவே  முடிக்க ஆறு ஆண்டுகள் ஆகிவிடும்.


எம்.பி.பி.எஸ் படிப்பின் காலத்தைக் குறைக்க ஒரு எளிமையான வழி இருக்கிறது. எம்.பி.பி.எஸ் மாணவர்களின் படிப்பின்போது ஞாயிறு, மற்றும் தீபாவளி, கிறிஸ்துமஸ் போன்ற பண்டிகை விடுப்புகள் உள்ளன. அந்த நாட்களில் வகுப்புகள் வைத்தால்  ஆண்டுக்கு இரண்டு மாதங்கள் மிஞ்சும். 4 1/2 ஆண்டுகளில் ஓராண்டை அழகாக மிச்சப் படுத்தி விடலாம்.

இந்த யோசனையைக் கண்டு சிரிக்க வேண்டாம். ஏற்கனவே முதுகலை பயிலும் மாணவர்கள் ஞாயிறு,  ரம்ஜான், பொங்கல் விடுப்பு இல்லாமல்தான் படித்துக் கொண்டு இருக்கிறார்கள்.

6.கலைஞர் காப்பீட்டுத்திட்டம் மூலமாக தமிழ் நாட்டில் கடைக்கோடி கிராமத்திற்கு பெரிய பெரிய மருத்துவமனைகள் வந்து நோயாளிகளை அழைத்துச் செல்லும் நிலை தமிழ்நாட்டில் உள்ளது. இதற்கு அடுத்த கட்டமாக அந்த சிகிச்சையையும் அதே கிராமத்தில் செய்யும் நிலை கொண்டு வர வேண்டாமா?  அதற்குப் பதிலாக ஏற்கனவே இருப்பவரை விட வல்லமை குறைந்தவரையா அனுப்ப வேண்டும்?

==============================================================

இந்த இடுகை நிறையப் பேரைச் சென்றடைய வேண்டும் என்று நினைக்கிறேன். எனவே நீங்கள் உங்களால் முடிந்த வழிகளில் மற்றவர்களுக்கு இதை பரப்புங்கள்.

தமிழீஷில் வாக்களிக்க இங்கு அழுத்துங்கள்

Read more...

Thursday, June 17, 2010

பாம்புக்கடி மருத்துவர் பாகம் ஒன்று

போலி மருத்துவர் என்பவர் சமுதாயத்தில் ஒரு அங்கமாகவே மாறியிருக்கிறார். இங்கு நான் போலி மருத்துவர் என்று கூறுவது என்ற அடிப்படையுமே இல்லாமல் மருத்துவம் செய்பவர்களைப் பற்றியது. மாற்றுமுறை மருத்துவம் செய்பவர்களைப் பற்றியது அல்ல. தேவையில்லாமல் மாற்று முறை மருத்துவ அறிஞர்களுடன் போட்டுக் குழப்பிக் கொள்ள வேண்டாம்.

முதல் கட்டமாக பாம்புக் கடி.

நாட்டில் உள்ள பாம்புகளில் 80 சதவீதம் பாம்புகள் விஷத்தன்மை அற்ற பாம்புக்களே.., அதில் விஷத் தன்மையுள்ள பாம்புகளிலும்கூட விஷத்துடன் கூடிய கடி என்பது அதிலும் பாதியே.. அப்படியென்றால் விஷ பாதிப்பு ஏற்படுத்தக்கூடிய அளவு என்பது மிகக் குறைந்த அளவே..,

பாம்பு கடித்தால்

பாம்புக் கடித்தால் நமது ரத்த மணடலமும் நரம்பு மண்டலும் பாதிப்புக்கு உள்ளாகி மரணம் சம்பவிக்கிறது.ரத்த மண்டலத்தில் ரத்தம் உறையாத் தன்மை ஏற்படுவதன் மூலம் தொடர் உதிரப் போக்கும், திசுக்களிடையே கசிவு ஏற்படுவதன் மூலம் வீக்கம், வீக்கம் அழுத்துவதன் காரணமாக ஏற்படக்கூடிய விளைவுகள் ( மூளையில் ஏற்பட்ட ரத்தக்கசிவு வாதத் தன்மையாகக் கூட வெளிப்பட வாய்ப்பு உண்டு. அந்தச் சூழலில் பாம்பு கடித்தது என்ற தகவல் மருத்தவரை அடைந்திருக்க வேண்டும். அல்லது அந்த மருத்துவர் இதுபோன்ற நோயாளியை தன்வாழ்நாளில் பார்த்திருக்க வேண்டும். அப்போதும் கூட 20நிமி. ரத்த உறைவுச் சோதனை செய்யப் பணித்து விஷமுறிவு மருந்து போடும்போது உறவினர்களால் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப் பட்ட சம்பவங்கள் உண்டு.) அதிகமான ரத்த இழப்பு காரணமாக மரணம் ஏற்படவும் வாய்ப்புண்டு

நரம்பு மண்டலம் பாதிப்பின் ஆரம்ப அறிகுறிகளாக நாக்கில் உள்ள சுவை அரும்புகள் பாதிக்கப் படுதல், மற்றும் மேல் இமை பாதிக்கப் படுதல் போன்றவை நிகழும் தொடர்ச்சியாக மற்ற நரம்புகள் பாதிப்பு ஏற்படுகிறது. சுவாச செயலிழப்பு, மூளை இயக்கமின்மை போன்றவற்றால் மரணம் நிகழ வாய்ப்புண்டு.


இவ்வாறான சூழலில் ஒரு பாதிக்கப் பட்டவர் மருத்துவரை அணுகினால் என்ன நடக்கும் என்று பார்ப்போம்.

பொதுவாக மேற்கண்ட ரத்த மண்டலம் அல்லது நரம்ப்பு மண்டலம் அல்லது இரண்டுமண்டலங்களுமே பாதிப்பு ஏற்படும் முன் விஷமுறிவு மருந்து செலுத்துதலே பாதுகாப்புத் தன்மையை அதிகரிக்கும்

கிராமப் பகுதிகளில்தான் பெரும்பாலான பாம்புக்கடிகள் நடக்கின்றன. கிராமங்களில் பெரும்பாலும் ஒவ்வொரு ஒன்றியத்திற்கும் நான்கு அல்லது ஐந்து ஆரம்ப சுகாதார நிலையங்கள் இருக்கின்றன. அந்த நிலையங்களுக்கு ஏதாவது ஒரு வாகனம் பிடித்துத்தான் செல்ல வேண்டும். தற்போது 108 ஆம்புலன்ஸ் இருப்பதால் இது போன்ற சூழல்கள் ஓரளவு சமாளிக்கப் படுகின்றன. சில ஆண்டுகளுக்கு முன்பு வரை போக்குவரத்து என்பதே குதிரைக் கொம்பாக இருந்தது.

பாம்பு கடிபட்டவருக்கு ரத்தத்தில் விஷத்தன்மை பரவியுள்ளதை கண்காணிக்க 20நிமி. ரத்த உரைதல் பரிசொதனை செய்யவேண்டும். அது உரையும் தன்மை சாராசரியாக இருந்தால் கூட மீண்டும் ஒருமுறை ஆறுமணிநேரம் கழித்துச் செய்யவேண்டும். கடைசிக் கட்டத்தில் கடிபட்டவருக்கு செயற்கை சுவாசம் வைக்கும் வரை கூடப் போலாம் என்ற சூழல் இருப்பதால் முதலுதவி மருத்தினைக் கொடுத்து அருகிலுள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பும் நிலைதான் இருக்கிறது. அங்கு தேவையான பரிசோதனைகளைச் செய்து தகுந்த சிகிச்சையும் செய்கிறார்கள்.


இவ்வாறு அனுப்புவது என்பது பாதிக்கப் பட்ட ஒரு நபர்கூட பிரச்சனைகளில் சிக்கிக் கொள்ளக்கூடாது, அனைவரையுமே காப்பாற்ற வேண்டும் என்ற நல்ல எண்ணத்தில்தான்.


