Thursday, June 17, 2010

பாம்புக்கடி மருத்துவர் பாகம் ஒன்று

போலி மருத்துவர் என்பவர் சமுதாயத்தில் ஒரு அங்கமாகவே மாறியிருக்கிறார். இங்கு நான் போலி மருத்துவர் என்று கூறுவது என்ற அடிப்படையுமே இல்லாமல் மருத்துவம் செய்பவர்களைப் பற்றியது. மாற்றுமுறை மருத்துவம் செய்பவர்களைப் பற்றியது அல்ல. தேவையில்லாமல் மாற்று முறை மருத்துவ அறிஞர்களுடன் போட்டுக் குழப்பிக் கொள்ள வேண்டாம்.

முதல் கட்டமாக பாம்புக் கடி.

நாட்டில் உள்ள பாம்புகளில் 80 சதவீதம் பாம்புகள் விஷத்தன்மை அற்ற பாம்புக்களே.., அதில் விஷத் தன்மையுள்ள பாம்புகளிலும்கூட விஷத்துடன் கூடிய கடி என்பது அதிலும் பாதியே.. அப்படியென்றால் விஷ பாதிப்பு ஏற்படுத்தக்கூடிய அளவு என்பது மிகக் குறைந்த அளவே..,

பாம்பு கடித்தால்

பாம்புக் கடித்தால் நமது ரத்த மணடலமும் நரம்பு மண்டலும் பாதிப்புக்கு உள்ளாகி மரணம் சம்பவிக்கிறது.ரத்த மண்டலத்தில் ரத்தம் உறையாத் தன்மை ஏற்படுவதன் மூலம் தொடர் உதிரப் போக்கும், திசுக்களிடையே கசிவு ஏற்படுவதன் மூலம் வீக்கம், வீக்கம் அழுத்துவதன் காரணமாக ஏற்படக்கூடிய விளைவுகள் ( மூளையில் ஏற்பட்ட ரத்தக்கசிவு வாதத் தன்மையாகக் கூட வெளிப்பட வாய்ப்பு உண்டு. அந்தச் சூழலில் பாம்பு கடித்தது என்ற தகவல் மருத்தவரை அடைந்திருக்க வேண்டும். அல்லது அந்த மருத்துவர் இதுபோன்ற நோயாளியை தன்வாழ்நாளில் பார்த்திருக்க வேண்டும். அப்போதும் கூட 20நிமி. ரத்த உறைவுச் சோதனை செய்யப் பணித்து விஷமுறிவு மருந்து போடும்போது உறவினர்களால் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப் பட்ட சம்பவங்கள் உண்டு.) அதிகமான ரத்த இழப்பு காரணமாக மரணம் ஏற்படவும் வாய்ப்புண்டு

நரம்பு மண்டலம் பாதிப்பின் ஆரம்ப அறிகுறிகளாக நாக்கில் உள்ள சுவை அரும்புகள் பாதிக்கப் படுதல், மற்றும் மேல் இமை பாதிக்கப் படுதல் போன்றவை நிகழும் தொடர்ச்சியாக மற்ற நரம்புகள் பாதிப்பு ஏற்படுகிறது. சுவாச செயலிழப்பு, மூளை இயக்கமின்மை போன்றவற்றால் மரணம் நிகழ வாய்ப்புண்டு.


இவ்வாறான சூழலில் ஒரு பாதிக்கப் பட்டவர் மருத்துவரை அணுகினால் என்ன நடக்கும் என்று பார்ப்போம்.

பொதுவாக மேற்கண்ட ரத்த மண்டலம் அல்லது நரம்ப்பு மண்டலம் அல்லது இரண்டுமண்டலங்களுமே பாதிப்பு ஏற்படும் முன் விஷமுறிவு மருந்து செலுத்துதலே பாதுகாப்புத் தன்மையை அதிகரிக்கும்

கிராமப் பகுதிகளில்தான் பெரும்பாலான பாம்புக்கடிகள் நடக்கின்றன. கிராமங்களில் பெரும்பாலும் ஒவ்வொரு ஒன்றியத்திற்கும் நான்கு அல்லது ஐந்து ஆரம்ப சுகாதார நிலையங்கள் இருக்கின்றன. அந்த நிலையங்களுக்கு ஏதாவது ஒரு வாகனம் பிடித்துத்தான் செல்ல வேண்டும். தற்போது 108 ஆம்புலன்ஸ் இருப்பதால் இது போன்ற சூழல்கள் ஓரளவு சமாளிக்கப் படுகின்றன. சில ஆண்டுகளுக்கு முன்பு வரை போக்குவரத்து என்பதே குதிரைக் கொம்பாக இருந்தது.

பாம்பு கடிபட்டவருக்கு ரத்தத்தில் விஷத்தன்மை பரவியுள்ளதை கண்காணிக்க 20நிமி. ரத்த உரைதல் பரிசொதனை செய்யவேண்டும். அது உரையும் தன்மை சாராசரியாக இருந்தால் கூட மீண்டும் ஒருமுறை ஆறுமணிநேரம் கழித்துச் செய்யவேண்டும். கடைசிக் கட்டத்தில் கடிபட்டவருக்கு செயற்கை சுவாசம் வைக்கும் வரை கூடப் போலாம் என்ற சூழல் இருப்பதால் முதலுதவி மருத்தினைக் கொடுத்து அருகிலுள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பும் நிலைதான் இருக்கிறது. அங்கு தேவையான பரிசோதனைகளைச் செய்து தகுந்த சிகிச்சையும் செய்கிறார்கள்.


