Wednesday, June 30, 2010

உயிரோடு விளையாடி....., ஒரு கிராமப் புற மருத்துவம்

B R M S

Bachelor of Rural Medicine and Surgery

மத்திய அரசால் புதிதாக அறிமுகப் படுத்தப் பட இருக்கிற மருத்துவப் படிப்பு. இந்தப் படிப்பு 3 1/2 ஆண்டுகள் இருக்கும் என்றும் இதை முடிப்பவர்கள் கிராமங்களில் ஊசி போட்டு மருத்துவம் பார்க்கலாம் என்று செய்திகள் சொல்லுகின்றன. ஆனால் அறுவை சிகிச்சை செய்யக்கூடாது என்றும் சொல்லுகிறார்கள்.  இவர்கள் கிராமங்களில் மட்டுமே மருத்துவம் செய்ய அனுமதி என்று சொல்லுகிறார்கள்.

கிராமங்களில் பணிபுரியும் மருத்துவர்கள் பற்றாக்குறையை நீக்க இந்த ஏற்பாடு என்று சொல்லுகிறார்கள்.
===================================================================

இந்திய அளவில் நிலமை எப்படி இருந்தாலும், தமிழகத்தைப் பொறுத்தவரையில் பெரும்பாலான கிராமப் புற மருத்துவமனைகளில் (அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் ) மருத்துவர்கள் பணியில் இருக்கிறார்கள்.  வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து பணிக்காக நிறையப் பேர் காத்துக் கொண்டு இருக்கிறார்கள். அரசும் தேவைக்கேற்ப கடந்த சில ஆண்டுகளில் மூன்று, ஆறு மாத இடைவெளிகளில் காலி இடங்களை நிரப்பிக் கொண்டும் புதிய பணியிடங்களை உருவாக்கிக் கொண்டும் இருக்கிறார்கள்.

=====================================================================

இப்போது பி. ஆர். எம். எஸ் படிப்பு பற்றி எனக்கு சில சந்தேகங்கள். யாராவது இது பற்றிய சுட்டிகள் கிடைத்தால்  பின்னூட்டத்தில் கொடுங்கள். தெளிவு பெற உதவியாக இருக்கும்.

1. எம்.பி.பி.எஸ் க்கு சமமான கல்வியாக் பி.ஆர். எம் .எஸ் இருக்க முடியுமா?
கண்டிப்பாக முடியாது எனபதால்தான் இது வேறொரு படிப்பாக அமைகிறது.
அப்படியென்றால் கிராமப் புறத்தான் உயிர் நகரவாசிகளின் உயிரை விட மட்டமானதா? ( இந்தக் கேள்வியைப் பலரும் கேட்டாலும் எனது முதல் கேள்வியும் அதுதான்)

2. பல நகரங்களை ஒட்டி கிராமப் பஞ்சாயத்துக்கள் இருக்கின்றன. அந்த கிராமப் பஞ்சாயத்துக்களை பொதுவாக நகரம் என்றே பொதுமக்கள் சொல்லுவார்கள். ஆனால் நிர்வாகம் கிராமப் பஞ்சாயத்து, நகரப் பஞ்சாயத்துகளில் வரும். அதாவது ஆங்கிலத்தில் ரூரல் ஏரியா.  அவைகளில் இவர்கள் தொழில் செய்ய குவிய மாட்டார்கள் என்பது என்ன நிச்சயம்?


ஒருவேளை இப்படி ஒரு படிப்பு வந்தால் இந்த விஷயத்தில் இரண்டு வகையினருக்கும் பெரிய வித்தியாசம் இருக்காது  

3.இவர்கள் அறுவை சிகிச்சை செய்யக் கூடாது என்று சொல்லுகிறார்கள். ஆனால் 3 1/2 ஆண்டுகள் படிக்கும் நர்சுகள் மருத்துவருக்கு அறுவை சிகிச்சையின் போது உதவி செய்கிறார்கள். மருத்துவரின் கட்டளைக்கேற்ப அறுவை அரங்கில் செவிலியர்கள் செயல்பட்டால் மிக விரைவில் வெற்றிகரமாக அறுவை சிசிக்கை முடிவடையும். அதுபோன்ற திறமைவாய்ந்த  செவிலியருக்கு அறுவை சிகிச்சை நேரத்தையே மாற்றி அமைக்கக் கூடிய நிகழ்ச்சிகளும் இருக்கின்றன.

இந்த பி. ஆர். எம். எஸ் மருத்துவர் அவரை விட மேம் பட்டவரா?  இவர் அறுவை சிகிச்சைப் பக்கமே போகக் கூடாது என்பதால் செவிலியரே மேம்பட்டவர் என்பதாகத்தான் தோன்றுகிறது.

இப்படி ஒரு அரைகுறை படிப்பு ஆரம்பிப்பதற்கு பேசாமல் செவிலியருக்கே தனியாக தொழில் பார்க்கும் உரிமை வழங்கிவிடலாமே.