போலி மருத்துவரிடம் சென்றால்

போலி பாம்புக்கடி மருத்துவர்கள் ஒரு செடியை வைத்திருக்கிறார்கள். அந்த செடி மிகக் கசப்புத்தன்மை வாய்ந்ததாக இருக்கிறது. அதை சராசரி மனிதர்களால் சாப்பிட முடியாத அளவு கடும் கசப்புசுவையுடன் இருக்கும். அதை கடி பட்டவரிடம் கொடுத்து சாப்பிடச் சொல்லும்போது அவர் சுலபமாக மெல்ல முடிந்தால் அந்த நபரின் உடலில் விஷம் வேலைசெய்ய ஆரம்பித்துவிட்டதென்று அறிந்துகொள்ளமுடியும். (சுவை அரும்புகள் பாதிப்படைந்துவிட்டன அல்லவா)

அடுத்ததாக தூங்கக் கூடாது என்று கூறுவார்கள். மேல் இமை செயல் இழந்துவிட்டால் தானாகவே இமைகள் மூடிக்கொள்ளூம். பாதிக்கப் பட்டவரை தூங்கக்கூடாது என்று பணிக்கும்போது விஷத்தால் பாதிப்பு ஏற்பட்டவர் தன்னையும்மீறி கண்களை மூடிவிடுவார். கடி பட்டவர் கண்களை மூடிவிட்டால் இனி தனது மருத்துவம் ( போலி தான்) பயனளிக்காது என்று கூறி அவரை அனுப்பிவிடுவார். ரத்த இழப்பு அதிகமாக இருந்தாலும் கண்கள் மயக்கத்தில் சுழற்றிக் கொண்டுவரும்.


அதாவது இந்த போலி ஆட்கள் என்ன செய்கிறார்கள் என்றால் விஷத்தால் பாதிக்கப் பட்டவர்கள் என்று தெரிந்து கொண்டுவிட்டால் அவரை நகரத்திற்கு அனுப்பிவிடுகிறார்கள். பொதுவாக இவ்வாறு விஷத்தால் பாதிப்பு ஏற்பட்டபின் நோயாளியை காப்பாற்றுவது என்பது மிக மிக மிக கடினம். விஷத்தால் பாதிக்கப் படாதவரை காப்பாற்றியதாக பெருமையடித்துக் கொண்டிருப்பார். அதை அந்த ஊர் மக்களும் பெருமையாக பேசிக் கொண்டிருப்பார்.


அதாவது விஷத்தால் துளி கூட பாதிக்கப் படாத நபரை அவர் காப்பாற்றியதாக பெயர் வாங்கிக் கொள்கிறார். விஷத்தால் பாதிக்கப் பட்டவரை காப்பாற்ற எந்த நடவடிக்கையும் எடுக்காமல் மரணமடையவிட்டுவிடுகிறார்.

இந்த போலிநபர் கைவிட்டுவிட்டால் அந்த அந்த நபரை எவராலும் காப்பாற்ற முடியாது என்ற வகையில் ஒரு விளம்பரவாக்கியத்தை உருவாக்கி வைத்திருப்பார்கள்.


ஆனால் உண்மையில் அவர் அந்த கடிபட்டவரை முதலிலேயே விஷமுறிவு மையத்திற்கு அனுப்பி இருந்தால் காப்பாற்றி யிருக்க முடியும்.

உண்மையான மருத்த்வரிடம் சென்றால் அவர் முதலுதவிகொடுத்தபின் அவரை அருகிலுள்ள விஷ்முறிவு மைய்த்திற்கு அனுப்பிவிடுவார் எந்த நேரமாக இருந்தாலும். அவருக்கு கிடைக்கும்பெயர் இதெல்லாம் பார்க்கத் தெரியாது அவரிடம் ஏன் போக வேண்டும்?

நமக்கு இன்னொரு கேள்வியும் எழலாம். ஏன் இதுபோன்ற வசதிகளை ஒவ்வொரு கிராமத்திலும் ஏற்படுத்தக்கூடாது என்று சிலர் கேட்கலாம். அடிப்படை முதலுதவிகள் அனைத்து ஆரம்ப சுகாதார நிலையத்திலும் செய்துவிட்டு மேற்கொண்டு எந்த பாதிப்பும் ஏற்படாமல் இருக்க அருகிலுள்ள விஷமுறிவு மையத்திற்கு மிக வேகமாக அனுப்பிவிடுகிறார்கள்.

இதன்காரணம் எந்த கடிபட்டவருமே ஆபத்தில் சிக்கிக் கொள்ளக்கூடாது என்ற எண்ணமே.

ஆனால் மக்களுக்கு அதிகமான திருப்தியைக் கொடுக்கவல்லவராக போலி வைத்தியரே இருக்கிறார்.

எனது தனித் தனிப்பட்ட கருத்து:

உண்மையிலேயே ஒரு மூலிகை எந்தவித கொடிய விஷத்தையும் முறிக்க வல்லதாக இருந்தால் அதை அரசிடம்தெரிவித்து அந்த மூலிகைகளை மிக அதிகமான அளவு தயாரித்து நாட்டில் பாம்பு கடி பட்ட யாருமே உயிரிழக்காச்சூழலை ஏற்படுத்தலாமே

தனித் தனிப்பட்ட கருத்து 2:-

சிலரிடம் அவ்வாறு மூலிகைகள் இருப்பதாகக்கூடத் தோன்றுகிறது. அதை அவர்கள் தங்கள் பரம்பரை ரகசியமாக வைத்துக் கொண்டு தங்கள் பரம்பரை மட்டும் சம்பாதிக்க உபயோகப் படுத்திக் கொண்டு இருக்கிறார்களோ என்ற சந்தேகமும் சில நேரங்களில் எழுகிறது.

அடுத்தடுத்த பகுதிகளில் நாய்க்கடி, நெஞ்சுவலி போலி மருத்துவர்கள் பற்றிப் பார்க்கலாம்.

தமிழீஷில் வாக்களிக்க இங்கு அழுத்தவும்

Read more...

Saturday, June 12, 2010

உங்கள் நண்பர் சிகரெட் பிடிப்பது ஏன்?

அமெரிக்காவுக்கும் இது பொருந்தும், இந்தியாவுக்கும் இது பொருந்தும்








தமிழீஷில் ஓட்டுக் குத்த இந்த இடம்

Read more...

Monday, June 7, 2010

நண்பர் முகிலனின் நட்சத்திரப் பதிவுக்கு ஒரு மறுமொழி

டிஸ்கி:- இது முழுக்க முழுக்க ஒரு பின்னூட்டமே,இதனை எதிர்விளைவு என்பதைவிட விளைவு என்றே கொள்ளலாம். இதில் சண்டை போட நினைப்பவர்கள் ஆக்க பூர்வமான விஷய்ஙகளை மட்டுமே விவாதத்திற்கு கொண்டுவரவும். (சில நபர்களை என்றும் திருத்தவே முடியாது. அவர்களை திருத்துவதைவிட பெறும்பான்மையானவர்களுக்கு சரியான கோணத்தைக் காட்டிவிட்டால் போதும் என்று  எனது ஆசிரியர் கூறுவதுண்டு. எனவே பிரச்சனை சரிசெய்வதைப் பற்றி மட்டுமே பேசவும்.)

இந்திய மருத்துவர்களே!!! ஏன் இப்படி?



என்ற நண்பர் முகிலனின் தமிழ்நட்சத்திர பதிவுக்கு பதிலாக என்பதைவிட பின்னூட்டமாகவே இந்த இடுகைத் தருகிறேன்.

எனக்கு வெளிநாடுகளில் எப்படி என்றெல்லாம் தெரியவில்லை. நமது பகுதியில் நடைபெறும் சில விஷயங்களில் நிகழும் சில தவறான புரிதல்களுக்காக இதை எழுதுகிறேன்.

  அவர் கூறியுள்ள குற்றச்சாட்டுக்களுக்கு முதல் அடிப்படைக்காரணம் மருத்துவருக்கும் அவருக்கும் நடுவில் உள்ள ஒரு திரை. 
//“you should trust us"//  இந்த வாக்கியம் அவரைக் கோபப் படுத்தி இருக்கும். ஆனால் முதலில் அதுதான் உண்மையும் கூட.

