Wednesday, July 29, 2009

கீரைகளின் பயன்கள்

* கீரைகள், காய்கறிகள் உடல் வளர்ச்சிக்கும் நல்ல ஆரோக்கியத்திற்கும் மிகவும் அவசியம். இவை அதிகளவில் முக்கிய சத்துக்களை கொண்டுள்ளன

* இந்தியாவில் பல வகை கீரைகள் உணவாக உட்கொள்ளப்படுகிறது. அவற்றில் மிகவும் பெயர் பெற்றவை, அறக்கீரை, பாலக் கீரை தண்டு கீரை, புளிச்சக் கீரை, வெந்தயக்கீரை, முருங்கக் கீரை மற்றும் புதினா தழை போன்றவையாகும்


* கீரைகள் குறிப்பாக இரும்பு மற்றும் பிற தாதுப்பொருட்களை அதிகளவில் கொண்டுள்ளன. இரும்புச் சத்து பற்றாக்குறை, இரத்த சோகையினை ஏற்படுத்துகிறது. இது கர்ப்பிணி பெண்கள், தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் மற்றும் குழந்தைகளில் ஏற்படும் பொதுவான உடல்நல அசெளகரியமாகும்


* கீரைகள் தினமும் உணவில் சேர்த்துக்கொள்வதின் மூலம், இரத்த சோகை வருவதை தடுத்து, நல்ல உடல் நலனை பெறலாம்


* கீரைகள் சண்ணாம்புச் சத்து, பீட்டா கரோடின், வைட்டமின்-சி போன்றவற்றை அதிகம் கொண்ட முக்கிய மூலப்பொருளாகும்


* இந்தியாவில் ஒவ்வொரு வருடமும் ஐந்து வயதிற்குட்பட்ட சுமார் 30000 சிறு பிள்ளைகள் வைட்டமின் ஏ குறைப்பாட்டினால் கண்பார்வை இழக்கும் நிலை ஏற்படுகிறது. கீரைகளில் உள்ள கரோடின் எனும் பொருளானது உடலில் வைட்டமின் ஏ வாக மாறுவதால், பார்வை இழக்கும் நிலை தடுக்கப்படுகிறது

* கீரைகளிலுள்ள கரோடின்களை பாதுகாக்க, நீண்ட நேரம் வேகவைப்பதை தவிர்க்க வேண்டும். அதிக நேரம் சமைப்பதினால் கீரைகளில் உள்ள கரோடின் எனும் சத்துப்பொருள் இழப்பு ஏற்படுகிறது

* கீரைகள் பி-காம்ளக்ஸ் வைட்டமின்களையும் கொண்டுள்ளது

உணவில் உட்கொள்ள வேண்டிய கீரைகளின் பரிந்துரைக்கப்பட்ட அளவு

*
பெண்களுக்கு 100 கிராம் ஒரு நாளைக்கு
*
ஆண்களுக்கு 40 கிராம் ஒரு நாளைக்கு
*
பள்ளி செல்லும் சிறு பிள்ளைகள் (4-6 வயது) க்கு 50 கிராம் ஒரு நாளைக்கு
*
10 வயதிற்கு மேற்பட்ட ஆண்கள் பெண்கள் இருபாலருக்கும் 50 கிராம் ஒரு நாளைக்கு



* கீரை வகைகள் சிறுப் பிள்ளைகளில் வயிற்றுப்போக்கினை ஏற்படுத்துகின்றன என நம்பப்படுகிறது. எனவே பெரும்பாலான தாய்மார்கள் கீரை உணவை பிள்ளைகளுக்கு கொடுக்காமல் தவிர்க்கின்றனர். பாக்ட்டிரியாக்கள்/கிருமிகள்/சிறு பூச்சிகள் மற்றும் பிற மாசுப்பொருள்கள் தண்ணீர் அல்லது மண்ணின் மூலமோ கீரைகளை மாசுப்படுத்துகிறது. எனவே கீரைகளை நன்கு கழுவி சுத்தம் செயயாமல் உணவில் சேர்க்கும்போது வயிற்றுப்போக்கினை ஏற்படுத்துகிறது. எனவே வயிற்றுபோக்கு ஏற்படுவதை தடுக்க அணைத்து கீரைகளையும் சமைப்பதற்கு முன்பு நன்கு தண்ணீரில் கழுவி சுத்தம் செய்ய வேண்டும்


