Thursday, July 23, 2009

துவைத்துக் காயப் போடப் பட்ட பெண்

பனிரெண்டு வய்து சின்னப் பெண் அவர். துவைத்துக் காயப் போட்டது போல இருந்தார். அவரை அவரது தாயார் மற்றும் சில உறவினர்கள் மருத்துவமனைக்கு அழைத்து வந்திருந்தனர்.

சார், காலைல பாப்பா மயக்கம் போட்டிருச்சு. உறவினர் தான் சொன்னார். தாயார் கேவிக் கேவி அழுது கொண்டிருந்தார்.

மருத்துவர் பார்த்தார். வெறும் மயக்கம் மாதிரி தெரியவில்லை. தேவையான முதலுதவி செய்யப் பட்டன.ஆய்வகப் பரிசோதனைகளும் மருத்துவ பரிசோதனையும் செய்யப் பட்டன, அந்தப் பெண் ரத்தச் சோகையால் பாதிக்கப் பட்டிருந்தது கண்டறியப் பட்டது. மேலும் பலராலும் அடிக்கப் பட்டிருந்தது கண்டறியப் பட்டது.

மருத்துவர் சொன்னார். அம்மா, பாப்பாவை நெரயாப் பேர் அடிச்ச மாதிரி தெரியுது. இது போலீஸ் கேஸ் ஆகும். காலைலிருந்து என்ன நடந்ததுன்னு சொன்னீங்கன்னா, எங்களுக்கு உதவியாக இருக்கும்.

பெண்ணின் தாயார். இன்னும் கேவி கேவி அழ ஆரம்பித்தார்.

அந்த நேரத்தில் மூத்த மருத்துவரும் வந்து சேர்ந்தார்.

அவரும் குழந்தை மருத்துவரின் கருத்தினை ஆமோதித்தார்.

சார். பாப்பாவுக்கு பேய் பிடிச்சிருந்தது. பேய் விரட்டிட்டோம். நேத்தும் அந்த குணம் லேசா தெரிஞ்சது. அதனால எங்கவீட்டு பொம்பளங்க செருப்பால அடிச்சிருக்காங்க. அவங்கப்பன் செத்தப்ப் அபுடிச்ச போய் நேத்துத்தான் விலகியிடுக்கு. கஷ்டப் பட்டு விரட்டியிருக்கோம்.

நீங்க ஒண்ணுமே பண்ணாம சும்மா ரத்தம் எடுக்கறேன். படம் எடுக்கறேண்ணு போக்கு காட்டீட்டு இருக்கீங்க. குளுக்கோஸ் போட்டா தெம்பா இருக்கும்னும் பெரியவங்க சொன்னாங்க. அதுக்குத்தான் வந்தாம். நீங்க எண்ணடா


சொரக்காய்க்கு உப்பில்லேன்னு கதை பேசிட்டு இருக்கீங்க.

ஒரு இளம் பெரியமனிதர் ஆக்ரோசமாக பேசி முடித்தார். ஒரு கட்சியின் வேட்டி மற்றும் துண்டு அணிந்திருந்தார்.

இங்க பாருப்பா... பொண்ணுக்கு ரத்தச் சோகை இருக்கு. தவிரவும் தந்தை இழந்த சோகம் வேறு. அதனால் மனஅமைதி இன்மை டெப்ரெஷன் ஆகியவை வந்திருக்கு. சரியான முறையில் வைத்தியம் பார்த்தால் சரியாகிவிடும். நீங்க இப்படியெல்லாம் பண்ணிட்டு இருந்தால் உயிருக்கு ஆபத்தாக மாறிவிடும்

முதிய மருத்துவர் மிக நீண்ட நேரம் பேசினார்.

பேச்சின் முடிவில் அவர் சொன்னதை பெரும்பாலோனோர் ஏற்றுக் கொண்டது போல இருந்தது. அந்த பெண்ணிற்கு ரத்தம் ஏற்றப்பட்ட்து. மன நல ஆலோசனையும் சிகிச்சையும் வழங்கப் பட்டது.

சார் சின்னப் பொண்ணப் போட்டு இப்படி அடிச்சிருக்காங்க. நீங்க அமைதியா பேசிட்டு இருக்கீங்க ஏ.ஆர். எண்ட்ரி போட்டுவிட்டு போலீசுக்கு தகவல் கொடுங்க சார். இதெல்லாம் அவங்க விசாரிச்சாத்தான் சரியா வரும்.