குடும்ப மருத்துவர் என்ற ஒரு முறை கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து போனதுதான். இதற்கான அடிப்படைக் காரணம்.  ஒரு பொது மருத்துவரை மட்டுமே நாம் எப்போதும் அணுக வேண்டும். அவரது வழிகாட்டுதலின் பேரிலேயே  சிறப்பு மருத்துவர்களை அணுக வேண்டும்.  பெரும்பாலான நோய்களுக்கு M.B.B.S மட்டுமே படித்த மருத்துவரே போதும். அவரை எந்த சூழலிலும் அணுகும் நிலை இருக்கவேண்டும். சிறப்பு மருத்துவர்கள் தேவையான சூழலில் அவரது ஆலோசனைக்குப் பின்னர் சென்று ஆரம்ப கட்ட தொடர்சிகிச்சைக்குப் பின்னர் தொடர்சிகிச்சைக்கு நமது குடும்ப மருத்துவரை அணுக வேண்டும். சில பல ஆண்டுகளுக்கு பின்னர் குடும்பதில் உள்ள ஒவ்வொருவரின் உடல் நிலை அவர்களின் எதிர்பார்ப்பு போன்ற விஷயங்கள் அவரது மனதில் நன்கு பதிந்து இருக்கும். உங்கள் சந்தேகங்களுக்கு  தெளிவான பதிலை அவர் தருவார். ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு சிகிச்சைக்கும் ஒரு மருத்துவரை அணுகும்போது  அவருக்கு உங்கள் கேள்விக்கான பொருளை அவர் உங்களுக்கு சொல்வதிலும் நீங்கள் புரிந்து கொள்வதிலும் இடைவெளி ஏற்பட்டு தேவையில்லாத குழப்பங்களை ஏற்படுத்திவிடும்.

குறிப்பிட்ட சிறப்பு மருத்துவர் தேவையில்லாத அறுவை சிகிச்சைகளை ஏற்படுத்திவந்தால் உங்கள் குடும்ப மருத்துவர் அந்த குறிப்பிட்ட மருத்துவருக்கு எந்த நோயாளியையும் பரிந்துரைக்க மாட்டார். சில பல ஆண்டுகள் நீங்களும் அவரோடு பழகிவிட்டால்  அவரது நம்பகத்தன்மையும் உங்களுக்கு புரிந்து விடும்.   எனவே தைரியமாக அவர் சொல்வதைக் கேட்கலாம். நம்பலாம்.


சில நோயாளிகள் காய்ச்சல் என்று வருவார்கள். கூட தலைவலி, சளி, இருமல் போன்ற தொந்தரவுகளை சொல்லிவிட்டு  மருத்துவரிடம் எனக்கு என்ன வியாதி டாக்டர் என்று கேட்பார்கள். இந்தக் கேள்விக்கு நேரடியாக பொருள் எடுத்துக்கொண்டு நீங்கதான சொன்னீங்க சளி, காய்ச்சல் என்று அவரிடம் கோபப்படுவதில் அர்த்தம் இல்லை.   நோயாளி எதிர்பார்ப்பது  தனக்கு வந்திருக்கும் சளிக்காய்ச்சல் என்பது சாதாரண வகையா? அல்லது ஃப்ளூ, காச நோய் வகையா? என்பதான கேள்வி.  இது போன்ற புரிதல்களில் ஏற்படும் இடைவெளி குடும்ப மருத்துவரை அணுகும்போது மட்டுமே சரி செய்ய முடியும்.


Infectious diseaseகளில் ஒன்று  வயிற்றுப் போக்கு அதற்கு நோயாளியைத் தனிமைப் படுத்துதல் அவசியம் அதனால் உறவினர்களுக்கு அனுமதி மறுக்கப்படுவது உண்டு. இப்போதெல்லாம் பிரசவ அறைகளுக்குக் கூட துணைக்கு ஒருவரை அனுமதிக்கிறார்கள். அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் இந்த நிலை நடைமுறைக்கு வந்து சில ஆண்டுகள் ஆகிவிட்டன.  தவிரவும்  மருத்துவரின் பரிசோதனை என்பதுதான் இங்கு நோயாளியின் சிகிச்சையை நிர்ணயிக்கும். கண்களைச் சுற்றி உள்ள சுருக்கங்களின் தன்மை, வயிற்றுத் தோல் எடுத்துவிட்டால் பழைய நிலைக்கு போக ஆக் எடுத்துக் கொள்ளும் நேரம். நாக்குவறட்சி, நாடித்துடிப்பு போன்றவையே உடனடி சிகிச்சையை தீர்மானிக்க முடியும்.

இப்`போதெல்லாம் broad spectrum antibiotics பல உபயோகத்திற்கு வந்துவிட்டன. சில மருந்துகளை கொடுத்தாலே அனைத்துவகையான  பாக்டீரியா, வைரஸ் ஆகியவை எதிர்க்கும் சக்தி கிடைத்துவிடும்.  மலத்தை எடுத்து staining, culture and sensitivity  செய்வதால் ஆகும் கால தாமதம் மற்றும் வீண் செலவுகளை  மருத்துவரின் அனுபவம் தவிர்த்து விடும்.  எனவே மருத்துவரை நம்பித்தான் ஆக வேண்டும். அதற்கு அவரோடு நீண்ட காலப் பழக்கம் இருந்தால் மட்டுமே சாத்தியம்.

நோயாளிக்கு அளிக்கப் படும் சிகிச்சையை அவருக்கோ அவரது உறவினருக்கோ சொல்லிவிட்டுத்தான் சிகிச்சையை செய்வார்கள். ஆனால்  நோயாளியின் ஒவ்வொரு உறவினரும் வந்து கேட்டுக் கொண்டே இருக்க திரும்பவும் முதலில் இருந்து சொல்ல வேண்டிய சூழல் சிகிச்சை அளிப்பதை கால தாமதப் படுத்திவிடும்.  தவிர நமது ஊரில் ஒவ்வொரு நோயாளிக்கும் பலர் துணைக்கு வருவார்கள்.  உள்நோயாளி என்றால்  பெரிய கூட்டமே வந்து நிற்கும்.

ஒவ்வொரு நோயாளியும் வீட்டிற்குத் திரும்பும்போது தனக்கு அளிக்கப் பட்ட சிகிச்சைக்கான சுருக்கத்தையும்,  கட்டிய பணத்திற்கான ரசீதினையும் கேட்டுப் பெற வேண்டும். இது அவர்களது அடிப்படை உரிமை. மற்றும்  சமூகத்திற்கு ஒவ்வொருவரும் ஆற்ற வேண்டிய கடமை அப்போது மட்டுமே தரத்தினை நன்கு உயர்த்த முடியும்.



//அமெரிக்காவில் வசிக்கும் இந்தியக் குழந்தைகள் பலர் மருத்துவம் படிப்பது என்பதை ஆசையாக, குறிக்கோளாகக் கொண்டிருப்பர். நான் பல குழந்தைகளிடம் ஏன் என்று கேட்டிருக்கிறேன். அதற்கு அவர்களின் பதில் - “அப்போது தான் நிறைய சம்பாதிக்க முடியும்” என்பதாகவே இருக்கும்//


இந்த வரியைத் தொடர்ந்து எழுதப்பட்ட வரிகள் மிகவும் உண்மை. அப்படியே இந்த இடுகை நண்பரால் எழுதப் பட்ட ஒன்று அதையும் படித்துவிட்டு மீண்டும்  மேலே உள்ள வரிகளை கவனியுங்கள்.

உண்மையில் மருத்துவம் படித்த பலரும் பலவகைப் பொறியியில் துறைகளில் பணிபுரியும் பலரையும் விட குறைவாகவே சம்பாதிக்கிறார்கள்.


//பின்னோக்கி said... அப்புறம் இந்த ஸ்பெஷலிஸ்ட்கள் தொல்லை தாங்கலை.

அவர்கள் நம்மை மனிதனாக பார்ப்பதில்லை. கண் டாக்டர், கண்னை மட்டுமே கவனிக்கிறார்.///

குடும்ப மருத்துவர்   உங்களைத் தெளிவாக அறிவார்.  அவர் சொல்லும் கண்மருத்துவரிடம் சென்றுவிட்டு பின்னர் முடிவு செய்யும் உரிமையை அவருக்கு தரும்போது பிரச்சனை வராது.

//அமுதா கிருஷ்ணா said... ( யார் சார் 5 முதல் 8 வருடம் கஷ்டப் பட்டு படித்து விட்டு கிராமத்தில் குறைந்த சம்பளத்தில் வேலை செய்ய ஒத்துக் கொள்வர்)//

தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளில் பணிநியமணம் செய்யப் பாட்ட 3000க்கும் மேற்பட்ட மருத்துவர்களில் கிராமங்களுக்கு செல்ல மறுத்தவர்கள் விரல்விட்டு எண்ணிவிடலாம். இன்னும் பணிநியமணத்திற்காக காத்துக் கொண்டு இருப்பர்கள் எண்ணிக்கை 2000க்கும் மேல்.