இவ்வாறு அனுப்புவது என்பது பாதிக்கப் பட்ட ஒரு நபர்கூட பிரச்சனைகளில் சிக்கிக் கொள்ளக்கூடாது, அனைவரையுமே காப்பாற்ற வேண்டும் என்ற நல்ல எண்ணத்தில்தான்.


போலி மருத்துவரிடம் சென்றால்

போலி பாம்புக்கடி மருத்துவர்கள் ஒரு செடியை வைத்திருக்கிறார்கள். அந்த செடி மிகக் கசப்புத்தன்மை வாய்ந்ததாக இருக்கிறது. அதை சராசரி மனிதர்களால் சாப்பிட முடியாத அளவு கடும் கசப்புசுவையுடன் இருக்கும். அதை கடி பட்டவரிடம் கொடுத்து சாப்பிடச் சொல்லும்போது அவர் சுலபமாக மெல்ல முடிந்தால் அந்த நபரின் உடலில் விஷம் வேலைசெய்ய ஆரம்பித்துவிட்டதென்று அறிந்துகொள்ளமுடியும். (சுவை அரும்புகள் பாதிப்படைந்துவிட்டன அல்லவா)

அடுத்ததாக தூங்கக் கூடாது என்று கூறுவார்கள். மேல் இமை செயல் இழந்துவிட்டால் தானாகவே இமைகள் மூடிக்கொள்ளூம். பாதிக்கப் பட்டவரை தூங்கக்கூடாது என்று பணிக்கும்போது விஷத்தால் பாதிப்பு ஏற்பட்டவர் தன்னையும்மீறி கண்களை மூடிவிடுவார். கடி பட்டவர் கண்களை மூடிவிட்டால் இனி தனது மருத்துவம் ( போலி தான்) பயனளிக்காது என்று கூறி அவரை அனுப்பிவிடுவார். ரத்த இழப்பு அதிகமாக இருந்தாலும் கண்கள் மயக்கத்தில் சுழற்றிக் கொண்டுவரும்.


அதாவது இந்த போலி ஆட்கள் என்ன செய்கிறார்கள் என்றால் விஷத்தால் பாதிக்கப் பட்டவர்கள் என்று தெரிந்து கொண்டுவிட்டால் அவரை நகரத்திற்கு அனுப்பிவிடுகிறார்கள். பொதுவாக இவ்வாறு விஷத்தால் பாதிப்பு ஏற்பட்டபின் நோயாளியை காப்பாற்றுவது என்பது மிக மிக மிக கடினம். விஷத்தால் பாதிக்கப் படாதவரை காப்பாற்றியதாக பெருமையடித்துக் கொண்டிருப்பார். அதை அந்த ஊர் மக்களும் பெருமையாக பேசிக் கொண்டிருப்பார்.


அதாவது விஷத்தால் துளி கூட பாதிக்கப் படாத நபரை அவர் காப்பாற்றியதாக பெயர் வாங்கிக் கொள்கிறார். விஷத்தால் பாதிக்கப் பட்டவரை காப்பாற்ற எந்த நடவடிக்கையும் எடுக்காமல் மரணமடையவிட்டுவிடுகிறார்.

இந்த போலிநபர் கைவிட்டுவிட்டால் அந்த அந்த நபரை எவராலும் காப்பாற்ற முடியாது என்ற வகையில் ஒரு விளம்பரவாக்கியத்தை உருவாக்கி வைத்திருப்பார்கள்.


ஆனால் உண்மையில் அவர் அந்த கடிபட்டவரை முதலிலேயே விஷமுறிவு மையத்திற்கு அனுப்பி இருந்தால் காப்பாற்றி யிருக்க முடியும்.

உண்மையான மருத்த்வரிடம் சென்றால் அவர் முதலுதவிகொடுத்தபின் அவரை அருகிலுள்ள விஷ்முறிவு மைய்த்திற்கு அனுப்பிவிடுவார் எந்த நேரமாக இருந்தாலும். அவருக்கு கிடைக்கும்பெயர் இதெல்லாம் பார்க்கத் தெரியாது அவரிடம் ஏன் போக வேண்டும்?

நமக்கு இன்னொரு கேள்வியும் எழலாம். ஏன் இதுபோன்ற வசதிகளை ஒவ்வொரு கிராமத்திலும் ஏற்படுத்தக்கூடாது என்று சிலர் கேட்கலாம். அடிப்படை முதலுதவிகள் அனைத்து ஆரம்ப சுகாதார நிலையத்திலும் செய்துவிட்டு மேற்கொண்டு எந்த பாதிப்பும் ஏற்படாமல் இருக்க அருகிலுள்ள விஷமுறிவு மையத்திற்கு மிக வேகமாக அனுப்பிவிடுகிறார்கள்.