இளம் மருத்துவர். உணர்ச்சி வசப் பட்டு பேசிக் கொண்டிருந்தார்.

யாரு மேலப்ப்பா புகார் கொடுக்க முடியும். அந்தப் பொண்ணுக்கு ஆதரவு இவங்கதான். இவங்களுக்கு தண்டனை வாங்கிக் கொடுத்துட்டா அந்த பெண் அனாதரவா மாறிடும்ப்பா . பாவம் அறியா ஜனங்க.., நாமதான் அவங்களுக்கு புரிய வைக்க வேண்டும்.
முதிய மருத்துவர் அதற்கும் ஒரு பதில் கொடுத்தார்.

அந்தப் பெண்ணுக்கு சில நாள் இடைவெளியில் மீண்டும் ரத்தம் போடப் பட்டது. சிலவாரங்கள் உள்நோயாளியாக இருந்து சிகிச்சை பெற்று குணமடைந்து வீட்டிற்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

சில மாதங்கள் கழித்து





அந்தப் பெண் அதே உடல் போல அரை மயக்க நிலையில் உடலெல்லாம காயமான நிலையில் அழைத்துவரப் பட்டார்.

ஏம்ப்பா அன்னைக்கு அவ்வளவு தூரம் சொல்லி சரி பண்ணி அனுப்புனா திரும்பவும் அப்படியே பண்ணி கூட்டிட்டு வந்திருக்கீங்களே..,

மருத்துவர் வருத்தத்துடன் கேட்டார்.

நீங்க சொன்னபடித்தான் டாக்டர் செஞ்சிருக்கோம்.

உடம்புல ரத்தமே இல்லை அப்படின்னும் ரத்தமெல்லாம் போட்டுவிட்டீங்க திரும்பவும் ரத்தச் சோகை ஆகிப்போச்சு.

(வீட்டுக்கு அனுப்பிய சில நாட்கள் கழித்து தொடர் சிகிச்சையை நிறுத்தி அவர்களாகவே நிறுத்தி விட்டிருந்தனர்)

நீங்கதான் ஒழுங்கா வைத்தியம் பார்க்கணும்னு சொன்னீங்க. அதுதான் கேரளா கூட்டிட்டு போய் அங்கிருக்கிற வைத்தியரிடம்(மாந்தீரகரிடம்) போய் பார்த்தோம். உடம்பில மூணு ரத்த காட்டேரி இருந்ததாம். அவரே சொன்னார். அம்பதாயிரம் செலவு பண்ணி அந்த ரத்தக் காட்டேரியெல்லாம் எடுத்துட்டோம். இப்ப நீங்க ரத்தம் போடுங்க டாக்டர் புள்ள நல்லாயிடும்.

-----------------------------------------------------------------------------

தமிழீஷில் ஓட்டுப் போட இங்கு அழுத்துங்கள்

4 comments:

ஆ.ஞானசேகரன் July 23, 2009 at 6:13 PM  

என்னத்த சொல்லுரது ....

jothi July 23, 2009 at 10:25 PM  

இது மாதிரி நிறைய பாத்துருப்பீங்களே,..மக்கள் சேவகம் மகேசன் சேவகம்,

Anonymous,  July 23, 2009 at 10:48 PM  

Uzhakil madayanugal athigam vazhum nadu India.

I think, India never change itself foolishness.

I don't proved to be and Indian.

Naadi July 24, 2009 at 1:58 AM  

Mr. Anonymous,

Either write your comment in English or Tamizh.

It would be better if you could write it in Tamizh as your English is horrible and I cannot understand what you want to say.

Sir,

I have been reading all your articles and this one reflects the idiosyncrasy of a few people.

One can only feel sorry for them as they are incorrigible.

அரசு மருத்துவர்கள் மற்றும் சுகாதார துறையின் பிற அலுவலர்களுக்கு உதவக்கூடிய தளங்களின் செய்தியோடைகள் இங்கு கீழே தரப்பட்டுள்ளன

Target Your PG Seat

Target PG Google Group

டாக்டர்கள் தகவல் இணையம்...

Medical, Legal, Medicolegal Information for Doctors and Lawyers

MCQsOnline - Online Collection of MCQs of Medical PG Entrance Exams

After MBBS

TNGDA Library

Tamil Nadu Government Doctors Association (TNGDA) Helpline

Doctors' Association for Social Equality

GRDA

  © Blogger template Blogger Theme II by Ourblogtemplates.com 2008

Back to TOP