//கண்ணா.. said... நமக்கான விளக்கங்கள் தர பொறுமை இல்லாத டாக்டர்கள்தான் நானும் அதிகம் சந்தித்தது. அவர்கள் விளக்கங்கள்தான் தரவில்லையே தவிர சிகிச்சை நல்ல முறையில் அளித்தனர்.//

குடும்ப மருத்துவர் என்று வந்து விட்டால் உங்கள் எதிர்பார்ப்புக்கேற்ப பதில் தந்து இருப்பார்.
//கோவி.கண்ணன் said...
இந்தியாவில் மருத்துவர்களுக்கு பொதுமக்கள் மீது என்றுமே அலட்சியம் தான். ஒரு சில விதிவிலக்குகள் உண்டு //
சிலர் இருக்கிறார்கள் ஆனால் ஒட்டுமொத்தமாக தவறான புரிதல். நோயாளிகளை அலட்சியப் படுத்தியவர்களை நோயாளிகள் அலட்சியப் படுத்தி விடுவார்கள். பின்னர் அவர் வீட்டில் சும்மா அமர்ந்திருக்க வேண்டியதுதான். ஊரில் மருத்துவர்களுக்கா பஞ்சம்.
======================================================

எனது நோயாளி ஒருவர். அவருக்கு அடிக்கடி நெஞ்சுவலி வருவதுண்டு. அவருக்கு பல விதமான பரிசோதனைகள் செய்து பார்த்து விட்டோம். இருதய மருத்துவர்கள் சிலரிடமும் காட்டிவிட்டோம். நெஞ்சக நோய் மருத்துவரிடமும் காட்டிவிட்டோம். சில காலங்களுக்குப் பின் அவருக்கு சில மாதங்களுக்கு ஒருமுறை நெஞ்சுவலி வரும். வலிநிவாரணி ஊசி ஒன்று பத்துரூபாய்க்குள் வரும். அதைப் போட்டால் சரியாகிவிடும். அவ்வப்போது போட்டுவிடுவேன். (இந்த முடிவு பல சிறப்பு மருத்துவர்களின் ஆலோசனைகளின்படி எடுக்கப் பட்டது).அந்த ஊசி மருந்தால் பொதுவான நெஞ்சுவலிகள் கேட்காது. வயிற்றுப் புண் இருப்பவர்களுக்கு அதிகமாக போடக்கூடாது. இருதய நோய் காரர்களுக்கும் அதிகமாக போடக்கூடாது. 



ஒருமுறை நான் எனது கிளினிக்கில் பிறிதொரு நபருக்கு தையல் போட்டுக் கொண்டு இருந்தபோது அவரை நெஞ்சுவலியோடு அழைத்துவந்தனர். உடனடியாக நான் கையுறைகளை களைந்துவிட்டு அவருக்கு போட வேண்டிய மருந்தினைப் போட்டுவிட்டு அவரைப் படுக்க சொல்லிவிட்டு நான் தையல் போட கையுறைகளை அணிந்து கொண்டிருந்தபோது அவரது சம்மந்தி வந்து அவருக்கு என்ன வியாதி என்று கேட்டார். சாதாரண நெஞ்சு வலிதான். சிறிது நேரத்திற்குப் பின் சரியாகிவிடும் என்று சொல்லிவிட்டு தையல்போடும் இடத்திற்கு சென்றேன். மீண்டும் மீண்டும் கேள்விகள் வந்து கொண்டிருந்தன.
அங்கு பாதித் தையல். ரத்தக் கசிவு இல்லாமல் இருக்க தற்காலிகமாக பஞ்சுமுதலியவை வைத்து இருந்தேன். அவசரம் காரணமாக அவரது மகனிடம் கேளுங்கள் அல்லது சில நிமிடங்களில் இவரே சரியாகிவிடுவார். அவரே சொல்லுவார் என்று சொல்லிவிட்டு தையல் போட ஆரம்பித்துவிட்டேன். போகும்போது சொல்லிக்கொண்டுதான் போனார்கள்.



சில மாதங்கள் களித்து அவருக்கு நெஞ்சு வலி வந்தபோது 
நான் சொன்ன பதிலால் கொதிப்படைந்த சம்பந்தி புதிய ஒருவரிடம் அழைத்துச் சென்று பின்னர் முதலில் இருந்து எல்லாம் தொடங்கி சில மாதங்கள் வரை தொடர்ச்சியாக அவ்வப்போது வலியுடனே இருந்தார். பின்னர் என்னிடமே திரும்பிவந்தனர். 


அதில் ஏற்கனவே உள்ள பரிசோதனைகளை மீண்டும் செய்து கொண்டே இருந்திருக்கின்றனர். சிறப்பு மருத்துவராக இருக்கும்போது அவரது துறையில் சிறப்பிடம் பிடித்துவிட்டால் மற்ற துறைகளில் அவர்கவனம் செலுத்த போதிய கால அவகாசம் இல்லை என்ற சூழல் வந்து விடுகிறது. பல துறைகளையும் சந்தித்து நோயாளிக்கு முழுமையான சிகிச்சை கிடைக்க பொது மருத்துவர் குடும்ப மருத்துவரால் மட்டுமே முடியும்.


குடும்ப மருத்துவரான  நான் இருதய தொந்தரவோடு, நெஞ்சக நிபுநர், எலும்பு மருத்துவர், மற்றும் மனநல மருத்துவரையும் அணுகி இருந்தேன். நோயாளிக்கும் அவரது மகனும் இது தெரியும்.  


இருதய மருத்துவரை அணுகி அவர்கள் இருதய தொந்தரவு ஏதும் இல்லை என்று உறுதி அடையும் வரையிலான அதிகப் படியான பரிசோதனைகளை செய்து கொண்டே இருந்திருக்கிறார்கள். இந்த மருந்துகள் போதும் என்று இருதய நிபுநர் சொல்லியும்கூட  வலி குறைய வில்லை என்பதற்காக மேலும் மேலும் பரிசோதனைகள் போய் கொண்டே இருந்திருக்கின்றன.  பின்னர் இருதய நிபுநரே  அனுப்பிய பின்னர் திரும்பவும் என்னிடம் வந்திருக்கின்றனர். அவர்கள் செய்திருந்த முதலில் செய்த பரிசோதனைக் காகிதங்களில் பாதியை த் தொலைத்து வேறு இருந்தனர்.


தமிழீஷ் ஓட்டுக்கு

Read more...

Sunday, May 16, 2010

உங்கள் மகனை /ளை மருத்துவராக்கப் போகிறீர்களா?

//“செய்யும் தொழிலே தெய்வம்; அதில் ஏற்றத் தாழ்வு கிடையாது; தொழிலை வைத்து மனிதரை எடைபோடுவது தவறு” என்பதெல்லாம் மேலுக்குப் பேசப்படும் நிஜமான நீதி என்றாலும் தனி மனித அனுபவங்களும் புழுக்கங்களும் அவரவர் மாத்திரமே அறிந்தவை.


//

தொடர்ந்து படிக்க இங்கே செல்லுங்கள்

=====================================================

விவாதங்களைத் தெரிந்து கொள்ளுங்கள். பின்னர் இந்த வலைப்பூவையும் வலம்வாருங்கள். ஒரு முடிவு எடுங்கள்

Read more...

Saturday, May 1, 2010

கூட்டு உழைப்பு - இருதயக் குறைபாடு - தொடர் சிகிச்சை










சென்ற ஆண்டில் திண்டுக்கல் சுகாதார மாவட்டத்தில் சத்தம் இல்லாமல் ஒரு புரட்சி நடந்தது.  அந்த மாவட்டத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் அங்குள்ள மருத்துவகுழுவினர் ஆய்வு செய்து  அங்குள்ள பள்ளிக்குழந்தைகளில் பிறவி இருதய நோயால் பாதிக்கப் பட்டவர்கள்., மற்றும் ருமாட்டிக் இருதய நோயால் பாதிக்கப் பட்டவர்களின் பட்டியல் தயாரிக்கப் பட்டது, இதில் கிடைத்த முடிவானது ஏறக்குறைய அங்கீரம் பெற்ற முக்கியப் பாடப் புத்தகங்களில் உள்ள சராசரியை ஒத்து வந்திருப்பதால் அவர்கள் மிகச் சரியான வழிவகைகளைப் பின்பற்றி இந்தச் சாதனையை செய்ததாகச் சொல்லலாம்.