4. பி. ஆர். எம். எஸ் படிக்கும் மருத்துவர்  மேல் படிப்பு படிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டால்  அவருக்கு திறமையும் இருந்தால் அவருக்கு என்ன வழி காட்டப் போகிறார்கள்?

எம்.பி.பி.எஸ் ஸின் மேல்படிப்புகளுக்கு அனுப்பலாம் என்றால் மாணவர்கள் பி. ஆர். எம். எஸ்ஸை ஒரு குறுக்கு வழியாக கருத மாட்டார்களா?

அல்லது  அவர்களுக்கே தனி மேல் படிப்புகள் உருவாக்கப் பட்டால் அப்போது பாடத்திட்டங்கள் மற்றும் செலவுகள் எம்.பி.பி.எஸ் போன்றே ஆகிவிடாதா?

5. 12ஆம் வகுப்பு முடித்த தகுதி வாய்ந்த மாணவர்களுக்கு பி. ஆர், எம்.எஸ் படிப்பில் சேர்க்கப் படுவார்கள் என்றால்

எம்.பி.பி.எஸ் படிக்க வேறு ஏதாவது தகுதி கொண்டு வரப் போகிறார்களா?

ஏற்கனவே ஆறு ஆண்டுகள். இன்னும் வேறு எம்.பி.பி.எஸ். முடிக்க காலம் கூட்டப் போகிறார்களா?

5 1/2 ஆண்டுகள் என்று சொன்னாலும். ஜூலை, ஆகஸ்டில் ஆரம்பிக்கும் கல்வியாண்டு 4 1/2 ஆண்டுகள் ஜனவரியில் முடிந்து பிப்ரவரியில் தேர்வு எழுத தேர்வு முடிவுகள் வந்த பின் தேர்ச்சி பெற்றவர்கள் பயிற்சிகள் காலத்திற்குள் நுழைவார்கள் எனவே  முடிக்க ஆறு ஆண்டுகள் ஆகிவிடும்.


எம்.பி.பி.எஸ் படிப்பின் காலத்தைக் குறைக்க ஒரு எளிமையான வழி இருக்கிறது. எம்.பி.பி.எஸ் மாணவர்களின் படிப்பின்போது ஞாயிறு, மற்றும் தீபாவளி, கிறிஸ்துமஸ் போன்ற பண்டிகை விடுப்புகள் உள்ளன. அந்த நாட்களில் வகுப்புகள் வைத்தால்  ஆண்டுக்கு இரண்டு மாதங்கள் மிஞ்சும். 4 1/2 ஆண்டுகளில் ஓராண்டை அழகாக மிச்சப் படுத்தி விடலாம்.

இந்த யோசனையைக் கண்டு சிரிக்க வேண்டாம். ஏற்கனவே முதுகலை பயிலும் மாணவர்கள் ஞாயிறு,  ரம்ஜான், பொங்கல் விடுப்பு இல்லாமல்தான் படித்துக் கொண்டு இருக்கிறார்கள்.

6.கலைஞர் காப்பீட்டுத்திட்டம் மூலமாக தமிழ் நாட்டில் கடைக்கோடி கிராமத்திற்கு பெரிய பெரிய மருத்துவமனைகள் வந்து நோயாளிகளை அழைத்துச் செல்லும் நிலை தமிழ்நாட்டில் உள்ளது. இதற்கு அடுத்த கட்டமாக அந்த சிகிச்சையையும் அதே கிராமத்தில் செய்யும் நிலை கொண்டு வர வேண்டாமா?  அதற்குப் பதிலாக ஏற்கனவே இருப்பவரை விட வல்லமை குறைந்தவரையா அனுப்ப வேண்டும்?

==============================================================

இந்த இடுகை நிறையப் பேரைச் சென்றடைய வேண்டும் என்று நினைக்கிறேன். எனவே நீங்கள் உங்களால் முடிந்த வழிகளில் மற்றவர்களுக்கு இதை பரப்புங்கள்.

தமிழீஷில் வாக்களிக்க இங்கு அழுத்துங்கள்

Read more...

Thursday, June 17, 2010

பாம்புக்கடி மருத்துவர் பாகம் ஒன்று

போலி மருத்துவர் என்பவர் சமுதாயத்தில் ஒரு அங்கமாகவே மாறியிருக்கிறார். இங்கு நான் போலி மருத்துவர் என்று கூறுவது என்ற அடிப்படையுமே இல்லாமல் மருத்துவம் செய்பவர்களைப் பற்றியது. மாற்றுமுறை மருத்துவம் செய்பவர்களைப் பற்றியது அல்ல. தேவையில்லாமல் மாற்று முறை மருத்துவ அறிஞர்களுடன் போட்டுக் குழப்பிக் கொள்ள வேண்டாம்.

முதல் கட்டமாக பாம்புக் கடி.