இதன்காரணம் எந்த கடிபட்டவருமே ஆபத்தில் சிக்கிக் கொள்ளக்கூடாது என்ற எண்ணமே.

ஆனால் மக்களுக்கு அதிகமான திருப்தியைக் கொடுக்கவல்லவராக போலி வைத்தியரே இருக்கிறார்.

எனது தனித் தனிப்பட்ட கருத்து:

உண்மையிலேயே ஒரு மூலிகை எந்தவித கொடிய விஷத்தையும் முறிக்க வல்லதாக இருந்தால் அதை அரசிடம்தெரிவித்து அந்த மூலிகைகளை மிக அதிகமான அளவு தயாரித்து நாட்டில் பாம்பு கடி பட்ட யாருமே உயிரிழக்காச்சூழலை ஏற்படுத்தலாமே

தனித் தனிப்பட்ட கருத்து 2:-

சிலரிடம் அவ்வாறு மூலிகைகள் இருப்பதாகக்கூடத் தோன்றுகிறது. அதை அவர்கள் தங்கள் பரம்பரை ரகசியமாக வைத்துக் கொண்டு தங்கள் பரம்பரை மட்டும் சம்பாதிக்க உபயோகப் படுத்திக் கொண்டு இருக்கிறார்களோ என்ற சந்தேகமும் சில நேரங்களில் எழுகிறது.

அடுத்தடுத்த பகுதிகளில் நாய்க்கடி, நெஞ்சுவலி போலி மருத்துவர்கள் பற்றிப் பார்க்கலாம்.

தமிழீஷில் வாக்களிக்க இங்கு அழுத்தவும்

8 comments:

தமிழ் ஓவியா September 15, 2009 at 10:52 PM  

நல்லதொரு வழிகாட்டும் செய்திகள் அடங்கிய சிறப்பான பதிவு.
நன்றி

DHANA September 16, 2009 at 1:39 AM  

நல்ல பதிவு

Onion Insights September 25, 2009 at 11:06 PM  

Hello Sir


We at Onion Insights (onioninsights.blogspot.com) are always happy to come across bloggers like you. We are also glad to inform you that your writing skills can now be put to good use.

Get paid to shop, dine and report and make some extra money using your writing and observation skills. The concept is pretty simple. Top retail chains, five star properties, Health services and fast food chains in India hire our services to get their stores evaluated through the eyes of a normal customer. We are looking for people in Coimbatore who frequently visit these outlets and write well.

Every week there are a certain number of reviews in your city. Based on your availability and interest, you can choose to perform a review for us. You visit the outlet and notice what’s going on. You then go to our website and fill in a report which has a questionnaire and comment boxes to help you document your observations.

Within 15-20 days you will be paid a pre determined shopper fee which will include an reimbursement for any amount spent in the store plus an additional shopper fee. That’s how the system works.

Follow the below mentioned steps to sign up as an OI reviewer

Go to this link http://www.sassieshop.com/2dcs
Click on new shopper sign up
Click "India" under new shopper and click on "go"
Enter your basic information in the form and click on "sign me up"

Please call us at +919769781001 or shoot us an email at support@onioninsights.com if you have any other queries or any difficulty while signing up.


For more details log on to www.onioninsights.blogspot.com

Warm Regards,

OI Team

King Viswa June 19, 2010 at 9:31 AM  

மிகவும் அருமையான, அதே சமயம் கருத்துடன் கூடிய தெளிவான பதிவு.

நன்றி.

priyamudanprabu July 31, 2010 at 9:59 AM  

நல்ல பதிவு

Pradeep April 3, 2012 at 8:34 AM  

அருமையான பதிவு. எங்கள் ஊரில் இது போன்ற போலிகள் அதிகம். இது போக, வர்மம், வயிற்றில் இருந்து முடி எடுப்பது போன்றவையும் பிரபலம். சர்க்கரை நோய்க்கும், இன்சுலின் செடி வெய்த்திருக்கிறார்கள். மக்களிடம் இது குறித்து போதித்தாலும், நம்மை ஏளனமாக பார்க்கிறார்கள்.

Anonymous,  January 30, 2013 at 5:01 PM  

What's up to every one, the contents present at this web site are truly remarkable for people knowledge, well, keep up the good work fellows. dating tips
Also see my webpage - christian dating sites

அரசு மருத்துவர்கள் மற்றும் சுகாதார துறையின் பிற அலுவலர்களுக்கு உதவக்கூடிய தளங்களின் செய்தியோடைகள் இங்கு கீழே தரப்பட்டுள்ளன

Target Your PG Seat

Target PG Google Group

டாக்டர்கள் தகவல் இணையம்...

Medical, Legal, Medicolegal Information for Doctors and Lawyers

MCQsOnline - Online Collection of MCQs of Medical PG Entrance Exams

After MBBS

TNGDA Library

Tamil Nadu Government Doctors Association (TNGDA) Helpline

Doctors' Association for Social Equality

GRDA

  © Blogger template Blogger Theme II by Ourblogtemplates.com 2008

Back to TOP