பள்ளிக் குழந்தைகளுக்கான வாழ்வொளித் திட்டம்:-  இந்தத் திட்டத்தின் மூலம் தமிழகத்திலுள்ள அனைத்து ஆரம்ப சுகாதார நிலையத்திலுள்ள மருத்துவ குழுவினர் வியாழக் கிழமைகளிலில் தங்கள் பகுதியைச் சேர்ந்த பள்ளிகளை பார்வையிட்டு குழந்தைகளின் சிறுவியாதிகளுக்கு மருத்துவம் பார்த்தல், மற்றும் பெரிய வியாதிகளை முளையிலேயே கிள்ளி எரிதல் மற்றும் சுகாதார கல்வியினை வழங்குவார்கள்.  இது அனைத்து வியாழக்கிழமைகளிலும் நடைபெறும்.  மே மாதத்தில் வரும் வியாழன்கள் தவிர அனைத்து வியாழன்களிலும் மருத்துவக் குழுவினர் பள்ளிக் குழந்தைகளை ஆய்வு செய்து கொண்டு இருப்பார்கள்.   இதற்கான முன்பயணத்திட்டம் அந்த அந்த ஆரம்ப சுகாதார நிலையத்தாரால் தயாரிக்கப் பட்டு அதன் ஒரு பிரதி  அந்த மாவட்ட துணை இயக்குநர் சுகாதாரப் பணிகள் அவர்களுக்கும்,. பள்ளிக் கல்வி அலுவலர் அவர்களுக்கும் அனுப்பப்படும்.  அந்த முன் பயணத்திட்டம் எந்த இடர்பாடுகள் வந்தாலும் கண்டிப்பாக நிறைவேற்றப் படும். அப்படித்தான் நடந்து வருகிறது.

சில பள்ளிகளில் நூற்றுக்கணக்கில் மாணவர்கள் இருப்பார்கள். வெகுசில பள்ளிகளில் சில ஆயிரம் மாணவர்கள் இருப்பார்கள். அவர்கள் அனைவரின் இதயத்தையும் ஸ்டெத்தாஸ் கோப் வைத்துப் பார்ப்பது என்பது முழு அர்பணிப்பு உள்ளவர்களாலேயே முடியும்.  காதில் அந்த ''கிளிப்'' பகுதியை வைத்து எடுத்து வைத்து எடுத்து கொஞ்சம் அந்த சிரமத்தை யோசித்துப் பாருங்கள்.  வேகமாகவும் செய்ய வேண்டும். அதே நேரத்தில்  எந்த குழந்தையையும் தவரவிடுதல் கூடாது.  இது கம்பிமேல் நடப்பது மாதிரி என்று சொன்னாலும் என்னைக் கேட்டால் கம்பி மேல் ஓடுவது போன்ற ஒரு செயல். 


முதல்நாளே பள்ளித் தலைமை ஆசிரியரின் நினைவு படுத்திவிட்டு உயரம் எடை பார்த்துவைத்து மறுநாள் பள்ளிகளில் அனைத்துக் குழந்தைகளையும் பரிசோதனை செய்ய வேண்டும். பல கிராமப் புறப்பள்ளிகளில் சரியான அறைவசதி இருக்காது, பெண்களை மறைவிடத்தில் வைத்து செய்ய வேண்டிய பரிசோதனைக்கும், வளரிளம் பெண்களுக்கு கொடுக்க வேண்டிய சுகாதார கல்விக்கும் தனியறையை கொடுத்துவிட்டு பெரும்பாலும் மரத்தடியில்தான் மருத்துவர்கள் அமர்ந்து தங்கள் பணியைச் செய்ய வேண்டிய சூழல் இருக்கும்.  அதிலும் சில பள்ளித் தலைமை ஆசிரியர்கள் இதற்கு வசதி ஏற்படுத்தித் தருவதில் பெரிய சிரத்தை எடுத்துக்கொள்ள மாட்டார்கள். சிலர் செய்ய நினைத்தாலும் அங்கு வசதிகள் இருக்காது.  அதையும் தாண்டித்தான் பரிசோதனைகள் செய்து வருகிறார்கள்.


இது தமிழகத்தில் உள்ள அனைத்து ஆரம்ப சுகாதார நிலையத்தார் மூலமாக நடைபெறுகிறது. நகரங்களில் குழந்தைகள் நலத்திற்கு தனி மருத்துவர் இருப்பார். ஆரம்ப சுகாதார நிலையங்களில்  அங்குள்ள மருத்துவரே இந்தப் பணியையும்  அந்தப் பகுதிக்கு உட்பட்ட பள்ளிக்கு நேரிடையாகச் சென்று செய்வார்.  சில பள்ளிகள் ஆரம்ப சுகாதார நிலையத்திலிருந்து வெகுதூரத்தில் இருப்பதுண்டு, பேருந்து வசதிகளும் சொல்லிக் கொள்ளும் வகையில் இருக்காது, புற நோயாளிகள் பிரிவினைப் பார்த்து விட்டு பள்ளிக்குச் செல்வார் மருத்துவர்.

எல்லாப் பகுதிகளிலும் செய்திருந்தாலும் திண்டுக்கல்லில் செய்தது மிகவும் திட்டமிட்டு ஒரு குழந்தையைக் கூட தவற விடாவண்ணம் மிக அழகாகச் செய்து முடிக்கப் பட்ட செயல் . 2,24,089 குழந்தைகளை பரிசோதனை செய்ததில்
495 குழந்தைகள் பிறவி இருதயக் கோளாறுகளால் பாதிக்கப் பட்டு இருப்பது தெரிய வந்தது.

அந்த பரிசோதனையில் முடிவில் கண்டறியப் பட்ட குழந்தைகள் அனைவரையும் தகுந்த மேல் பரிசோதனைக்கு அனுப்பி அறுவைச் சிகிச்சை தேவைப்படும் அனைத்துக் குழந்தைகளுக்கும் இளஞ்சிறார் இருதய பாதுகாப்புத் திட்டம் மூலமாகவும் விடுபட்ட சில குழந்தைகளுக்கு கலைஞர் காப்பீட்டுத்திட்டம் மூலமாகவும் சிறிதும் செலவில்லாமல் அறுவை சிகிச்சைகள் செய்யப் பட்டுவிட்டன.  மருத்துவ சிகிச்சை மட்டும் தேவைப் படும் குழந்தைகளுக்கு அரசு மருத்துவமனைகள் மூலம் தொடர் சிகிச்சை தரப் பட்டு வருகிறது.


ஒவ்வொரு மாதாந்திர ஆய்வுக் கூட்டத்திலும்  ஆரம்ப சுகாதார நிலைய அளவிலும் வட்டார அளவிலலும் இந்தக் குழந்தைகளின் உடல் நிலை ப் பற்றிய தகவலகள் விவாதிக்கப் படுகின்றன. களப் பணியாளர்கள் அந்தக் குழந்தைகள் குடியிருக்கும் பகுதிகளுக்குச் செல்லும்போது சிறப்புக் கவனத்தினை அந்தக் குழந்தைகளுக்கு வழங்கி வருகின்றனர். இடைப்பட்ட காலத்தில் எந்தத் தொந்தரவு ஏற்பட்டாலும் தொலைபேசி வழியிலும், நேரடியாகவும்  அந்தக் குழந்தைகள் மற்றும் உறவினர்கள் ஆரம்ப சுகாதார நிலையத்தை எளிதில் அணுகும் வகையில் வசதி ஏற்படுத்தப் பட்டிருக்கிறது,. இந்த வசதியாகப் பட்டது தமிழக அளவில் உள்ள அனைத்து ஆரம்ப சுகாதாரநிலையங்கள் மூலமாகவும் நடைபெற்று வருகிறது.


இந்த வசதிகளை மிகத் துல்லியமாக செய்து வருகின்ற திண்டுக்கல் சுகாதார மாவட்டத்தினைச் சேர்ந்த அனைவருக்கும் வாழ்த்துக்கள் மற்றும் பாராட்டுதல்களை தெரிவியுங்களேன்.  தமிழக சுகாதார அமைப்பின் மூலம் நடைபெற்ற கருத்தரங்கில் வெளியிட்ட மலரில் திண்டுக்கல் துணை இயக்குநரின் ஆய்வுக் கட்டுரையின் சுருக்கம் மேலே தரப் பட்டுள்ளது. அந்த கருத்தரங்கில் சமர்ப்பிக்கப் பட்ட ஆய்வுக் கட்டுரைகளில் அவரது கட்டுரை முதலிடம் பிடித்தது குறிப்பிடத்தக்கது.