நாட்டில் உள்ள பாம்புகளில் 80 சதவீதம் பாம்புகள் விஷத்தன்மை அற்ற பாம்புக்களே.., அதில் விஷத் தன்மையுள்ள பாம்புகளிலும்கூட விஷத்துடன் கூடிய கடி என்பது அதிலும் பாதியே.. அப்படியென்றால் விஷ பாதிப்பு ஏற்படுத்தக்கூடிய அளவு என்பது மிகக் குறைந்த அளவே..,

பாம்பு கடித்தால்

பாம்புக் கடித்தால் நமது ரத்த மணடலமும் நரம்பு மண்டலும் பாதிப்புக்கு உள்ளாகி மரணம் சம்பவிக்கிறது.ரத்த மண்டலத்தில் ரத்தம் உறையாத் தன்மை ஏற்படுவதன் மூலம் தொடர் உதிரப் போக்கும், திசுக்களிடையே கசிவு ஏற்படுவதன் மூலம் வீக்கம், வீக்கம் அழுத்துவதன் காரணமாக ஏற்படக்கூடிய விளைவுகள் ( மூளையில் ஏற்பட்ட ரத்தக்கசிவு வாதத் தன்மையாகக் கூட வெளிப்பட வாய்ப்பு உண்டு. அந்தச் சூழலில் பாம்பு கடித்தது என்ற தகவல் மருத்தவரை அடைந்திருக்க வேண்டும். அல்லது அந்த மருத்துவர் இதுபோன்ற நோயாளியை தன்வாழ்நாளில் பார்த்திருக்க வேண்டும். அப்போதும் கூட 20நிமி. ரத்த உறைவுச் சோதனை செய்யப் பணித்து விஷமுறிவு மருந்து போடும்போது உறவினர்களால் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப் பட்ட சம்பவங்கள் உண்டு.) அதிகமான ரத்த இழப்பு காரணமாக மரணம் ஏற்படவும் வாய்ப்புண்டு

நரம்பு மண்டலம் பாதிப்பின் ஆரம்ப அறிகுறிகளாக நாக்கில் உள்ள சுவை அரும்புகள் பாதிக்கப் படுதல், மற்றும் மேல் இமை பாதிக்கப் படுதல் போன்றவை நிகழும் தொடர்ச்சியாக மற்ற நரம்புகள் பாதிப்பு ஏற்படுகிறது. சுவாச செயலிழப்பு, மூளை இயக்கமின்மை போன்றவற்றால் மரணம் நிகழ வாய்ப்புண்டு.


இவ்வாறான சூழலில் ஒரு பாதிக்கப் பட்டவர் மருத்துவரை அணுகினால் என்ன நடக்கும் என்று பார்ப்போம்.

பொதுவாக மேற்கண்ட ரத்த மண்டலம் அல்லது நரம்ப்பு மண்டலம் அல்லது இரண்டுமண்டலங்களுமே பாதிப்பு ஏற்படும் முன் விஷமுறிவு மருந்து செலுத்துதலே பாதுகாப்புத் தன்மையை அதிகரிக்கும்

கிராமப் பகுதிகளில்தான் பெரும்பாலான பாம்புக்கடிகள் நடக்கின்றன. கிராமங்களில் பெரும்பாலும் ஒவ்வொரு ஒன்றியத்திற்கும் நான்கு அல்லது ஐந்து ஆரம்ப சுகாதார நிலையங்கள் இருக்கின்றன. அந்த நிலையங்களுக்கு ஏதாவது ஒரு வாகனம் பிடித்துத்தான் செல்ல வேண்டும். தற்போது 108 ஆம்புலன்ஸ் இருப்பதால் இது போன்ற சூழல்கள் ஓரளவு சமாளிக்கப் படுகின்றன. சில ஆண்டுகளுக்கு முன்பு வரை போக்குவரத்து என்பதே குதிரைக் கொம்பாக இருந்தது.

பாம்பு கடிபட்டவருக்கு ரத்தத்தில் விஷத்தன்மை பரவியுள்ளதை கண்காணிக்க 20நிமி. ரத்த உரைதல் பரிசொதனை செய்யவேண்டும். அது உரையும் தன்மை சாராசரியாக இருந்தால் கூட மீண்டும் ஒருமுறை ஆறுமணிநேரம் கழித்துச் செய்யவேண்டும். கடைசிக் கட்டத்தில் கடிபட்டவருக்கு செயற்கை சுவாசம் வைக்கும் வரை கூடப் போலாம் என்ற சூழல் இருப்பதால் முதலுதவி மருத்தினைக் கொடுத்து அருகிலுள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பும் நிலைதான் இருக்கிறது. அங்கு தேவையான பரிசோதனைகளைச் செய்து தகுந்த சிகிச்சையும் செய்கிறார்கள்.


இவ்வாறு அனுப்புவது என்பது பாதிக்கப் பட்ட ஒரு நபர்கூட பிரச்சனைகளில் சிக்கிக் கொள்ளக்கூடாது, அனைவரையுமே காப்பாற்ற வேண்டும் என்ற நல்ல எண்ணத்தில்தான்.