* கீரைகளை நன்கு சமைத்து, மசித்து கீரையிலுள்ள நார் பொருட்களை நீக்கின பின்னரே சிறு குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டும். கீரையில் உள்ள சத்துக்கள் பயனுள்ளதாக அமைய, நீண்ட நேரம் சமைப்பதை தவிர்க்க வேண்டும். அதே நேரத்தில் கீரைகளை சமைக்க பயன்படுத்தும் தண்ணீரை கொட்டி விடக் கூடாது. கீரைகளை சமைக்கும் பாத்திரங்களை சமைக்கும்போது மூடிவைப்பதில் கவனம் செலுத்த வேண்டும். கீரைகளை வெய்யிலில் உளர்த்தக் கூடாது. அப்படி செய்தால் அவற்றில் உள்ள கராட்டீன்கள் வீனாகி விடும். கீரைகளை பொறிப்பதையும் தவிர்க்க வேண்டும்


* கீரைகளில் உள்ள சத்துக்களின் மதிப்பினை அவற்றின் விலைகளை கொண்டு நிர்ணயிக்க முடியாது. சில கீரைகள் மலிவான விலையில் கிடைப்பதனால், அவற்றில் உள்ள சத்துக்களின் மதிப்பை குறைத்து மதிப்பிட செய்து அவற்றை ஒதுப்கி விடுகின்றனர். எனவே சில கீரைகள் (உம், முருங்கை) விலை மலிந்து காணப்பட்டாலும், அவற்றில் உள்ள சத்துக்களின் மதிப்பு மிக அதிகம் மற்றும் அவை அனைவருக்கும் தேவை


* கீரை வளர்ப்பினை அவசியம் ஊக்கப்படுத்த வேண்டும். அப்படி செய்வதன் மூலம், ஆண்டு முழுவதும் கீரைகள் கிடைக்கும் நிலை உருவாகும். வீட்டுத் தோட்டங்கள், வீட்டின் மாடியில் தோட்டங்கள் ஏற்படுத்துவது, பள்ளி தோட்டங்கள் போன்றவைகளில் கீரைகளை வளர்த்து பயன் பெறலாம். வீட்டின் பின்புறத்தில் முருங்கை மரம், அகத்தி கீரை செடிகள் போன்றவற்றை வளர்ப்பதின் மூலம் மரங்களிலிருந்து கிடைக்கும் கீரைகளை மிக சுலபமாக மற்றும் தொடர்ந்து பெற்றுக்கொள்ளலாம்

தகவல் : தேசிய ஊட்டச்சத்து மையம், ஐதராபாத் -500007 இந்திய


தமிழீஷில் ஓட்டுப் போட இங்கே க்ளிக்குங்கள்

அரசு மருத்துவர்கள் மற்றும் சுகாதார துறையின் பிற அலுவலர்களுக்கு உதவக்கூடிய தளங்களின் செய்தியோடைகள் இங்கு கீழே தரப்பட்டுள்ளன

Target Your PG Seat

Target PG Google Group

டாக்டர்கள் தகவல் இணையம்...

Medical, Legal, Medicolegal Information for Doctors and Lawyers

MCQsOnline - Online Collection of MCQs of Medical PG Entrance Exams

After MBBS

TNGDA Library

Tamil Nadu Government Doctors Association (TNGDA) Helpline

Doctors' Association for Social Equality

GRDA

  © Blogger template Blogger Theme II by Ourblogtemplates.com 2008

Back to TOP