தமிழிஷில் வாக்களிக்க இங்கு அழுத்தவும்

Read more...

Saturday, April 24, 2010

கருத்தரங்குத் துளிகள்

ஏபரல்9 மற்றும் 10 தினங்களில் ஏலகிரியில் தமிழ்நாடு சுகாதார அமைப்பின் சார்பில் நடைபெற்ற கருத்தரங்களில் சில காட்சிகள். தொடர்புடைய இடுகை இங்கே

மேலும் இடுகைகள் தொடரும்

தமிழிஷில் வாக்களிக்க இங்கு அழுத்தவும்

Read more...

Thursday, April 22, 2010

மருத்துவரை மணந்து கொள்ள பத்துக் காரணங்கள்

ஒரு மருத்துவரை மணந்து கொள்ள அருமையான சில காரணங்கள்

Read more...

Thursday, April 15, 2010

தமிழகத்தில் முதன் முறையாக..,

 
 தமிழ் நாடு சுகாதார அமைப்பின் சார்பில் ஏலகிரி யில்  ஏப்ரல் 9, 10 ல் நடைபெற்ற கருத்தரங்கில் பகிர்ந்து கொள்ளப் பட்ட சில நிகழ்வுகள். ஆராய்ச்சிக் கட்டுரைகள் மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சமீபக காலத்தில் நிகழ்த்தப் பட்ட சாதனைகள் மற்றும் முக்கிய நிகழ்வுகள் இங்கு விவாதிக்கப் பட்டன.

 அந்த நிகழ்வுகளின் சுருக்கங்கள் சில புத்தகத்தில் இடம் பெற்றுள்ளன.

இந்தக் கருத்தரங்கு மூலம் தமிழகத்தில் உள்ள அனைத்து ஆரம்பசுகாதார நிலையங்களுக்கும் அந்தசாதனைகள் விஸ்தரிப்பு செய்வது பற்றியும் ஆலோசிக்கப் பட்டது.  படத்தின் மீது அழுத்தி பெரிது படுத்திப் பாருங்கள்.

தமிழிஷில் வாக்களிக்க இங்கு அழுத்தவும்

இந்த மாநாடு மற்றும் கருத்தரங்கு பற்றிய இடுகைகள் தொடரும்.

Read more...

Monday, March 29, 2010

குழந்தையும் குலதெய்வமும்

ஒரு சுபயோக சுபதினத்தில் முருகனின் பொற்பாதத்தில் அமைந்துள்ள அ.ஆ.சு.நி.இல் பிறந்த ஒரு சுட்டிக்குழந்தையின் முதல் நாள் வாழ்க்கையிது. கலாச்சாரமும் தெய்வபக்தியும் நிறைந்த தந்தையும், பதிபக்தி நிறைந்த தாயும், மண்ணின் மணம் நிறைந்த தாத்தா, பாட்டியும் வாய்க்கப்பட்டவன் இவன்.

குழந்தைபிறந்த உடன் தாயின் அருகில் குழந்தையை கிடத்திவிட்டு செவிலியர் அடுத்த பிணியாளரை பார்க்கப் போன சைக்கிள் சந்தில் நடந்த கதை.
ஐந்து நிமிடம் கழித்து வந்த செவிலியர் தாயை பரிசோதித்தார். அடுத்து சேயை.............. ஐயோ, சேயைக்காணவில்லை.

செய்தி பரபரப்பானது. ஒரு கிராமத்தில், ஆஸ்பத்திரியில் அதுவும் அரசு ஆஸ்பத்திரியில் குழந்தை காணவில்லை என்றால் நினைத்துப்பாருங்கள். அபூர்வ சகோதரர்கள் மனோரமா ஆச்சியிலிருந்து சூரிய வம்சம் சரத்குமார் வரை அனைவரும் ஆஜர்.

பலபல வதந்திகள். ஆஸ்பத்திரி ஊழியர் விற்றுவிட்டார் என்று ஒரு கூட்டம். பில்லி சூனியக் காரர்கள் எடுத்துச் சென்றுவிட்டனர் என்று ஒரு கூட்டம்.ஆண்குழந்தை அல்லவா! பங்காளிகள் சண்டையாம்.

அ.ஆ.சு.நி.ஊழியர்கள் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு உட்கார்ந்து இருக்கின்றார்கள். போலிசுக்கு தகவல் சென்றது. விசாரணையும் தொடர்ந்தது.
நமது மனோரமா பாட்டி மீண்டும் டென்சன் ஏற்றினார். அய்யய்யோ, அய்யோ, இப்பத்தான் வந்துட்டுப்போனானே, அப்பக்காரன், அவன் திரும்பி வந்து கேட்டால் நான் என்ன பதில் சொல்வேன். அய்யய்யோ, அய்யோ.

இப்போது பரபரப்பு பரபரபரபரப்பானது. குழந்தையின் தாத்தா பேச ஆரம்பித்தார். மாப்பிள்ளை வந்திட்டாரா அவர கூப்பிடுங்கப்பா, எங்க போனார் இந்த நேரத்தில. மாப்பிள்ளை(குழந்தையின் தந்தை)யின் நண்பர்களுக்கு தகவல் போனது.

சல்லடை போட்டு தேட ஆரம்பித்து கூட்டி வந்தனர்.
அவர் வந்தார் அவருடைய குழந்தையோடு.. முழு போதையில் இருந்த அவர் கூறினார். வாரிசு வந்திரிச்சில்ல..... குலதெய்வம் கோவிலுக்குப் போய்ட்டு வந்தோம்..............................பச்சிளம் குழந்தையை தூக்கிக்கொண்டு

Read more...

Sunday, March 7, 2010

மார்பகப் புற்றுநோய் பற்றி விவரங்கள் -1


மார்பகம் என்றால் என்ன?

ஒவ்வொரு மார்பகமும் லோப்ஸ் (lobes) எனப்படும் 6 முதல் 9 அடுக்கடுக்கான மடிப்பு சதைகளானது. ஒவ்வொரு சதையும் லோப்யூல்ஸ் (lobules) எனப்படும் பல சிறு இதழ்களைக் கொண்டு பாலைச் சுரக்கும் சில டஜன் குமிழ்களாக முடியும். இத்தகைய மடிப்புத்தொங்கு சதைகள், சதைகள், சிறு இதழ்கள் முனைப் பகுதி குமிழ்கள் அனைத்தையும் மெல்லிய இழை நாளங்கள் ஒன்றிணைக்கின்றன. இந்த இழை நாளங்கள் மார்பகத்தின் நடுவிலுள்ள ஆரியோலா (areole) எனப்படும் கரும் வட்டத்தின் நடுவிலுள்ள முலைக்காம்பில் ஒன்றிணைகின்றன. சிறு இதழ்களுக்கும் நாளங்களுக்கும் இடையேயுள்ள இடைப்பகுதியைக் கொழுப்புப் பொருட்கள் நிறைக்கின்றன. மார்ப்கத்தில் சதைப்பற்று ஏதும் இருக்காது. ஆனால் மார்ப்கத்தின் அடிப்பகுதியில் சதைப்பற்று இருந்து விலா எலும்புகளை மறைக்கின்றன.


ஒவ்வொரு மார்பகமும் இரத்த நாளங்களையும் லிம்ப் (lymph) எனப்படும் வர்ணமற்ற நிணநீர் திரவத்தை எடுத்துச் செல்லும் நாளங்களையும் கொண்டுள்ளது. இந்த லிம்ப் நாளங்கள் அவரை விதை வடிவிலுள்ள லிம்ப் நோட்ஸ் (Nodes )எனப்படும் முடிச்சுகளில் செல்லுகின்றன. இத்தகைய லிம்ப் நோட்ஸ்கள் கூட்டங் கூட்டமாக அக்குகளின் மேழேயும் தோற்பட்டை எலும்புகளின் மேலும் மார்ப்கங்களிலும் உள்ளன. இத்தகைய லிம்ப் நோட்ஸ் உடலின் மற்ற பல பாகங்களிலும் உள்ளன.


மார்பக புற்று நோய் என்றால் என்ன?

மார்பக புற்று நோய் என்றால், மார்பகத்தில் உள்ள சில செல்கள் அளவுக்கதிகமாக வளர்வதாகும். புற்று நோய் செல்கள் மற்ற செல்களைக் காட்டிலும் பல வகைகளில் வேறுபட்டிருக்கும். அவை வேகமாகப் பிரிந்து வளர்ந்து சுற்றிலுமுள்ள திசுக்களை
ஆக்கிரமிக்கும்

மார்பக புற்று நோயின் அறிகுறிகள் என்ன?