போலி மருத்துவரிடம் சென்றால்

போலி பாம்புக்கடி மருத்துவர்கள் ஒரு செடியை வைத்திருக்கிறார்கள். அந்த செடி மிகக் கசப்புத்தன்மை வாய்ந்ததாக இருக்கிறது. அதை சராசரி மனிதர்களால் சாப்பிட முடியாத அளவு கடும் கசப்புசுவையுடன் இருக்கும். அதை கடி பட்டவரிடம் கொடுத்து சாப்பிடச் சொல்லும்போது அவர் சுலபமாக மெல்ல முடிந்தால் அந்த நபரின் உடலில் விஷம் வேலைசெய்ய ஆரம்பித்துவிட்டதென்று அறிந்துகொள்ளமுடியும். (சுவை அரும்புகள் பாதிப்படைந்துவிட்டன அல்லவா)

அடுத்ததாக தூங்கக் கூடாது என்று கூறுவார்கள். மேல் இமை செயல் இழந்துவிட்டால் தானாகவே இமைகள் மூடிக்கொள்ளூம். பாதிக்கப் பட்டவரை தூங்கக்கூடாது என்று பணிக்கும்போது விஷத்தால் பாதிப்பு ஏற்பட்டவர் தன்னையும்மீறி கண்களை மூடிவிடுவார். கடி பட்டவர் கண்களை மூடிவிட்டால் இனி தனது மருத்துவம் ( போலி தான்) பயனளிக்காது என்று கூறி அவரை அனுப்பிவிடுவார். ரத்த இழப்பு அதிகமாக இருந்தாலும் கண்கள் மயக்கத்தில் சுழற்றிக் கொண்டுவரும்.


அதாவது இந்த போலி ஆட்கள் என்ன செய்கிறார்கள் என்றால் விஷத்தால் பாதிக்கப் பட்டவர்கள் என்று தெரிந்து கொண்டுவிட்டால் அவரை நகரத்திற்கு அனுப்பிவிடுகிறார்கள். பொதுவாக இவ்வாறு விஷத்தால் பாதிப்பு ஏற்பட்டபின் நோயாளியை காப்பாற்றுவது என்பது மிக மிக மிக கடினம். விஷத்தால் பாதிக்கப் படாதவரை காப்பாற்றியதாக பெருமையடித்துக் கொண்டிருப்பார். அதை அந்த ஊர் மக்களும் பெருமையாக பேசிக் கொண்டிருப்பார்.


அதாவது விஷத்தால் துளி கூட பாதிக்கப் படாத நபரை அவர் காப்பாற்றியதாக பெயர் வாங்கிக் கொள்கிறார். விஷத்தால் பாதிக்கப் பட்டவரை காப்பாற்ற எந்த நடவடிக்கையும் எடுக்காமல் மரணமடையவிட்டுவிடுகிறார்.

இந்த போலிநபர் கைவிட்டுவிட்டால் அந்த அந்த நபரை எவராலும் காப்பாற்ற முடியாது என்ற வகையில் ஒரு விளம்பரவாக்கியத்தை உருவாக்கி வைத்திருப்பார்கள்.


ஆனால் உண்மையில் அவர் அந்த கடிபட்டவரை முதலிலேயே விஷமுறிவு மையத்திற்கு அனுப்பி இருந்தால் காப்பாற்றி யிருக்க முடியும்.

உண்மையான மருத்த்வரிடம் சென்றால் அவர் முதலுதவிகொடுத்தபின் அவரை அருகிலுள்ள விஷ்முறிவு மைய்த்திற்கு அனுப்பிவிடுவார் எந்த நேரமாக இருந்தாலும். அவருக்கு கிடைக்கும்பெயர் இதெல்லாம் பார்க்கத் தெரியாது அவரிடம் ஏன் போக வேண்டும்?

நமக்கு இன்னொரு கேள்வியும் எழலாம். ஏன் இதுபோன்ற வசதிகளை ஒவ்வொரு கிராமத்திலும் ஏற்படுத்தக்கூடாது என்று சிலர் கேட்கலாம். அடிப்படை முதலுதவிகள் அனைத்து ஆரம்ப சுகாதார நிலையத்திலும் செய்துவிட்டு மேற்கொண்டு எந்த பாதிப்பும் ஏற்படாமல் இருக்க அருகிலுள்ள விஷமுறிவு மையத்திற்கு மிக வேகமாக அனுப்பிவிடுகிறார்கள்.

இதன்காரணம் எந்த கடிபட்டவருமே ஆபத்தில் சிக்கிக் கொள்ளக்கூடாது என்ற எண்ணமே.

ஆனால் மக்களுக்கு அதிகமான திருப்தியைக் கொடுக்கவல்லவராக போலி வைத்தியரே இருக்கிறார்.

எனது தனித் தனிப்பட்ட கருத்து:

உண்மையிலேயே ஒரு மூலிகை எந்தவித கொடிய விஷத்தையும் முறிக்க வல்லதாக இருந்தால் அதை அரசிடம்தெரிவித்து அந்த மூலிகைகளை மிக அதிகமான அளவு தயாரித்து நாட்டில் பாம்பு கடி பட்ட யாருமே உயிரிழக்காச்சூழலை ஏற்படுத்தலாமே

தனித் தனிப்பட்ட கருத்து 2:-

சிலரிடம் அவ்வாறு மூலிகைகள் இருப்பதாகக்கூடத் தோன்றுகிறது. அதை அவர்கள் தங்கள் பரம்பரை ரகசியமாக வைத்துக் கொண்டு தங்கள் பரம்பரை மட்டும் சம்பாதிக்க உபயோகப் படுத்திக் கொண்டு இருக்கிறார்களோ என்ற சந்தேகமும் சில நேரங்களில் எழுகிறது.

அடுத்தடுத்த பகுதிகளில் நாய்க்கடி, நெஞ்சுவலி போலி மருத்துவர்கள் பற்றிப் பார்க்கலாம்.

தமிழீஷில் வாக்களிக்க இங்கு அழுத்தவும்

Read more...

Saturday, June 12, 2010

உங்கள் நண்பர் சிகரெட் பிடிப்பது ஏன்?

அமெரிக்காவுக்கும் இது பொருந்தும், இந்தியாவுக்கும் இது பொருந்தும்








தமிழீஷில் ஓட்டுக் குத்த இந்த இடம்

Read more...

Monday, June 7, 2010

நண்பர் முகிலனின் நட்சத்திரப் பதிவுக்கு ஒரு மறுமொழி

டிஸ்கி:- இது முழுக்க முழுக்க ஒரு பின்னூட்டமே,இதனை எதிர்விளைவு என்பதைவிட விளைவு என்றே கொள்ளலாம். இதில் சண்டை போட நினைப்பவர்கள் ஆக்க பூர்வமான விஷய்ஙகளை மட்டுமே விவாதத்திற்கு கொண்டுவரவும். (சில நபர்களை என்றும் திருத்தவே முடியாது. அவர்களை திருத்துவதைவிட பெறும்பான்மையானவர்களுக்கு சரியான கோணத்தைக் காட்டிவிட்டால் போதும் என்று  எனது ஆசிரியர் கூறுவதுண்டு. எனவே பிரச்சனை சரிசெய்வதைப் பற்றி மட்டுமே பேசவும்.)

இந்திய மருத்துவர்களே!!! ஏன் இப்படி?



என்ற நண்பர் முகிலனின் தமிழ்நட்சத்திர பதிவுக்கு பதிலாக என்பதைவிட பின்னூட்டமாகவே இந்த இடுகைத் தருகிறேன்.

எனக்கு வெளிநாடுகளில் எப்படி என்றெல்லாம் தெரியவில்லை. நமது பகுதியில் நடைபெறும் சில விஷயங்களில் நிகழும் சில தவறான புரிதல்களுக்காக இதை எழுதுகிறேன்.

  அவர் கூறியுள்ள குற்றச்சாட்டுக்களுக்கு முதல் அடிப்படைக்காரணம் மருத்துவருக்கும் அவருக்கும் நடுவில் உள்ள ஒரு திரை. 
//“you should trust us"//  இந்த வாக்கியம் அவரைக் கோபப் படுத்தி இருக்கும். ஆனால் முதலில் அதுதான் உண்மையும் கூட.

குடும்ப மருத்துவர் என்ற ஒரு முறை கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து போனதுதான். இதற்கான அடிப்படைக் காரணம்.  ஒரு பொது மருத்துவரை மட்டுமே நாம் எப்போதும் அணுக வேண்டும். அவரது வழிகாட்டுதலின் பேரிலேயே  சிறப்பு மருத்துவர்களை அணுக வேண்டும்.  பெரும்பாலான நோய்களுக்கு M.B.B.S மட்டுமே படித்த மருத்துவரே போதும். அவரை எந்த சூழலிலும் அணுகும் நிலை இருக்கவேண்டும். சிறப்பு மருத்துவர்கள் தேவையான சூழலில் அவரது ஆலோசனைக்குப் பின்னர் சென்று ஆரம்ப கட்ட தொடர்சிகிச்சைக்குப் பின்னர் தொடர்சிகிச்சைக்கு நமது குடும்ப மருத்துவரை அணுக வேண்டும். சில பல ஆண்டுகளுக்கு பின்னர் குடும்பதில் உள்ள ஒவ்வொருவரின் உடல் நிலை அவர்களின் எதிர்பார்ப்பு போன்ற விஷயங்கள் அவரது மனதில் நன்கு பதிந்து இருக்கும். உங்கள் சந்தேகங்களுக்கு  தெளிவான பதிலை அவர் தருவார். ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு சிகிச்சைக்கும் ஒரு மருத்துவரை அணுகும்போது  அவருக்கு உங்கள் கேள்விக்கான பொருளை அவர் உங்களுக்கு சொல்வதிலும் நீங்கள் புரிந்து கொள்வதிலும் இடைவெளி ஏற்பட்டு தேவையில்லாத குழப்பங்களை ஏற்படுத்திவிடும்.