துவக்க நிலை மார்பக புற்றுநோய் சாதாரணமாக வலியை உண்டாக்காது. மார்பக புற்றுநோய் வளரத் தொடங்கும் போது எந்தவித அடையாளமும் அறிகுறியும் இருக்காது. புற்றுநோய் வளர வளர கீழ்க்கண்ட அறிகுறிகள் ஏற்படும்.

1, வீக்கம் அல்லது மார்பகம் அல்லது அக்குள் பகுதி தடிக்கும்.



2. மார்பகத்தின் அளவும் வடிவும் மாறுபடும்



3. முலைக் காம்பிலிருந்த இரத்தமோ வேறு திரவமோ கசியும்.


4. மார்பகத்தின் தோல், கருப்பு வளையம், முலைக்காம்பு முதலியவற்றின் வண்ணம் மாறும். (குழிவிழுதல், மடிப்பு விழுதல், சொரசொரத்தல்)


5. சமீப காலமாக முலைக்காம்பு உள்ளிழுத்துக் கொள்ளும்.


மேற்கண்ட மாறுதல்களில் ஏதேனும் தென்பட்டால் உடஉனே உங்கள் மருத்துவரை அணுகுங்கள்.
எவ்வாறு மார்பகப் புற்றுநோய் கண்டறியப் படுகிறது?


மார்பகப் புற்றுநோயைக் கீழ்க்கண்ட முறைகளில் கண்டறியலாம்.



மருத்துவ வரலாறு:-
உங்களுக்கு மார்பக புற்றுநோய் உள்ளதா என்பதைக் கண்டறிய மருத்துவ வரலாறு உதவும். உங்கள் குடும்பத்தில் யாருக்காவது மார்பகப் புற்றுநோய் இருந்ததா? இருக்கிறதா என்று கேட்டறிவார். உங்களுடைய மாத விலக்கு விவரங்கள், உங்கள் மார்பகக் கட்டியின் புறத் தன்மைகள் குறித்து உங்களிடம் கேட்பார்.


மார்பகக் கட்டியைத் தொட்டுப் பார்த்தல்:-
உங்கள் மருத்துவர் உங்கள் மார்பகத்தைத் தொட்டுப் பரிசீலனை செய்து மார்பகக் கட்டியின் இருப்பிடம், அளவு, மார்பக லிம்ப் மற்றும் லிம்ப நோட்ஸ்களின் பொதுத்தன்மையைக் கண்டறிவார்.



மம்மோ கிராம் (mammo gram)
உங்கள் மருத்துவர் மம்மோகிராம் சோதனையைச் செய்து கொள்ளுமாறு உங்களிடம் கூறலாம். மார்பகக் கட்டிகளை, அதிலும் மிகச் சிறியவற்றைக் கண்டு பிடிக்க உதவும் ஒருவகை பயன்மிக்க மார்பகத்தை எக்ஸ்ரே பிடிக்கும் தொழில் நுட்பமாகும் இது. ஒரு தட்டு போன்ற கருவியால் உங்கள் மார்பகத்தைத் தட்டையாக அழுத்தி மார்பகத்தின் தெள்ளிய வடிவத்தை அறிய முயலப்படும். உங்கள் மார்பகக் கட்டியின் முக்கிய விவரங்களை மம்மோகிராம் உங்கள் மருத்துவருக்கு அளிக்கம். மம்மோ கிராமில் ஏதேனும் ஒரு பகுதியில் ஐயம் உண்டாக்கினாலும், தெளிவாக இல்லாவிட்டாலும் மற்றொரு எக்ஸ்-ரே எடுக்க வேண்டியிருக்கும்.


அதிரொலி (Ultra sound)
அதிர்ரொலி என்பது அதிக அதிர்வுடன் கூடிய ஒலியலைகளை மார்ப்கத்தின் மீது செலுத்தி மார்பகத்தின் கட்டி கெட்டியாக (திடமாக) உள்ளதா அல்லது திரவம் நிறைந்துள்ளதா என்று கண்டறியலாம். மம்மோ கிராபியுடனும் இந்தப் பரிசீலனையைச் செய்யலாம்.



நீடில் பயோப்சி (Needle Biopsy)
உங்கள் மருத்துவர் ஒரு மெல்லிய ஊசியால் உங்கள் மார்பகக் கட்டியிலிருந்து ஒரு சில செல்களை எடுத்து நுண்ணோக்கியில் பரிசீலித்து மார்பக புற்றுநோய் உள்ளதா இல்லையா என்று கண்டறிவார். சில சமயங்களில் ஒரு பெரிய ஊசியை கெட்டியான கட்டியின் மைய செல்களை எடுக்கப் பயன் படுத்துவார்.
மார்பகப் புற்றுநோய் பற்றி விவரங்கள்-2


நன்றி:- CHANGI GENERAL HOSPITAL




இது மீள் பதிவு, மிக ஆரம்ப கட்டத்தில் நான் இட்டது.

தமிழீஷில் இன்றுதான் சேர்த்துள்ளேன். எனவே தமிழீஷில் வாக்களிக்க இங்கு அழுத்துங்கள். 


தமிழ்மணத்தில் வாக்களிக்க இங்கு அழுத்துங்கள்.

Read more...

Tuesday, March 2, 2010

நீங்கள் கடைசியாக எப்பொழுது ஒரு ஆரம்ப சுகாதார நிலையம் சென்றீர்கள்

சென்று பல வருடங்கள் ஆகிவிட்டது என்றால் உங்களுக்கு ஆச்சரியம் காத்திருக்கிறது

சில ஆரம்ப சுகாதார நிலையங்களின் தளங்களை பார்க்கவும்

தோகமலை ஆரம்ப சுகாதார நிலையம்
**
பெருங்கட்டூர் ஆரம்ப சுகாதார நிலையம்
**
அ.ஆ.சுகாதார நிலையம் அமரபூண்டி

--

ஆரம்ப சுகாதார நிலையங்களில் சிசேரியன் கூட நடைபெறுகிறது



பத்திரிகை செய்தி 1 : மதுரை
**
பத்திரிகை செய்தி 1 : திருச்சி

Read more...

Wednesday, February 24, 2010

அடடே' அரசு மருத்துவமனை! - துடியலூர் ஆரம்ப சுகாதார நிலையம்

அடடே' அரசு மருத்துவமனை!

அசுத்தம் இல்லை... அமுக்கல் இல்லை...

'இது உங்கள் மருத்துவமனை. சுத்தமாக வைத்திருக்க உதவுங்கள்...' - அரசு மருத்துவமனை சுவர்களில் வழக்கமாகத் தென்படும் வாசகம் இது! இதை நிஜமாகவே படுசீரியஸாகப் பின்பற்றும் ஓர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் கோவை மாவட்டம் துடியலூரில் இருப்பது சந்தோஷமான விஷயம்! தனியார் மருத்துவமனைகளுக்கு சவால் விடும் வகையில் அனைத்து உள்கட்டமைப்பு வசதிகளையும் கொண்டிருக்கும் இந்த ஆரம்ப சுகாதர நிலையம்தான், தமிழகத்திலேயே 'தி பெஸ்ட்' என அடித்துச் சொல்லுகிறார்கள் சுகாதாரத் துறையினர். சமீபத்தில், இந்த மருத்துவமனைக்கு விசிட் அடித்துச் சென்ற சுகாதாரத் துறைச் செயலாளரான சுப்புராஜ், சுத்தம் மற்றும் பணியாளர்களின் சுறுசுறுப்பைப் பாராட்டி கடிதம் அனுப்பி இருக்கிறார்.

மருத்துவமனையில் பிரசவத்துக்காக அட்மிட் ஆகியுள்ள அம்பிகா என்ற


பெண்மணியிடம் நாம் பேச்சுக் கொடுத்தபோது, ''எங்களுக்கு வசதி, வாய்ப்பு எதுவும் இல்லீங்க. தனியார் ஆஸ்பத்திரியில் பிரசவம் பார்க்க முடியாது. இங்க நல்லா பிரசவம் பார்க்குறதா பக்கத்து வீட்டுக்காரங்க சொல்லி தெரிஞ்சுக்கிட்டேன். உண்மையிலே என்னை தங்கமா பார்த்துக்குறாங்க சார். எதுக்குமே பணம் கேட்காத இந்த இடத்துக்கு கடவுளா பார்த்துதான் என்னைய அனுப்பியிருக்கான்!'' என்றார் நெகிழ்ச்சியோடு.