குறிப்பிட்ட சிறப்பு மருத்துவர் தேவையில்லாத அறுவை சிகிச்சைகளை ஏற்படுத்திவந்தால் உங்கள் குடும்ப மருத்துவர் அந்த குறிப்பிட்ட மருத்துவருக்கு எந்த நோயாளியையும் பரிந்துரைக்க மாட்டார். சில பல ஆண்டுகள் நீங்களும் அவரோடு பழகிவிட்டால்  அவரது நம்பகத்தன்மையும் உங்களுக்கு புரிந்து விடும்.   எனவே தைரியமாக அவர் சொல்வதைக் கேட்கலாம். நம்பலாம்.


சில நோயாளிகள் காய்ச்சல் என்று வருவார்கள். கூட தலைவலி, சளி, இருமல் போன்ற தொந்தரவுகளை சொல்லிவிட்டு  மருத்துவரிடம் எனக்கு என்ன வியாதி டாக்டர் என்று கேட்பார்கள். இந்தக் கேள்விக்கு நேரடியாக பொருள் எடுத்துக்கொண்டு நீங்கதான சொன்னீங்க சளி, காய்ச்சல் என்று அவரிடம் கோபப்படுவதில் அர்த்தம் இல்லை.   நோயாளி எதிர்பார்ப்பது  தனக்கு வந்திருக்கும் சளிக்காய்ச்சல் என்பது சாதாரண வகையா? அல்லது ஃப்ளூ, காச நோய் வகையா? என்பதான கேள்வி.  இது போன்ற புரிதல்களில் ஏற்படும் இடைவெளி குடும்ப மருத்துவரை அணுகும்போது மட்டுமே சரி செய்ய முடியும்.


Infectious diseaseகளில் ஒன்று  வயிற்றுப் போக்கு அதற்கு நோயாளியைத் தனிமைப் படுத்துதல் அவசியம் அதனால் உறவினர்களுக்கு அனுமதி மறுக்கப்படுவது உண்டு. இப்போதெல்லாம் பிரசவ அறைகளுக்குக் கூட துணைக்கு ஒருவரை அனுமதிக்கிறார்கள். அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் இந்த நிலை நடைமுறைக்கு வந்து சில ஆண்டுகள் ஆகிவிட்டன.  தவிரவும்  மருத்துவரின் பரிசோதனை என்பதுதான் இங்கு நோயாளியின் சிகிச்சையை நிர்ணயிக்கும். கண்களைச் சுற்றி உள்ள சுருக்கங்களின் தன்மை, வயிற்றுத் தோல் எடுத்துவிட்டால் பழைய நிலைக்கு போக ஆக் எடுத்துக் கொள்ளும் நேரம். நாக்குவறட்சி, நாடித்துடிப்பு போன்றவையே உடனடி சிகிச்சையை தீர்மானிக்க முடியும்.

இப்`போதெல்லாம் broad spectrum antibiotics பல உபயோகத்திற்கு வந்துவிட்டன. சில மருந்துகளை கொடுத்தாலே அனைத்துவகையான  பாக்டீரியா, வைரஸ் ஆகியவை எதிர்க்கும் சக்தி கிடைத்துவிடும்.  மலத்தை எடுத்து staining, culture and sensitivity  செய்வதால் ஆகும் கால தாமதம் மற்றும் வீண் செலவுகளை  மருத்துவரின் அனுபவம் தவிர்த்து விடும்.  எனவே மருத்துவரை நம்பித்தான் ஆக வேண்டும். அதற்கு அவரோடு நீண்ட காலப் பழக்கம் இருந்தால் மட்டுமே சாத்தியம்.

நோயாளிக்கு அளிக்கப் படும் சிகிச்சையை அவருக்கோ அவரது உறவினருக்கோ சொல்லிவிட்டுத்தான் சிகிச்சையை செய்வார்கள். ஆனால்  நோயாளியின் ஒவ்வொரு உறவினரும் வந்து கேட்டுக் கொண்டே இருக்க திரும்பவும் முதலில் இருந்து சொல்ல வேண்டிய சூழல் சிகிச்சை அளிப்பதை கால தாமதப் படுத்திவிடும்.  தவிர நமது ஊரில் ஒவ்வொரு நோயாளிக்கும் பலர் துணைக்கு வருவார்கள்.  உள்நோயாளி என்றால்  பெரிய கூட்டமே வந்து நிற்கும்.

ஒவ்வொரு நோயாளியும் வீட்டிற்குத் திரும்பும்போது தனக்கு அளிக்கப் பட்ட சிகிச்சைக்கான சுருக்கத்தையும்,  கட்டிய பணத்திற்கான ரசீதினையும் கேட்டுப் பெற வேண்டும். இது அவர்களது அடிப்படை உரிமை. மற்றும்  சமூகத்திற்கு ஒவ்வொருவரும் ஆற்ற வேண்டிய கடமை அப்போது மட்டுமே தரத்தினை நன்கு உயர்த்த முடியும்.



//அமெரிக்காவில் வசிக்கும் இந்தியக் குழந்தைகள் பலர் மருத்துவம் படிப்பது என்பதை ஆசையாக, குறிக்கோளாகக் கொண்டிருப்பர். நான் பல குழந்தைகளிடம் ஏன் என்று கேட்டிருக்கிறேன். அதற்கு அவர்களின் பதில் - “அப்போது தான் நிறைய சம்பாதிக்க முடியும்” என்பதாகவே இருக்கும்//


இந்த வரியைத் தொடர்ந்து எழுதப்பட்ட வரிகள் மிகவும் உண்மை. அப்படியே இந்த இடுகை நண்பரால் எழுதப் பட்ட ஒன்று அதையும் படித்துவிட்டு மீண்டும்  மேலே உள்ள வரிகளை கவனியுங்கள்.

உண்மையில் மருத்துவம் படித்த பலரும் பலவகைப் பொறியியில் துறைகளில் பணிபுரியும் பலரையும் விட குறைவாகவே சம்பாதிக்கிறார்கள்.


//பின்னோக்கி said... அப்புறம் இந்த ஸ்பெஷலிஸ்ட்கள் தொல்லை தாங்கலை.

அவர்கள் நம்மை மனிதனாக பார்ப்பதில்லை. கண் டாக்டர், கண்னை மட்டுமே கவனிக்கிறார்.///

குடும்ப மருத்துவர்   உங்களைத் தெளிவாக அறிவார்.  அவர் சொல்லும் கண்மருத்துவரிடம் சென்றுவிட்டு பின்னர் முடிவு செய்யும் உரிமையை அவருக்கு தரும்போது பிரச்சனை வராது.

//அமுதா கிருஷ்ணா said... ( யார் சார் 5 முதல் 8 வருடம் கஷ்டப் பட்டு படித்து விட்டு கிராமத்தில் குறைந்த சம்பளத்தில் வேலை செய்ய ஒத்துக் கொள்வர்)//

தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளில் பணிநியமணம் செய்யப் பாட்ட 3000க்கும் மேற்பட்ட மருத்துவர்களில் கிராமங்களுக்கு செல்ல மறுத்தவர்கள் விரல்விட்டு எண்ணிவிடலாம். இன்னும் பணிநியமணத்திற்காக காத்துக் கொண்டு இருப்பர்கள் எண்ணிக்கை 2000க்கும் மேல்.


//கண்ணா.. said... நமக்கான விளக்கங்கள் தர பொறுமை இல்லாத டாக்டர்கள்தான் நானும் அதிகம் சந்தித்தது. அவர்கள் விளக்கங்கள்தான் தரவில்லையே தவிர சிகிச்சை நல்ல முறையில் அளித்தனர்.//

குடும்ப மருத்துவர் என்று வந்து விட்டால் உங்கள் எதிர்பார்ப்புக்கேற்ப பதில் தந்து இருப்பார்.
//கோவி.கண்ணன் said...
இந்தியாவில் மருத்துவர்களுக்கு பொதுமக்கள் மீது என்றுமே அலட்சியம் தான். ஒரு சில விதிவிலக்குகள் உண்டு //
சிலர் இருக்கிறார்கள் ஆனால் ஒட்டுமொத்தமாக தவறான புரிதல். நோயாளிகளை அலட்சியப் படுத்தியவர்களை நோயாளிகள் அலட்சியப் படுத்தி விடுவார்கள். பின்னர் அவர் வீட்டில் சும்மா அமர்ந்திருக்க வேண்டியதுதான். ஊரில் மருத்துவர்களுக்கா பஞ்சம்.
======================================================

எனது நோயாளி ஒருவர். அவருக்கு அடிக்கடி நெஞ்சுவலி வருவதுண்டு. அவருக்கு பல விதமான பரிசோதனைகள் செய்து பார்த்து விட்டோம். இருதய மருத்துவர்கள் சிலரிடமும் காட்டிவிட்டோம். நெஞ்சக நோய் மருத்துவரிடமும் காட்டிவிட்டோம். சில காலங்களுக்குப் பின் அவருக்கு சில மாதங்களுக்கு ஒருமுறை நெஞ்சுவலி வரும். வலிநிவாரணி ஊசி ஒன்று பத்துரூபாய்க்குள் வரும். அதைப் போட்டால் சரியாகிவிடும். அவ்வப்போது போட்டுவிடுவேன். (இந்த முடிவு பல சிறப்பு மருத்துவர்களின் ஆலோசனைகளின்படி எடுக்கப் பட்டது).அந்த ஊசி மருந்தால் பொதுவான நெஞ்சுவலிகள் கேட்காது. வயிற்றுப் புண் இருப்பவர்களுக்கு அதிகமாக போடக்கூடாது. இருதய நோய் காரர்களுக்கும் அதிகமாக போடக்கூடாது. 