அத்தனை பெருமைகளுக்கும் சொந்தக்காரர் என்று சுட்டிக்கட்டப்படும் பெரியநாயக்கன்பாளையம் வட்டார மருத்துவ அலுவலரான (பொறுப்பு) உமா மகேஸ்வரியை சந்தித்தோம்.

''இன்னிக்கு இருக்குற தலைமுறையில் சுத்தம், சுகாதாரத்துக்கு ரொம்பவே முக்கியத்துவம் கொடுக் குறாங்க. அதுக்கு ஏத்த மாதிரி நாமளும் மாறித்தானே ஆகணும்! துடியலூர் சுகாதார நிலையத்துல முந்தி குப்பையாத்தான் இருந்துச்சு. அந்த ஏரியாவையே மாத்திக்காட்டணும்னு முடிவு பண்ணேன். போன வருஷம் அந்த சுகாதார நிலையத்துக்கு ஒதுக்கி இருந்த 1.75 லட்சம் ரூபாயை வெச்சுக்கிட்டு,உள்கட்டமைப்புகளை முழுசா மாத்தி அமைக்குற வேலையை ஆரம்பிச்சோம். இதைப் பாத்துட்டு, 'சூப்பர்'னு பாராட்டுன பொது சுகாதாரத் துறை உயரதிகாரிங்க, தேவையான அளவுக்கு பணம் ஒதுக்கீடு பண்ணினாங்க.

டாக்டர்கிட்ட, நோயாளிங்க மனம்விட்டு ரிலாக்ஸா பேசுறதுக்காக, தனியார் மருத்துவமனையில கேபின் அமைச்சிருப்பாங்க. அதுமாதிரி, எங்க டாக்டர்களுக்கும் தனித்தனி கேபின் அமைச்சுக் கொடுத்தோம். மருந்து, மாத்திரைகளை தனித்தனியா பிரிச்சு வைக்குறதுக்காக பார்மஸியையும் மேம்படுத்தினோம்.

இங்கே ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்த பெண்கள்தான் பிரசவத்துக்கு அதிகளவுல வர்றாங்க. அவங்க கொண்டு வர்ற மாற்றுத் துணிகளைப் பத்திரப்படுத்தி வைக்கிறதுக்கு இடமே இல்ல. அதுக்காக தனித்தனி லாக்கர் வசதி செஞ்சு கொடுத்தோம். ஏழைப் பெண்களால கைக்குழந்தைக்கு போட்டுவிடுறதுக்கு டிரஸ் வாங்ககூட முடியாத நிலைமை இருக்கு. ரொம்பப் பேரோட வீடுகளோட நிலைமையும் மோசமா இருக்கு. அதனால, எங்க ஆரம்ப சுகாதார நிலையத்துல ஆண் குழந்தை பொறந்தா நீல நிறத்துல இருக்குற மெத்தையும் , பெண் குழந்தைன்னா பிங்க் கலர் மெத்தையும் இலவசமா கொடுக்குறோம். அந்த மெத்தைக்குள்ளே ஒரு செட் துணியும் இருக்கும். அந்த பச்சிளம் குழந்தைகளுக்காக கரூர்ல இருந்து ஆர்டர் பண்ணி மெத்தையை வாங்கிக் கொடுக்குறோம்.

பெண்கள் கருவுற்ற 25 வாரம் முதல் 30 வாரத்துக்குள்ள ஸ்கேன் செஞ்சு பாத்துடுறது நல்லது. அப்போத்தான் குழந்தை என்ன நிலையில வயித்துக்குள்ள இருக்குன்னு தெரிஞ்சுக்க முடியும். எங்ககிட்ட இருக்குறது 'ரெசல்யூஷன்' குறைவான ஸ்கேன் இயந்திரம். இதுல அத்தனை துல்லியமான ரிப்போர்ட் கிடைக்காது. அதுக்காக கோவை ஆர்.எஸ்.புரத்துல இருக்குற ஒரு தனியார் ஸ்கேன் சென்டர்ல உதவி கேட்டோம். அவங்களும் தயங்காம இலவசமா ஸ்கேன் எடுத்துக் கொடுக்குறாங்க. இதுவரைக்கும் ஆயிரத்து 300 ஸ்கேன் எடுத்துக்கொடுத்திருக்காங்கன்னா பாருங்களேன். அதோட மதிப்பு மட்டும் 14 லட்சம் ரூபாய். இந்த மாதிரி நல்லவங்க உதவியும் சேர்ந்திருப்பதால்தான், தரமான சிகிச்சையை ஏழைகளுக்கும் கொடுக்க முடியுது.

வாரந்தோறும் புதன்கிழமை குழந்தைகளுக்கு தடுப்பூசி போட்டுக்கிட்டு இருக்கோம். குழந்தைகளைக் கொண்டு வர்ற பெற்றோருக்கு, தடுப்பூசி போடுற மையத்துல உட்கார்றதுக்குக்கூட இடவசதி இல்லாம இருந்துச்சு. அந்த இடத்துல இப்போ 30 பேரு உட்கார்ற அளவுக்கு இட வசதியை உருவாக்கிட்டோம். ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு தினமும் புறநோயாளிகள் 400 பேருக்கு மேல வர்றாங்க. அவங்க யாருமே வரிசையா வராததால, ஒரே தள்ளுமுள்ளு நிலைமை இருந்துச்சு. அந்தப் பிரச்னையை சரிசெய்யுறதுக்காக டோக்கன் சிஸ்டத்தை கொண்டு வந்திருக்கோம். புற நோயாளிகள் வந்தா, அவங்க கையில டோக்கனை கொடுத்துடுவோம். டோக்கன் நம்பரைக் கூப்பிட்டா மட்டும் டாக்டரைப் பார்க்குறதுக்கு அவங்க உள்ளே போவாங்க. இந்த முறையால தள்ளுமுள்ளு பிரச்னைக்கு நிரந்தர தீர்வு கிடைச்சது.

தனியார் மருத்துவமனையில வேலைபார்க்குற நர்ஸ்களுக்கு தனி யூனிஃபார்ம் கொடுத்திருப்பாங்க. அதுமாதிரி, எங்களோட நர்ஸ்களுக்கு தனி யூனிஃபார்ம் கொடுத்திருக்கோம். தனியார் மருத்துவமனைக்கு நிகரா உள்கட்டமைப்பு வசதியை செய்யுறதுக்கு 4.50 லட்சம் ரூபாய்தான் செலவானது. சிசேரியன் மூலமா பிரசவம் பார்க்குறதுக்கு தேவையான ஆபரேஷன் தியேட்டர் மட்டும் இங்க இல்ல. இப்போ, அதுக்கும் நிதி ஒதுக்கீடு செஞ்சிருக்காங்க. கிராமங்கள்ல இருக்குற பெண்களுக்கு நல்ல மருத்துவ வசதியைக் கொடுக்கணும்ங்கிறதுதான் எங்களோட நோக்கம். நல்ல உள்ளங்களோட கரங்கள் எங்களோட இணைஞ்சா, கிராமப்புறங்கள்ல இன்னும் ஏராளமா மருத்துவ வசதியை எங்களால செஞ்சு கொடுக்க முடியும்!'' என்றார் நம்பிக்கையுடன்.

நல்ல உதாரணங்கள் எளிதில் பின்பற்றக் கூடியவை. ஆனால், அவற்றைச் செயல்படுத்த நல்ல மனிதர்களும் வேண்டுமே

--
நன்றி : ஜூனியர் விகடன்

Read more...
அரசு மருத்துவர்கள் மற்றும் சுகாதார துறையின் பிற அலுவலர்களுக்கு உதவக்கூடிய தளங்களின் செய்தியோடைகள் இங்கு கீழே தரப்பட்டுள்ளன

Target Your PG Seat

Target PG Google Group

டாக்டர்கள் தகவல் இணையம்...

Medical, Legal, Medicolegal Information for Doctors and Lawyers

MCQsOnline - Online Collection of MCQs of Medical PG Entrance Exams

After MBBS

TNGDA Library

Tamil Nadu Government Doctors Association (TNGDA) Helpline

Doctors' Association for Social Equality

GRDA

  © Blogger template Blogger Theme II by Ourblogtemplates.com 2008

Back to TOP