ஒருமுறை நான் எனது கிளினிக்கில் பிறிதொரு நபருக்கு தையல் போட்டுக் கொண்டு இருந்தபோது அவரை நெஞ்சுவலியோடு அழைத்துவந்தனர். உடனடியாக நான் கையுறைகளை களைந்துவிட்டு அவருக்கு போட வேண்டிய மருந்தினைப் போட்டுவிட்டு அவரைப் படுக்க சொல்லிவிட்டு நான் தையல் போட கையுறைகளை அணிந்து கொண்டிருந்தபோது அவரது சம்மந்தி வந்து அவருக்கு என்ன வியாதி என்று கேட்டார். சாதாரண நெஞ்சு வலிதான். சிறிது நேரத்திற்குப் பின் சரியாகிவிடும் என்று சொல்லிவிட்டு தையல்போடும் இடத்திற்கு சென்றேன். மீண்டும் மீண்டும் கேள்விகள் வந்து கொண்டிருந்தன.
அங்கு பாதித் தையல். ரத்தக் கசிவு இல்லாமல் இருக்க தற்காலிகமாக பஞ்சுமுதலியவை வைத்து இருந்தேன். அவசரம் காரணமாக அவரது மகனிடம் கேளுங்கள் அல்லது சில நிமிடங்களில் இவரே சரியாகிவிடுவார். அவரே சொல்லுவார் என்று சொல்லிவிட்டு தையல் போட ஆரம்பித்துவிட்டேன். போகும்போது சொல்லிக்கொண்டுதான் போனார்கள்.



சில மாதங்கள் களித்து அவருக்கு நெஞ்சு வலி வந்தபோது 
நான் சொன்ன பதிலால் கொதிப்படைந்த சம்பந்தி புதிய ஒருவரிடம் அழைத்துச் சென்று பின்னர் முதலில் இருந்து எல்லாம் தொடங்கி சில மாதங்கள் வரை தொடர்ச்சியாக அவ்வப்போது வலியுடனே இருந்தார். பின்னர் என்னிடமே திரும்பிவந்தனர். 


அதில் ஏற்கனவே உள்ள பரிசோதனைகளை மீண்டும் செய்து கொண்டே இருந்திருக்கின்றனர். சிறப்பு மருத்துவராக இருக்கும்போது அவரது துறையில் சிறப்பிடம் பிடித்துவிட்டால் மற்ற துறைகளில் அவர்கவனம் செலுத்த போதிய கால அவகாசம் இல்லை என்ற சூழல் வந்து விடுகிறது. பல துறைகளையும் சந்தித்து நோயாளிக்கு முழுமையான சிகிச்சை கிடைக்க பொது மருத்துவர் குடும்ப மருத்துவரால் மட்டுமே முடியும்.


குடும்ப மருத்துவரான  நான் இருதய தொந்தரவோடு, நெஞ்சக நிபுநர், எலும்பு மருத்துவர், மற்றும் மனநல மருத்துவரையும் அணுகி இருந்தேன். நோயாளிக்கும் அவரது மகனும் இது தெரியும்.  


இருதய மருத்துவரை அணுகி அவர்கள் இருதய தொந்தரவு ஏதும் இல்லை என்று உறுதி அடையும் வரையிலான அதிகப் படியான பரிசோதனைகளை செய்து கொண்டே இருந்திருக்கிறார்கள். இந்த மருந்துகள் போதும் என்று இருதய நிபுநர் சொல்லியும்கூட  வலி குறைய வில்லை என்பதற்காக மேலும் மேலும் பரிசோதனைகள் போய் கொண்டே இருந்திருக்கின்றன.  பின்னர் இருதய நிபுநரே  அனுப்பிய பின்னர் திரும்பவும் என்னிடம் வந்திருக்கின்றனர். அவர்கள் செய்திருந்த முதலில் செய்த பரிசோதனைக் காகிதங்களில் பாதியை த் தொலைத்து வேறு இருந்தனர்.


தமிழீஷ் ஓட்டுக்கு

Read more...
அரசு மருத்துவர்கள் மற்றும் சுகாதார துறையின் பிற அலுவலர்களுக்கு உதவக்கூடிய தளங்களின் செய்தியோடைகள் இங்கு கீழே தரப்பட்டுள்ளன

Target Your PG Seat

Target PG Google Group

டாக்டர்கள் தகவல் இணையம்...

Medical, Legal, Medicolegal Information for Doctors and Lawyers

MCQsOnline - Online Collection of MCQs of Medical PG Entrance Exams

After MBBS

TNGDA Library

Tamil Nadu Government Doctors Association (TNGDA) Helpline

Doctors' Association for Social Equality

GRDA

  © Blogger template Blogger Theme II by Ourblogtemplates.com 2008

Back to TOP